Friday, December 31, 2010

இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக் கொடுத்து இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி
விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்
கொடுத்து இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.
கடந்த 23-ம் தேதி கொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு..செயலாளர் பெரியண்ண அரசு தலைமையில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும்
விழா நடந்து கொண்டிருந்தது.அப்போது பயனாளிகள் பட்டியலில் இருந்து
விஜயகுமார் என்ற பெயர் வாசிக்கப்பட்டதும்,கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச்
சேர்ந்த விஜயகுமார் என்ற விவசாயி மேடையேறினார்.
அவருக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கிக் கொண்டார்.ஒரு
விநாடி அங்கே நின்றவர்,டி.வி.யை பெரியண்ண அரசுவிடமே திருப்பிக்
கொடுத்துவிட்டு,கூடவே ஒரு மனுவையும் கொடுத்தார்.ஏதோ கோரிக்கை மனு
கொடுக்கிறார் என்று அரசுவும் சாதாரணமாக வாங்கிப் படித்தார்.
அதில்மனிதனுக்கு டி.வி. என்பது பொழுதுபோக்கு சாதனம்தான். ஆனால் அதைவிட
முக்கியமானது உணவு, உடை, உறைவிடம். தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள்
இருக்கின்றன. இவை தன்னிறைவு அடைந்து விட்டனவா? குறிப்பாக, விவசாயிகளைப்
பாதிக்கும் மின்சாரத்துறை தன்னிறைவு அடைந்து விட்டதா?
துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகு மிதமிஞ்சிய பணத்தில் இந்த
டி.வி.யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இதற்கு மட்டும்
எங்கிருந்து நிதி வந்தது?இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள்
தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள். டி.வி. வழங்கும் பணத்தை வைத்து
விவசாயிகளுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.
தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான
மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒரு மாவட்டத்தையாவது தன்னிறைவு
அடையச் செய்திருக்கலாம். இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமான
மருத்துவம், கல்வி, மும்முனை மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை
வழங்கினாலே போதும்.
அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி.வி.முதல் கார் வரை அனைத்தையும்
வாங்கிக் கொள்வோம். எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே பூர்த்தி செய்து
தன்னிறைவு அடைந்து விடுவோம்.
விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர் பற்றாக்குறை, லஞ்சம்,ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக
நான் எப்படி டி.வி. பார்க்க முடியும்? எனவே எனக்கு இந்த டி.வி. வேண்டாம்.முதல்வர் கருணாநிதி மீது எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும்
உள்ளது.
எனவே,இந்த டி.வி.யை அவருக்கே அன்பளிப்பாகக் கொடுக்க இந்த சந்தர்ப்பத்தைப்
பயன்படுத்திக் கொள்கிறேன்.அவர் இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என் மனம்
மேலும் வேதனைப்படும். அரசு மற்றும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச்
செய்தாலே போதும். இந்தியா வல்லரசாகிவிடும்என்று நீண்டது அந்த மனு.
இதைப் படித்த பெரியண்ண அரசு முகத்தில் ஈயாடவில்லை.அருகில் இருந்த
அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள். என்றாலும் அந்த மனுவையும் டி.வி.யையும்
வாங்கி வைத்துக் கொண்டு மேலும் பரபரப்பை உண்டாக்காமல் விஜயகுமாரை அனுப்பி
வைத்தார் அரசு.
இதன் பின்னர் விஜயகுமாரிடம் பேசினோம்.

நான் ஒரு சாதாரண விவசாயி. விவசாயிகள் எல்லாம் மின்வெட்டால்
பாதிக்கப்பட்டு விளைநிலத்தை ரியல் எஸ்டேட்காரன்கிட்ட வித்துட்டு நகரத்துல
போய் கூலி வேலைக்கும்,ஹோட்டல் வேலைக்கும் அல்லாடிக்கிட்டிருக்கான்.
இந்த நிலை, நாளைக்கு எனக்கும் என் பிள்ளைகளுக்கும் வரப் போகிறது.எதிர்காலத்தை நினைத்து மனம் கலங்கிப் போய் இருக்கிறது. ராத்திரியில
படுத்தால் தூக்கம் வர மாட்டேங்குது.
சாராயத்தை குடிச்சுட்டு, ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும்
வர்க்கம் சோம்பேறியாகிக்கிட்டிருக்கு.ரொம்ப சீப்பா கணக்குப் போட்டாலும்
ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க. தமிழ்நாட்டில் ரெண்டு கோடி
குடும்ப அட்டைகள் இருக்கு.2கோடி குடும்ப அட்டைக்கும் டி.வி. கொடுத்தால்
இருபது லட்சம் கோடி செலவாகும்.இதை வைத்து 88 துறைகளையும் தன்னிறைவு
அடையச் செய்தாலே போதுமே.
கனத்த இதயத்தோடும், வாடிய வயிறோடும் இருக்குறவனுக்கு எதுக்கு டி.வி.?அவன் பொழப்பே சிரிப்பா சிரிக்கும்போது அவன் டி.வி. பாத்து வேற
சிரிக்கணுமாக்கும்.அதுனாலதான் நான் டி.வி.யை திருப்பிக் கொடுத்தேன்’’என்றார்.
டி.வி.யை திருப்பிக் கொடுத்த கையோடு முதல்வர் கருணாநிதிக்கு கடிதம்
ஒன்றையும் எழுதியிருக்கிறார் விஜயகுமார்.
அந்தக் கடிதத்தில் கொத்தமங்கலத்துக்கு வந்த டி.வி.க்கள் 2519. அதில்
2518
மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். எனக்கான ஒரு டி.வி.யை எனது அன்புப்
பரிசாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்என்று குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ்
செய்துள்ளார்.
மக்களிடம் இருந்து சுரண்டப்படும் பணத்தில் மக்களுக்கே கொடுக்கப்படும்
லஞ்சம் தான் இலவசங்கள் என்பதை விவசாயி விஜயகுமார் பொட்டில் அடித்தாற்போல்
தெளிவுபடுத்தியுள்ளார். மக்களை சோம்பேறிகளாக்கும் இலவசத்துக்கு எதிராக
போர் தொடுத்திருக்கும் அவரை பாராட்டத்தான் வார்த்தைகளே கிடைக்கவில்லை...!

Thursday, November 4, 2010

கடத்தல் வாலிபர்கள் பிடிபட்டது எப்படி? பின்னணி தகவல்கள்

சென்னை :  அண்ணாநகரைச் சேர்ந்த பள்ளி மாணவன் கடத்தப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் இருவரும் பிடிபட்டது எப்படி என்ற பின்னணி தகவல்கள் தெரியவந்துள்ளன.

