Thursday, April 29, 2010

நான் ஆம்பிளையே இல்லை : சாமியார் நித்யானந்தா கதறல்

பெங்களூர் : ‘நான் ஆண் மகனே இல்லை. யாரோ செய்த சதியில் சிக்கி அவதிப்பட்டுக் கொண்டு இருக்கிறேன்’ என்று போலீஸ் விசாரணையில் சாமியார் நித்யானந்தா கதறி அழுதார்.
நடிகை ரஞ்சிதாவுடன் சாமியார் நித்யானந்தா நெருக்கமாக இருந்த காட்சிகள் வெளியான பிறகு அவர் மீது ஏராளமான புகார்கள் குவிந்து வருகின்றன. அன்னிய செலாவணி மோசடி, தங்கம் கடத்தல் போன்ற புதிய குற்றச்சாட்டுகளும் கிளம்பியுள்ளன. இது பற்றி கர்நாடக சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். அதில் நித்யானந்தா போதிய ஒத்துழைப்பு அளிக்க மறுப்பதால், அவருக்கு தொடர்ந்து காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டு வருகிறது.
5 பெண்களுடன் தொடர்பு: நித்யானந்தாவுக்கு நடிகை ரஞ்சிதாவுடன் மட்டுமின்றி மேலும் 5 பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளது. அவர்களுடன் அவர் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் அடங்கிய சி.டி.க்கள் கிடைத்துள்ளன. சாமியாரிடம் விசாரணை நடத்தும் சி.ஐ.டி. குழுவுக்கு தலைமை வகிக்கும் எஸ்.பி. யோகப்பாவும் இதை உறுதிப்படுத்தி இருக்கிறார். ‘‘பிடதி ஆசிரமத்தில் சோதனை நடத்தியபோது, நித்யானந்தா 5 பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சி.டி.க்களை கைப்பற்றினோம். அவற்றை ஐதராபாத்தில் உள்ள தடயவியல் சோதனை மையத்துக்கு அனுப்பி பரிசோதித்தோம். அது உண்மையான சி.டி.க்கள்தான் என உறுதியாகி இருக்கிறது. அதில் உள்ள பெண்கள் யார் என்று தெரிய வேண்டும்’’ என்று அவர் கூறினார்.
ஆண் மகன் இல்லை: நித்யானந்தாவிடம் சி.ஐ.டி. அதிகாரிகள் நேற்று காலை தொடங்கி மாலை வரை துருவித் துருவி விசாரணை நடத்தினர். ‘நான் எந்த தவறும் செய்யவில்லை, எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும்’ என்று வழக்கமான பாணியில் நேற்றும் அவர் கூறியதால் பொறுமை இழந்த போலீசார், விசாரணை முறையை சிறிது மாற்றி உள்ளனர். அதை சமாளிக்க முடியாத சாமியார், ‘நான் ஆம்பிளையே இல்லை... பிறகு எப்படி பாலியல் உறவில் ஈடுபட முடியும்? போலீசார் கைப்பற்றியுள்ள சி.டி.யில் (5 பெண்களுடன் நெருக்கம்) இருப்பதும் நானில்லை, எனக்கு களங்கம் ஏற்படுத்த யாரோ செய்துள்ள சதியில் மாட்டிக் கொண்டு அவதிப்படுகிறேன்’ என்று குரல் தழுதழுத்தப்படி கூறியுள்ளார். அவருக்கு ஆண்மை சோதனை நடத்த முடிவு செய்துள்ள போலீசார், பெங்களூரில் உள்ள 4 மருத்துவமனைகளிடம் நேரம் ஒதுக்கும்படி கேட்டுள்ளனர்.
ஜாமீன் மனு ஒத்திவைப்பு: ராம் நகரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நித்யானந்தாவின் ஜாமீன் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. நித்யானந்தா இப்போது போலீஸ் காவலில் உள்ளதால், இந்த மனு மீதான விசாரணையை மே 3ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். மேலும், ஆசிரமத்தில் சந்தன கட்டைகள் இருந்தது தொடர்பாக வனத்துறை தொடர்ந்துள்ள வழக்கை இன்று விசாரிப்பதாக தெரிவித்தார்.

ரஞ்சிதா வரவில்லை : நித்யானந்தா வழக்கில் முக்கிய சாட்சியாக விளங்கும் நடிகை ரஞ்சிதா, சி.ஐ.டி. போலீசாரிடம் வாக்கு மூலம் கொடுக்க வருவதாக கூறியிருந்தார். ஆனால், நேற்று மாலை வரை அவர் வரவில்லை. ரஞ்சிதா மற்றும் அவருடைய தந்தையின் செல்போன் எண்கள் போலீசுக்கு கிடைத்துள்ளன. சி.ஐ.டி. போலீசார் அவற்றில் தொடர்பு கொண்டபோது, ‘சுவிட்ச் ஆப்‘ செய்யப்பட்டு இருந்தன.

இந்திய தூதரக பெண் அதிகாரி கைது; காதல், காசுக்காக நாட்டை காட்டி கொடுத்த துரோகம் !