சென்னை, அண்ணாநகர், "இசட் பிளாக்' 7வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ்; கிரானைட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள். மகன் கீர்த்திவாசன் (13); முகப்பேர் பகுதியில் உள்ள டி.ஏ.வி., பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த திங்கள் கிழமையன்று பள்ளிக்கு சென்ற கீர்த்திவாசன், மாலை 3 மணிக்கு காரில் வீடு திரும்பினான். காரை, டிரைவர் கோவிந்தராஜ் என்பவர் ஓட்டினார். கார் பள்ளி அருகில் இருந்து கிளம்பிய போது, கண்ணிமைக்கும் நேரத்தில் அதில் ஏறிய இரு வாலிபர்கள், கத்தியைக் காட்டி டிரைவர் கோவிந்தராஜை கீழே தள்ளிவிட்டு கீர்த்திவாசனை காரில் கடத்திச் சென்றனர். டிரைவர் கோவிந்தராஜ் உடனடியாக தனது முதலாளி ரமேஷிடம் தகவல் தெரிவித்தார். ரமேஷ், இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தார். இதற்கிடையில் கடத்தியவர்கள், ரமேஷை தொடர்பு கொண்டு, "போலீசை அணுகினால் மகனை உயிருடன் பார்க்க முடியாது' என்று மிரட்டினர். இந்த சம்பவத்தால் சென்னை போலீசில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையில் அக்கா, தம்பி இருவரும் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்கு முன்பே, இந்த சம்பவம் நடந்துள்ளதால் சென்னை போலீசார் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர். சம்பவம் குறித்த தகவல் வந்த போது, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள் உள்ளிட்ட போலீசார் ஆலோசனை கூட்டத்தில் இருந்தனர். தகவல் கேள்விப்பட்டதும் கூட்டத்தை முடித்துக் கொண்டு, கூடுதல் கமிஷனர் ஷகீல் அக்தர், இணை கமிஷனர் தாமரைக்கண்ணன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். கார் டிரைவர் கோவிந்தராஜ், கீர்த்திவாசனின் பெற்றோர் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. உடனடியாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் உஷார் படுத்தப்பட்டு வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையில், மாணவன் கடத்தப்பட்ட, "செவர்லெட் டவேரா' கார், பாடியில் உள்ள குறுங்காலீஸ்வரர் கோவில் அருகில் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று பார்த்த போது, கீர்த்திவாசனின் புத்தகப்பை, கடத்த பயன்படுத்திய கத்தி ஆகியவை கைப்பற்றப்பட்டன. பள்ளியில் இருந்து மாணவனை கடத்திய இருவரும், மற்றொரு காரில் கீர்த்திவாசனை மாற்றி விட்டு, இந்த காரை அப்படியே விட்டுச் சென்றது தெரியவந்தது. இதற்கிடையில், அன்று இரவே கீர்த்திவாசனின் தந்தையை தொடர்பு கொண்ட கடத்தல்காரர்கள், மூன்று கோடி ரூபாய் தரவேண்டும் என நிபந்தனை விதித்தனர். மொபைல் போன், அண்ணாநகரில் இருந்து பயன்படுத்தியது தெரிந்தாலும், அந்த போன் சிக்கவில்லை. தொடர்ந்து பல முறை கடத்தல்காரர்கள் தங்கள் மொபைலில் இருந்து ரமேஷை தொடர்பு கொண்டனர். ஆனால், மொபைல் போன் குறித்த விவரங்கள் போலீசிற்கு சிக்கவில்லை; இந்த விஷயம் சிறிய பின்னடைவை ஏற்படுத்தியது.

சம்பவம் தொடர்பாக 40 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அண்ணாநகர் முழுவதும் "சீல்' செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார், ரமேஷ் மூலம் கடத்தல்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு 1.5 கோடி ரூபாயாக தொகையை குறைத்தனர். இரவு முழுவதும் தேடியும் கிடைக்காத நிலையில், நேற்று முன்தினம் காலை மீண்டும் கடத்தல்காரர்கள் இருவரும் ரமேஷை தொடர்பு கொண்டனர். அப்போது பணம் எடுத்து வர வேண்டிய இடம் முடிவெடுக்கப்பட்டது. தொடர்ந்து அந்த இடத்திற்கு சென்று கடத்தல்காரர்களிடம் பணத்தை கொடுத்த ரமேஷ், காரில் இருந்த கீர்த்திவாசனை மீட்டு வந்தார். இருவரும் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவர்களை அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டது. இருந்தாலும் அவர்கள் பணத்துடன் வேறு எங்கும் சென்றிருக்க வாய்ப்பில்லை என்பதால் திருமங்கலம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகள் அனைத்தும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, நேற்று மாலை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், "மாணவனை மீட்டுவிட்டோம். கடத்தல்காரர்கள் குறித்த விவரங்கள் கிடைக்கவில்லை. பிடித்து விடுவோம்' என்றார். தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கடத்தல்காரர்கள், போலீசிடம் சிக்கினர்.

துப்பு துலங்கியது எப்படி?: நேற்று முன்தினம் பிற்பகல் 1:30 மணியளவில் கீர்த்திவாசனின் தந்தை ரமேஷை தொடர்பு கொண்ட கடத்தல்காரர்கள் இடத்தை முடிவு செய்ததும், ரமேஷ் வீட்டிற்கு அடுத்த இரண்டு தெருக்கள் தாண்டி ஒரு இடத்தை ரமேஷ், கடத்தல்காரர்களிடம் கூறியுள்ளார். போலீசார், ஆலோசனைப்படி பணத்தை எடுத்துக் கொண்டு அங்கு சென்ற ரமேஷ், கடத்தல்காரர்களிடம் பணத்தை கொடுத்துள்ளார். டூவீலரில் வந்த கடத்தல்காரர்கள் இருவரும் ஹெல்மெட் போட்டிருந்ததால் ரமேஷால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. டூவீலர், "நம்பர் பிளேட்'டும், "கர்சீப்'பால் மூடப்பட்டிருந்தது. இதை போலீசார் குறிப்பிட்ட தூரத்தில் இருந்து கண்காணித்துக் கொண்டிருந்தனர். ஆனால், கீர்த்திவாசனை மீட்க வேண்டும் என்பதால் போலீசார் தங்கள் அதிரடி நடவடிக்கையை நிறுத்தி வைத்திருந்தனர்.

கடத்தல்காரர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு தப்பிச் செல்லும் போது அருகில் நின்றிருந்த மாருதி ஸ்விப்ட் டிசையர் ரக காரின் சாவியை ரமேஷிடம் தந்து, " டிக்கியில் பாருங்கள்' என்று கூறிவிட்டு சென்றுள்ளனர். உடனடியாக டிக்கியை திறந்து பார்த்த போது. அதில், கீர்த்திவாசன் இருந்தது கண்டு, உடனடியாக அவனை மீட்டனர். அதற்குள் இருவரும் டூவீலரில் தப்பினர். டூவீலர் வேகமாக சென்ற போது நம்பர் பிளேட்டில் கட்டப்பட்டிருந்த, "கர்சீப்' விலகியது. அப்போது தெரிந்த வாகனத்தின் எண், போலீசிற்கு துருப்புச் சீட்டாக மாறியது. இதைக் கொண்டு போலீசார் தொடர்ந்து விசாரித்தனர். அடுத்தடுத்து பல மர்மங்கள் விலகின. முதலில் போலீசார், கைதேர்ந்த கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று நினைத்தனர். தொடர்ந்து வாகனத்திற்குரியவர் யார் என்பதை விசாரித்த போது தான் போலீசாருக்கு உண்மை பிடிபட்டது. வாகனத்தின் உரிமையாளர் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த விஜய் என்பது தெரியவந்தது.

விஜய் குறித்த விவரங்களை ஆராய்ந்த போது, அவர் ரமேஷின் தூரத்து உறவினர் என்ற விவரமும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நேற்று நள்ளிரவில் விஜய் வீட்டிற்கு சென்று, அவரை பிடித்து விசாரித்ததில், தனது சித்தப்பா மகன் பிரபு குறித்த தகவல்களை கூறியுள்ளார். உடனடியாக இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையின் போது முதலில் மறுத்த இருவரும், போலீசாரின் பிடி இறுகியதும், கீர்த்திவாசனை கடத்தியது நாங்கள் தான் என ஒப்புக் கொண்டனர். தொடர்ந்து, அவர்களிடம் இருந்த பணம் 98 லட்சத்து 73 ஆயிரம் ரூபாயும் மீட்கப்பட்டது. இருவரையும் கைது செய்த போலீசார் நேற்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பணத்தாசையே கடத்தலுக்கு தூண்டுதல்: கீர்த்திவாசனை கடத்தியதாக பிடிபட்டுள்ள இருவரும் ரமேஷின் தூரத்து உறவினர்கள். திருச்சி மாவட்டம், துறையூரைச் சேர்ந்த ரமேஷ், தனது மேலாளராக கங்காதரன் என்பவரை நியமித்துள்ளார். அவரது நெருங்கிய உறவினர்கள் தான் பிடிபட்ட விஜய் மற்றும் பிரபு என்பது விசாரணையில் தெரியவந்தது. ரமேஷின் மேலாளர் கங்காதரன், தனது முதலாளியின் பிசினஸ், ஆங்காங்கே இடம் வாங்கியது, கோடி கோடியாக நடக்கும் வர்த்தகம் குறித்த விவரங்களை தனது உறவினர்களான விஜய் மற்றும் பிரபுவிடம் தெரிவித்துள்ளார். இருவரும் பணி வாய்ப்பில்லாமல் இருந்த நிலையில், கங்காதரன் அளித்த விவரங்கள் அவர்களை உசுப்பேற்றி விட்டுள்ளது. ரமேஷின் மகனை கடத்தி, அதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் கறக்க திட்டமிட்டனர். கிடைக்கும் பணத்தை கொண்டு புதிய தொழிலை துவக்கி செட்டிலாகி விடலாம் என நினைத்து, கீர்த்திவாசனை கடத்தியதும், தெரியவந்தது. ஆனால், பணத்தை பெற்ற இருவரும் அதில் இருந்து எதையும் எடுத்து செலவு செய்யவில்லை என கூறப்படுகிறது. கொடுக்கப்பட்ட பணம் முழுவதையும் போலீசார் மீட்டுள்ளனர். கடத்திய இருவரும் நன்கு படித்து, லண்டன் வங்கி மற்றும் சிங்கப்பூரில் உள்ள ஐ.டி., கம்பெனியில் பணியாற்றியிருந்தாலும், உருப்படியாக எந்த வேலையிலும் வெகுநாட்கள் நீடித்ததில்லை என்று கூறப்படுகிறது. அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு, தற்போது கம்பிக்கு பின்னால் நின்று கொண்டிருக்கின்றனர்.

இன்ஜினியரிங், எம்.பி.ஏ., பட்டதாரிகள்: சென்னை அண்ணாநகரில் கிரானைட் அதிபர் மகன் கீர்த்திவாசனை கடத்திய இருவர் இன்ஜினியரிங் பட்டதாரிகள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஒருவர் அண்ணாநகர் பிரீமியர் காலனியைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற சுங்க அதிகாரி ராமையாவின் மகன் விஜய்(26) என்பதும், மற்றொருவர் திருமங்கலம், பஞ்சரத்தினம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் கேசவன் என்பவர் மகன் பிரபு (29) என்பதும் தெரியவந்தது. திருச்சி மாவட்டம், துறையூரைச் சேர்ந்த ராமையாவும், கேசவனும் சகோதரர்கள். இதில் விஜய், சென்னை அருகில் உள்ள தனியார் பொறியியல் பல்கலைக்கழகத்தில் பி.டெக்., படித்துவிட்டு லண்டன் சென்று, அங்குள்ள பெபில் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ., படித்துள்ளார். தொடர்ந்து அங்கேயே ஒரு வங்கியில் பணியாற்றிய விஜய், கடந்தாண்டு சென்னை வந்துள்ளார். விஜயின் சகோதரரான பிரபு, பெரம்பலூரில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் டி.எம்.இ., படித்துவிட்டு, அண்ணா பல்கலைக்கழகத்தில் பகுதி நேர பி.இ., படித்து முடித்து, சிங்கப்பூரில் பணியாற்றியுள்ளார். கீர்த்திவாசனை கடத்துவதற்காகவே இவர் சென்னை வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடத்தல்காரர்கள் பிடிபட்டது குறித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது: கீர்த்திவாசன் மீட்கப்படும் வரை நாங்கள் கடத்தல்காரர்களுடன் பேசிக்கொண்டே தான் இருந்தோம். அனைத்து தரப்பிலும் இதனால், "டென்ஷன்' இருந்து கொண்டே இருந்தது. அவர்கள் வாகனத்தை மாற்றியது எங்களது முயற்சியில் ஏமாற்றத்தை அளித்தது. அவர்களுடன் தொடர்ந்து பேசி, பணத்தை கொடுக்கும் இடத்தை முடிவு செய்த போது கீர்த்திவாசனின் தந்தையிடம் 15லிருந்து 20 லட்சம் வரை மட்டுமே பணத்தை கொடுக்க கூறினோம். ஆனால், அவர் ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளார். இதற்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. கீர்த்திவாசனை பத்திரமாக மீட்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால் தான் அவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது. எப்படியும் கடத்தல்காரர்களை பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. அவர்கள் மூன்று கோடி ரூபாய் கேட்டு, கொடுக்கப்பட்ட ஒரு கோடி ரூபாயும் தற்போது மீட்கப்பட்டுள்ளது. கடத்தலில் ஈடுபட்ட இருவரும், ரமேஷிடம் மேலாளராக பணியாற்றியவரின் உறவினர்கள். ரமேஷûக்கும் தூரத்து உறவினர்கள். இவர்கள் அனைவரும், திருச்சி துறையூரைச் சேர்ந்தவர்கள். இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.

தொடர்ந்து நிருபர்கள் கேள்விகளுக்கு பதிலளித்து கூறியதாவது:

* கீர்த்திவாசனை கடத்தியவர்களை ஏன் சுட்டுப் பிடிக்கவில்லை?

முதலில் மாணவனை மீட்பதே எங்கள் குறிக்கோளாக இருந்தது. கடத்தப்பட்ட அன்று இரவு, கீர்த்திவாசன் அவர்களுடன் இருக்கிறானா என்பதை நாங்கள் தொடர்ந்து உறுதிபடுத்திக் கொண்டே இருந்தோம். இந்த சம்பவம், கோவை சம்பவத்தை அடுத்து நடந்துள்ளதால் மிகவும் கவனமாக இருந்தோம். பணத்தை கொடுக்கும் இடத்தை முடிவு செய்த நிலையில், தொடர்பு கொண்டபோது மாணவன் அழுதான். எனவே நிலைமை மோசமாகிவிடக் கூடாது என்பதால் அவர்கள், பணத்தை வாங்கிக் கொண்டு தப்பிய போது நாங்கள் எந்த அதிரடி நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு வேளை பணத்தையும் பெற்றுக் கொண்டு, கீர்த்திவாசனையும் கொண்டு சென்றுவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணமும் எங்களுக்கு இருந்தது. இடையில் பணத்திற்கு நாங்களும் ஏற்பாடு செய்து கொண்டிருந்தோம். அவர்கள், கீர்த்திவாசனை விட்டுச்சென்ற இடம் மக்கள் நெருக்கடி அதிகமாக இருந்ததால் சுட்டுப்பிடிப்பது என்பது கடினம். அவர்களை பின்தொடர்ந்தோம். டூவீலரின் பதிவு எண் கிடைத்ததும் அவர்கள் இருக்கும் இடம் தெரிந்து பிடித்தோம்.

* இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா?

இவர்களை தவிர வேறு யாருக்கும் தொடர்பிருப்பதாக தெரியவில்லை. அவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறோம். பிடிபட்ட இருவருக்கும் பணம் மட்டும் தான் நோக்கமாக இருந்துள்ளது.

* இனி இது போன்ற கடத்தல் சம்பவங்கள் நிகழாமல் தடுப்பது குறித்து?

தீபாவளி முடிந்த பின், பள்ளி முதல்வர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினருடன் ஆலோசனை நடத்த உள்ளோம். நான் கடந்தாண்டு நடந்த கூட்டத்தில், பள்ளிகளின் முன்பு கேமரா வைக்க வேண்டும் என்று கூறியிருந்தேன். தற்போது தான் பள்ளிக்கல்வித்துறை, பள்ளிகளின் முன்பு கேமரா அமைக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

போலீசுக்கு நன்றி: தந்தை ரமேஷ் பேட்டி: கமிஷனர் பேட்டியின் போது உடனிருந்த கீர்த்திவாசனின் தந்தை ரமேஷ் பேசும் போது, "எனது மகன் கடத்தப்பட்ட 15 நிமிடத்தில் உயரதிகாரிகள் உடனேயே வந்து விசாரணை நடத்தினர். மீட்பதற்காக குறைந்த அளவு பணத்தை கொடுக்குமாறு போலீசார் கூறினர். ஆனால், கீர்த்திவாசனை மீட்க வேண்டும் என்பதற்காக தான், நான் அதிக பணத்தை கொடுத்தேன். அதிகாரிகள் தனது மகனை மீட்பது போன்று செயல்பட்டு மீட்டுக் கொடுத்தனர். ஒட்டு மொத்த போலீசாரும், மகனை மீட்பதில் ஈடுபட்டிருந்தனர். போலீஸ் கமிஷனர் உள்ளிட்டவர்களுக்கு நன்றி' என்றார்.

புழல் சிறையில் கடத்தல் பட்டதாரிகள்: அண்ணாநகரில் கிரானைட் அதிபர் மகன் கீர்த்திவாசன் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய விஜய் மற்றும் பிரபு ஆகிய இரு பட்டதாரிகளும், நேற்று மாலை, எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் இருவரையும் கோர்ட் அனுமதியுடன் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Monday, June 14, 2010

சுடுகாட்டு வெட்டியான் வேலை பார்க்கும் ஊராட்சி தலைவர்

தேனி :தேனி அருகே கொடுவிலார்பட்டி ஊராட்சி தலைவர் சின்னவரதன் சுடுகாட்டில் வெட்டியான் வேலை செய்து வருகிறார்.

தேனி அருகே கொடுவிலார்பட்டி ஊராட்சி தலைவராக இருப்பவர் சின்னவரதன். சுடுகாட்டில் வெட்டியான் வேலை செய்த இவர், தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். இவர் தலைவரானால் வெட்டியான் வேலைக்கு ஆள் இல்லாமல் போய் விடுமே என ஊர் மக்கள் கருதினர். எனவே சின்னவரதன், "நான் வெற்றி பெற்று தலைவராக வந்தாலும் வெட்டியான் வேலையை தொடர்ந்து செய்வேன்' என தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்.தேர்தலில் வெற்றி பெற்று தலைவர் பதவியை கைப்பற்றிய சின்னவரதன் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் வகையில் தற்போது வரை வெட்டியான் வேலை பார்த்து வருகிறார்.

இது குறித்து சின்னவரதன் கூறுகையில், "இந்த ஊரில் யார் இறந்தாலும் முதலில் எனக்கு தகவல் சொல்வார்கள். நான் முதல் மாலை போட்டு விட்டு, அடுத்து ஆக வேண்டிய காரியங்களை பார்ப்பேன். தலைவரான பின்னரும் சுடுகாட்டில் நானே குழி வெட்டினேன். பெரியோர்கள் சிலர் என்னிடம் வந்து நீங்கள் இறங்கி குழி வெட்ட வேண்டாம். உங்கள் மேற்பார்வையில் ஆள் வைத்து குழி வெட்டுங்கள் எனக்கூறினர். எனவே அப்போது முதல் குழிவெட்டவும், தேர் இழுக்கவும் நான்கு பேரை வேலைக்கு வைத்து இந்த பணிகளை செய்து வருகிறேன்.இங்குள்ள தொண்டு நிறுவனத்தில் இறந்த இரண்டு அனாதை பிணங்களை நானே புதைத்தேன்.

இதே கர்ப்பிணி ஒருவர் குழந்தை பிறந்ததும் இறந்தார். அவர் உடலை நானே புதைத்தேன். இதனால் என் மீது மக்களுக்கு மரியாதை கூடி விட்டது.தற்போது வகிக்கும் பதவிக்காலம் முடியவும், நானே இறங்கி மீண்டும் குழி வெட்டுவேன். அதுவே என் தொழில். கடைசி வரை இத்தொழிலை கை விடப்போவதில்லை. நான் ஆரம்பம் முதலே துண்டு, செருப்பு அணிவதில்லை. தலைவரான பின்னரும் துண்டு, செருப்பு இல்லாமல் மக்களுக்கு பணியாற்றுகிறேன்.இதற்கு முன் தலைவராக இருந்தவர்கள் சுடுகாட்டு பிரச்னை பற்றி கண்டுகொள்ளவில்லை. நான் தலைவரானதும் ஊருக்குள் ஏராளமான பணிகளை செய்துள்ளேன். சுடுகாட்டில் சுற்றுச்சுவர் வசதி, தண்ணீர் வசதி, பிணத்துடன் செல்பவர்கள் அமரும் வசதி உட்பட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளேன்' என்றார்

இந்திய கிராண்ட் பிரிக்ஸ் பாட்மின்டன் : செய்னா நேவல் சாம்பியன்

சென்னை: இந்திய கிராண்ட் பிரிக்ஸ் பாட்மின்டன் தொடரின் ஒற்றையர் பிரிவில், இந்திய நட்சத்திர வீராங்கனை செய்னா நேவல் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். கலப்பு இரட்டையரில் இந்தியாவின் திஜு, ஜுவாலா கட்டா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
சென்னையில், இந்திய கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பைனலில் இந்தியாவின் செய்னா நேவல், மலேசியாவின் சோ வோங் மியூவை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பான பைனலின் முதல் செட்டை சோ வோங் மியூ 22-20 என கைப்பற்றினார். பின்னர் எழுச்சி கண்ட செய்னா, 2வது செட்டை 21-14 என தன்வசப்படுத்தி பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் தொடர்ந்து அசத்திய செய்னா, 21-12 என கைப்பற்றினார். இறுதியில் செய்னா 20-22, 21-14, 21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் வென்றார்.
குருசாய்தத் ஏமாற்றம்:
ஆண்கள் ஒற்றையர் பைனலில் இந்தியாவின் குருசாய்தத், இந்தோனேஷியாவின் அலாம்சியா யூனசிடம் 13-21, 18-21 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்து, சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
திஜூ ஜோடி அபாரம்:
கலப்பு இரட்டையர் பைனலில் இந்தியாவின் திஜு, ஜுவாலா கட்டா ஜோடி, சிங்கப்பூரின் லெய் யயோ, சாயுட் டிரையசார்ட் ஜோடியை 23-21, 20-22, 21-7 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றது.
இந்திய ஜோடி அதிர்ச்சி:
ஆண்கள் இரட்டையர் பைனலில் இந்தியாவின் சனவே தாமஸ், ருபேஷ் குமார் ஜோடி, மலேசியாவின் பெய்ருஜிஜுயன், ஜாக்ரி அப்துல் ஜோடியிடம் 12-21, 20-22 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தது.
பெண்கள் இரட்டையர் பைனலில் இந்தியாவின் ஜுவாலா கட்டா, அஸ்வினி பொன்னப்பா ஜோடி, சிங்கப்பூரின் லெய் யயோ, முலியா சாரி ஷிந்தா ஜோடியிடம் 21-11, 9-21, 15-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றியது.

Wednesday, May 19, 2010

எஸ்.பி.,யாக வேண்டும்: போலீஸ் ஸ்டேஷனை பெற்றோர் வீடாக நினைக்கும் சிறுவன் விருப்பம்


பெரம்பலூர் : போலீஸ் ஸ்டேஷனை பெற்றோர் வீடாக நினைத்து வாழும் சிறுவன் ஒருவன் தான் போலீஸ் எஸ்.பி.,யாக வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளான். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா, பாலி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜு(50); இவரது மகன் மணிகண்டன்(14).

ராஜு, 2008ம் ஆண்டு, மணிகண்டனை, பெரம்பலூர் மாவட்டம் கொளக்காநத்தம் கிராமத்தில் தங்கி, கூலியாட்கள் வைத்து ஆடுகளை மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமர்(55) என்பவரிடம் 6,000 ரூபாய்க்கு விற்பனை செய்தார். ராமர், சிறுவன் மணிகண்டனுக்கு கஞ்சி மட்டும் உணவாக தந்து, ஆடு மேய்க்கும் வேலையில் ஈடுபடுத்தி கொடுமைப்படுத்தினார். கடந்தாண்டு ஜூன் 12ம் தேதி கொளக்காநத்தம் கிராமத்திலிருந்து தப்பி வந்து, பெரம்பலூர் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்தான். சிறுவன் மணிகண்டனின் சோகக்கதையை கேட்ட பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன், அவன் படித்த பாலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் டி.சி., வாங்கி வந்து, பெரம்பலூர் ஆண்டிமுத்து சின்னப்பிள்ளை அறக்கட்டளை உதவியுடன், அவன் படிப்பதற்கு ஏற்பாடு செய்தார். இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன் உதவியுடன் ஐந்தாம் வகுப்பு முடித்து தேர்வு எழுதி விட்டு, கோடை விடைமுறையை, பெரம்பலூர் போலீஸ் ஸ்டேஷனில் கழித்து வரும் சிறுவன் மணிகண்டனை, இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன் மற்றும் போலீசார் தங்கள் வீட்டிலும், ஓட்டலிலும் உணவு வாங்கி கொடுத்து பாதுகாத்து வருகின்றனர்.

சிறுவன் மணிகண்டன் கூறியதாவது: என் அப்பா, அம்மா இருவரும் கேரளாவில் இருக்கின்றனர். என் அப்பா, என்னை 6,000ம் ரூபாய்க்கு ஆடு மேய்க்கும் வேலைக்கு விற்று விட்டார். என் முதலாளி அடித்து துன்புறுத்தினார். நான் அங்கிருந்து தப்பி வந்து பெரம்பலூர் ஸ்டேஷனில் தஞ்சமடைந்தேன். என்னை இன்ஸ்பெக்டர் சார் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். போலீஸ் ஸ்டேஷனுக்கு பின்னால் உள்ள அறையில் தங்கி உள்ளேன். என்னை விற்பனை செய்த என் பெற்றோரை பார்க்க நான் விரும்பவில்லை. நன்றாக படித்து, போலீஸ் எஸ்.பி.,யாக வர வேண்டும் என்பதே என் ஆசை. என் பெற்றோர் வீடாக நினைத்து ஸ்டேஷனுக்கு வந்துள்ளேன். இவ்வாறு மணிகண்டன் கூறினான்.

Monday, May 3, 2010

மும்பை தாக்குதல் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு : 2 பேர் விடுதலை


மும்பை :மும்பைத் தாக்குதல் வழக்கில் நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. தாக்குதலின் போது கைதான பாகிஸ்தான் பயங்கரவாதி அஜ்மல் அமீர் கசாப் குற்றவாளி என, சிறப்பு கோர்ட் நீதிபதி அறிவித்தார். அதே நேரத்தில், இந்த வழக்கில் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட  இருவர் விடுவிக்கப்பட்டனர். 166 பேர் பலியாக காரணமாக இருந்த இந்த வழக்கில் 1,522 பக்கங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டது. கசாப்பிற்கான தண்டனை குறித்து இன்று வக்கீல்களின் வாதம் நடக்கிறது. பயங்கரவாத தாக்குதல் வழக்குகளில் மிக வேகமாக விசாரணை நடந்து, தீர்ப்பு வழங்கப்பட்டது இந்த வழக்கே ஆகும்.

கடந்த 2008 நவம்பர் 26ம் தேதி, பாகிஸ்தானிலிருந்து வந்த 10 பயங்கரவாதிகள், மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், காமா மருத்துவமனை, தாஜ் ஓட்டல் உட்பட பல இடங்களில் தாக்குதல் நடத்தினர். இந்தக் கொடூர தாக்குதலில், வெளிநாட்டவர்கள் உட்பட 166 பேர் கொல்லப்பட்டனர்; ஏராளமானோர் காயம் அடைந்தனர். பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் எடுத்த அதிரடி நடவடிக்கையில், ஒன்பது பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் கைதானான். இவன், பாகிஸ்தானின் பரித்கோட் நகரைச் சேர்ந்தவன். பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்டவன்.மேலும், இந்த பயங்கரவாதிகளுக்கு தாக்குதல் நடத்த உதவியதாக, இந்தியாவைச் சேர்ந்த பாஹீம் அன்சாரி மற்றும் சபாபுதீன் அகமது என்ற இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த மூன்று பேருக்கும் எதிரான வழக்கு, மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அமைக்கப்பட்ட சிறப்பு கோர்ட்டில் நடந்தது. நீதிபதி தகிலியானி வழக்கை விசாரித்தார். அரசு தரப்பு வக்கீலாக உஜ்வால்நிகாம் ஆஜரானார்.

இந்தியாவில் பயங்கரவாத சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் மிக வேகமாக முடிவுக்கு வந்த வழக்கு இதுவே.  தவிரவும், அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., வந்து ஆஜரான வரலாற்று முக்கியத்துவம் பெற்ற வழக்கும் ஆகும். மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கசாப், குண்டுதுளைக்காத வகையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தான். தீர்ப்பையொட்டி, மும்பை ஆர்தர்ரோடு சிறையைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தீர்ப்பு:  நீதிபதி தகிலியானி தீர்ப்பை வழங்கினார்.

1,522 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் அவர் கூறியுள்ளதாவது:இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்ததாக, கசாப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உண்மை என நிரூபணமாகியுள்ளது.  அப்பாவி மக்களை கொன்று குவித்துள்ளான். ஆயுதங்கள் சட்டம், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், வெடிமருந்துகள் சட்டம், ரயில்வே சட்டம் என, 86 சட்டப் பிரிவுகளின் கீழ் கசாப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அனைத்து சட்டப் பிரிவுகளின் கீழும் அவன் குற்றவாளியே.மும்பைத் தாக்குதலை வெறும் படுகொலை என சொல்ல முடியாது. இது இந்தியாவிற்கு எதிராக நடத்தப்பட்ட போரின் ஒரு பகுதி என்றே சொல்ல வேண்டும். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை பாகிஸ்தானில் இருந்து சிலர் இயக்கியுள்ளனர்.மூத்த போலீஸ் அதிகாரிகள்  ஹேமந்த் கர்காரே, அசோக் காம்தே,  விஜய் சலாஸ்கர், உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் துக்காராம் ஓம்பாலே ஆகியோரை கொன்ற வழக்கிலும் கசாப் குற்றவாளியே.

அதேநேரத்தில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு இந்தியர்களான பாஹீம் அன்சாரி மற்றும் சபாபுதீன் அகமது ஆகிய இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாததால், அவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்கள் சந்தேகத்திற்கு இடமானதாக இருப்பதால், சந்தேகத்தின் பலனை அவர்களுக்கு சாதகமாக்கி விடுதலை செய்கிறேன்.இந்த வழக்கில், மீடியா போட்டோகிராபர்கள் செபஸ்டியன் டிசவுசா மற்றும் ஸ்ரீராம் வெர்னீகர் (கசாப் சுட்டதை படம் பிடித்தவர்கள்), சத்ரபதி சிவாஜி ரயில் நிலைய அறிவிப்பாளர் விஷ்ணு ஜெண்டே, 11 வயது சிறுமி தேவிகா ரோதவான் ஆகியோர் அளித்த சாட்சியங்கள் கோர்ட்டிற்கு மிகவும் உதவியாக இருந்தன. மேலும், இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில், தலைமறைவு குற்றவாளிகள் என, குறிப்பிடப்பட்டுள்ள 35 பேரில், 20 பேர் குற்றவாளிகள் என்பதையும்  கோர்ட் கண்டறிந்துள்ளது.இவ்வாறு நீதிபதி தகிலியானி கூறினார்.

குற்றவாளி  கசாப் என்று  நீதிபதி அறிவித்த போது, அவன் ஏதும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவில்லை. ஆனால், மற்ற இருவரும் தண்டனையின்றி  விடுவிக்கப்பட்ட போது, அவர்கள் புன்முறுவல் பூத்து மகிழ்ச்சி தெரிவித்தனர். கசாப் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால், அவனுக்கான தண்டனை குறித்து இன்று வக்கீல்களின் வாதம் நடக்கிறது. மரண தண்டனை வழங்க வேண்டும் என, அரசு தரப்பில் வாதிடப்படும் வாய்ப்பு அதிகம்.

தீர்ப்பு பற்றி கருத்து தெரிவித்த அரசு சிறப்பு வக்கீல் உஜ்வால் நிகாம், ''பாஹீம் அன்சாரி, சபாபுதீன் அகமது விடுதலையை எதிர்த்து, ஐகோர்ட்டில் அப்பீல் செய்யும்படி அரசுக்கு பரிந்துரை செய்வேன். கசாப்பை குற்றவாளி என, அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார்.

Thursday, April 29, 2010

நான் ஆம்பிளையே இல்லை : சாமியார் நித்யானந்தா கதறல்

பெங்களூர் : ‘நான் ஆண் மகனே இல்லை. யாரோ செய்த சதியில் சிக்கி அவதிப்பட்டுக் கொண்டு இருக்கிறேன்’ என்று போலீஸ் விசாரணையில் சாமியார் நித்யானந்தா கதறி அழுதார்.
நடிகை ரஞ்சிதாவுடன் சாமியார் நித்யானந்தா நெருக்கமாக இருந்த காட்சிகள் வெளியான பிறகு அவர் மீது ஏராளமான புகார்கள் குவிந்து வருகின்றன. அன்னிய செலாவணி மோசடி, தங்கம் கடத்தல் போன்ற புதிய குற்றச்சாட்டுகளும் கிளம்பியுள்ளன. இது பற்றி கர்நாடக சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். அதில் நித்யானந்தா போதிய ஒத்துழைப்பு அளிக்க மறுப்பதால், அவருக்கு தொடர்ந்து காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டு வருகிறது.
5 பெண்களுடன் தொடர்பு: நித்யானந்தாவுக்கு நடிகை ரஞ்சிதாவுடன் மட்டுமின்றி மேலும் 5 பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளது. அவர்களுடன் அவர் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் அடங்கிய சி.டி.க்கள் கிடைத்துள்ளன. சாமியாரிடம் விசாரணை நடத்தும் சி.ஐ.டி. குழுவுக்கு தலைமை வகிக்கும் எஸ்.பி. யோகப்பாவும் இதை உறுதிப்படுத்தி இருக்கிறார். ‘‘பிடதி ஆசிரமத்தில் சோதனை நடத்தியபோது, நித்யானந்தா 5 பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சி.டி.க்களை கைப்பற்றினோம். அவற்றை ஐதராபாத்தில் உள்ள தடயவியல் சோதனை மையத்துக்கு அனுப்பி பரிசோதித்தோம். அது உண்மையான சி.டி.க்கள்தான் என உறுதியாகி இருக்கிறது. அதில் உள்ள பெண்கள் யார் என்று தெரிய வேண்டும்’’ என்று அவர் கூறினார்.
ஆண் மகன் இல்லை: நித்யானந்தாவிடம் சி.ஐ.டி. அதிகாரிகள் நேற்று காலை தொடங்கி மாலை வரை துருவித் துருவி விசாரணை நடத்தினர். ‘நான் எந்த தவறும் செய்யவில்லை, எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும்’ என்று வழக்கமான பாணியில் நேற்றும் அவர் கூறியதால் பொறுமை இழந்த போலீசார், விசாரணை முறையை சிறிது மாற்றி உள்ளனர். அதை சமாளிக்க முடியாத சாமியார், ‘நான் ஆம்பிளையே இல்லை... பிறகு எப்படி பாலியல் உறவில் ஈடுபட முடியும்? போலீசார் கைப்பற்றியுள்ள சி.டி.யில் (5 பெண்களுடன் நெருக்கம்) இருப்பதும் நானில்லை, எனக்கு களங்கம் ஏற்படுத்த யாரோ செய்துள்ள சதியில் மாட்டிக் கொண்டு அவதிப்படுகிறேன்’ என்று குரல் தழுதழுத்தப்படி கூறியுள்ளார். அவருக்கு ஆண்மை சோதனை நடத்த முடிவு செய்துள்ள போலீசார், பெங்களூரில் உள்ள 4 மருத்துவமனைகளிடம் நேரம் ஒதுக்கும்படி கேட்டுள்ளனர்.
ஜாமீன் மனு ஒத்திவைப்பு: ராம் நகரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நித்யானந்தாவின் ஜாமீன் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. நித்யானந்தா இப்போது போலீஸ் காவலில் உள்ளதால், இந்த மனு மீதான விசாரணையை மே 3ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். மேலும், ஆசிரமத்தில் சந்தன கட்டைகள் இருந்தது தொடர்பாக வனத்துறை தொடர்ந்துள்ள வழக்கை இன்று விசாரிப்பதாக தெரிவித்தார்.

ரஞ்சிதா வரவில்லை : நித்யானந்தா வழக்கில் முக்கிய சாட்சியாக விளங்கும் நடிகை ரஞ்சிதா, சி.ஐ.டி. போலீசாரிடம் வாக்கு மூலம் கொடுக்க வருவதாக கூறியிருந்தார். ஆனால், நேற்று மாலை வரை அவர் வரவில்லை. ரஞ்சிதா மற்றும் அவருடைய தந்தையின் செல்போன் எண்கள் போலீசுக்கு கிடைத்துள்ளன. சி.ஐ.டி. போலீசார் அவற்றில் தொடர்பு கொண்டபோது, ‘சுவிட்ச் ஆப்‘ செய்யப்பட்டு இருந்தன.

இந்திய தூதரக பெண் அதிகாரி கைது; காதல், காசுக்காக நாட்டை காட்டி கொடுத்த துரோகம் !

புதுடில்லி: பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக பெண் அதிகாரி அந்த நாட்டுக்கு உளவு சொன்னதாக கைது செய்யப்பட்டுள்ளார். காசு ஆசை மற்றும் அந்நாட்டு அதிகாரியிடம் காதல் கொண்டதால் தன்னை மறந்து இந்தியாவின் ரகசியங்களை பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாக தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் அந்த பெண் அதிகாரி கூறியுள்ளார்.
அதிகாரம் ஊழல் செய்ய மயக்கும் என்பார்கள் அது போல சமீப காலமாகவே உயர் அதிகாரிகளாக இருப்பவர்கள் சட்ட விரோத மற்றும் பெரும் ஊழல் விஷயங்களில் சிக்கி வருகின்றனர். பல கோடிகள் விழுங்கிய மருத்துவ கவுன்சில் தலைவர் தேசாய் தற்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக பெண் அதிகாரி மாதுரி குப்தா கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். பத்திரிகை மற்றும் தகவல் தொடர்பு துறை செயலர் என்பது இவரது பொறுப்பு. சார்க் மாநாடு தொடர்பாக முக்கிய ஆலோசனை குறித்து பேச டில்லி வருமாறு தந்திரமாக அழைத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
இவர் மீதான விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. ரகசிய இடத்தில் இவரிடம் நடந்த விசாரணையில், கடந்த 2 ஆண்டுகளாகவே இந்த உளவு காரியங்களை செய்து வந்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக இவர் பாகிஸ்தானில் உள்ள உளவு துறை அதிகாரி ராணா என்பவருடன் காதல் வயப்பட்டாராம். மாதுரிக்கு தற்போது வயது 53 . மேலும் இவருக்கு பணம் என்றால் கொள்ளை பிரியமாம் . ( நம்ம தேசாயை விடவா ? ) இதன் காரணமாக தனது பணியை ஒழுங்காக செய்யாமல் உளவுக்கு தகவல் சொல்வதை தொழிலாக செய்து வந்திருக்கிறார்.
டாக்டர் தம்பதியினருடன் உறவு : இவருடன் 14 பேர் மிக நெருக்கமான உறவு கொண்டிருந்திருக்கின்றனர். இதில் 10 பேர் இந்தியர்கள் 4 பேர் பாகிஸ்தானியர்கள். இந்த 14 பேரும் மாதுரியின் உளவு செயல்களுக்கு துணையாக இருந்திருக்கின்றனர். ஜம்மு காஷ்மீரில் டாக்டர் தம்பதியினருடன் தொடர்பு வைத்திருந்தார். சில நாட்களுக்கு முன்பு காஷ்மீருக்கும் வந்து தங்கி இருந்திருக்கிறார் மாதுரி. இவருடன் துணையாக இருந்த இந்திய அதிகாரிகளை தற்போது உளவுத்துறை கண்காணித்து வருகிறது. இவரது போன் மற்றும் மெயில் தொடர்பு மூலமாக இந்த தகவல் கிடைத்துள்ளது.
ராணுவ ரகசியங்களை காசாக்கினார்: குறிப்பாக ராணுவ ரகசியங்களை விற்று காசாக்கியிருக்கிறார், இது தொடர்பாக ராணுவ அமைச்சர் ஏ. கே., அந்தோணி கூறுகையில் இது சீரியஷான விஷயம் முழுக்கவனம் எடுத்து விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார். நம்பிக்கை, மோசடிக்கு பேர் போன இந்த பெண் அதிகாரி குறித்து இன்னும் புதிய திடுக் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

Pakistan moves 100,000 troops from border with India: Pentagon

Pakistan has moved 100,000 troops from its borders with India, thinning the lines, to bolster its campaign against Taliban and other militants on its restive border with Afghanistan, the Pentagon said today.
The mass shifting of troops is an acknowledgement of the fact that terrorism and internal insurgency were posing more threat to Pakistan now, the Pentagon said in a report to the US Congress.
"More than 100,000 PAKMIL troops were moved from the eastern border with India. This unprecedented deployment and thinning of the lines against India indicates that Islamabad has acknowledged its domestic insurgent threat," the department said in its latest report on Afghanistan.
The Pentagon did not specify the regions' from where the troops had been pulled out, but said it estimated that more than 140,000 Pakistani forces were now taking part in the ongoing offensive against the Taliban in Pakistan's semi-autonomous tribal region, known as FATA.
The Pentagon report was issued hours before the crucial meeting between Prime Minister Manmohan Singh and his Pakistani counterpart Yusuf Raza Gilani in the Bhutanese capital Thimphu on the sidelines of the SAARC Summit.
The US Defence Department while acknowledging that Pakistani military operations in tribal areas of NWFP had placed "a high degree of pressure on militants and reduced their safe havens", but was unlikely to have an immediate impact on the US-led war in Afghanistan.
The Pentagon report said that there was a broad syndicate of extremist groups operating in the AfPak region with multiple short and long term goals.
It identified the groups as al Qaeda, Tehreek-e-Taliban and Lashkar-e Taiba (LeT) which it said threatened security of Afghanistan, Pakistan, India and elsewhere.
"The three major groups include the Quetta Shura Taliban, Hezb-e-Islami Gulbuddin (HIG), and the Haqqani Network (HQN).
These groups cooperate and coordinate at times and their areas of operations tend to be geographically and demographically determined," it said.
"They operate mainly in the Pashtun-majority areas of Afghanistan in the south and east, and in Pashtun pockets in the north. The common goals of these groups are to expel foreign forces from Afghanistan (although there is no mention of foreign fighters allied with them or al Qaeda) and to undermine the central government," the report added.

ரோபாட் மூலம் இதய ஆபரேஷன்: இங்கிலாந்து டாக்டர் சாதனை

ரோபாட்டை பயன்படுத்தி ஆபரேஷன் செய்வது இப்போது நடைமுறையில் வந்துள்ளது. மேலை நாடுகளில் கர்ப்ப பை புற்று நோய், சிறுநீரகம், சிறுநீர் பை, ரத்த குழாய்கல் போன்றவற்றில் ரோபாட் மூலம் ஆபரேஷன் செய்கின்றனர்.
 
இப்போது இங்கிலாந்தில் முதன் முதலாக ரோபாட்டை பயன்படுத்தி இதய ஆபரேஷன் செய்து உள்ளனர்.
 
இங்கிலாந்தை சேர்ந்த 70 வயதுகாரர் ஒருவர் இதய நோயால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு இதயத்தில் கிருமி தொற்று ஏற்பட்டு தசைகள் பாதிக்கப்பட்டு இருந்தன. இதனால் இதய துடிப்பு சீராக இல்லாமல் மூச்சுவிட சிரமப்பட்டு வந்தார்.
 
லைஜெஸ்டர் நகரில் உள்ள கிளம்பில்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அவருக்கு டாக்டர் அந்தர் நெக் ஆபரேஷன் செய்ய முடிவு செய்தார்.
 
ரோபாட் மூலம் ஆபரேஷன் செய்யலாம் என திட்டமிட்டார். அதன்படி ஆபரேஷன் தியேட்டருக்கு வெளியே இருந்தபடி ரோபாட்டை ரிமோட் மூலம் இயக்கி ஆபரேஷன் செய்தார். ஆபரேஷன் வெற்றி கரமாக அமைந்தது.
 
ரோபாட் மூலம் இதய ஆபரேஷன் செய்து இருப்பது உலகிலேயே இதுதான் முதல் முறை.
 
இந்த ரோபாட்டை அமெரிக்காவில் உள்ள கதேட்டார் ரோபாட் நிறுவனம் உருவாக்கி இருந்தது.