புதுடில்லி: பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக பெண் அதிகாரி அந்த நாட்டுக்கு உளவு சொன்னதாக கைது செய்யப்பட்டுள்ளார். காசு ஆசை மற்றும் அந்நாட்டு அதிகாரியிடம் காதல் கொண்டதால் தன்னை மறந்து இந்தியாவின் ரகசியங்களை பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாக தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் அந்த பெண் அதிகாரி கூறியுள்ளார்.
அதிகாரம் ஊழல் செய்ய மயக்கும் என்பார்கள் அது போல சமீப காலமாகவே உயர் அதிகாரிகளாக இருப்பவர்கள் சட்ட விரோத மற்றும் பெரும் ஊழல் விஷயங்களில் சிக்கி வருகின்றனர். பல கோடிகள் விழுங்கிய மருத்துவ கவுன்சில் தலைவர் தேசாய் தற்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக பெண் அதிகாரி மாதுரி குப்தா கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். பத்திரிகை மற்றும் தகவல் தொடர்பு துறை செயலர் என்பது இவரது பொறுப்பு. சார்க் மாநாடு தொடர்பாக முக்கிய ஆலோசனை குறித்து பேச டில்லி வருமாறு தந்திரமாக அழைத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
இவர் மீதான விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. ரகசிய இடத்தில் இவரிடம் நடந்த விசாரணையில், கடந்த 2 ஆண்டுகளாகவே இந்த உளவு காரியங்களை செய்து வந்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக இவர் பாகிஸ்தானில் உள்ள உளவு துறை அதிகாரி ராணா என்பவருடன் காதல் வயப்பட்டாராம். மாதுரிக்கு தற்போது வயது 53 . மேலும் இவருக்கு பணம் என்றால் கொள்ளை பிரியமாம் . ( நம்ம தேசாயை விடவா ? ) இதன் காரணமாக தனது பணியை ஒழுங்காக செய்யாமல் உளவுக்கு தகவல் சொல்வதை தொழிலாக செய்து வந்திருக்கிறார்.
டாக்டர் தம்பதியினருடன் உறவு : இவருடன் 14 பேர் மிக நெருக்கமான உறவு கொண்டிருந்திருக்கின்றனர். இதில் 10 பேர் இந்தியர்கள் 4 பேர் பாகிஸ்தானியர்கள். இந்த 14 பேரும் மாதுரியின் உளவு செயல்களுக்கு துணையாக இருந்திருக்கின்றனர். ஜம்மு காஷ்மீரில் டாக்டர் தம்பதியினருடன் தொடர்பு வைத்திருந்தார். சில நாட்களுக்கு முன்பு காஷ்மீருக்கும் வந்து தங்கி இருந்திருக்கிறார் மாதுரி. இவருடன் துணையாக இருந்த இந்திய அதிகாரிகளை தற்போது உளவுத்துறை கண்காணித்து வருகிறது. இவரது போன் மற்றும் மெயில் தொடர்பு மூலமாக இந்த தகவல் கிடைத்துள்ளது.
ராணுவ ரகசியங்களை காசாக்கினார்: குறிப்பாக ராணுவ ரகசியங்களை விற்று காசாக்கியிருக்கிறார், இது தொடர்பாக ராணுவ அமைச்சர் ஏ. கே., அந்தோணி கூறுகையில் இது சீரியஷான விஷயம் முழுக்கவனம் எடுத்து விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார். நம்பிக்கை, மோசடிக்கு பேர் போன இந்த பெண் அதிகாரி குறித்து இன்னும் புதிய திடுக் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

Pakistan moves 100,000 troops from border with India: Pentagon

Pakistan has moved 100,000 troops from its borders with India, thinning the lines, to bolster its campaign against Taliban and other militants on its restive border with Afghanistan, the Pentagon said today.
The mass shifting of troops is an acknowledgement of the fact that terrorism and internal insurgency were posing more threat to Pakistan now, the Pentagon said in a report to the US Congress.
"More than 100,000 PAKMIL troops were moved from the eastern border with India. This unprecedented deployment and thinning of the lines against India indicates that Islamabad has acknowledged its domestic insurgent threat," the department said in its latest report on Afghanistan.
The Pentagon did not specify the regions' from where the troops had been pulled out, but said it estimated that more than 140,000 Pakistani forces were now taking part in the ongoing offensive against the Taliban in Pakistan's semi-autonomous tribal region, known as FATA.
The Pentagon report was issued hours before the crucial meeting between Prime Minister Manmohan Singh and his Pakistani counterpart Yusuf Raza Gilani in the Bhutanese capital Thimphu on the sidelines of the SAARC Summit.
The US Defence Department while acknowledging that Pakistani military operations in tribal areas of NWFP had placed "a high degree of pressure on militants and reduced their safe havens", but was unlikely to have an immediate impact on the US-led war in Afghanistan.
The Pentagon report said that there was a broad syndicate of extremist groups operating in the AfPak region with multiple short and long term goals.
It identified the groups as al Qaeda, Tehreek-e-Taliban and Lashkar-e Taiba (LeT) which it said threatened security of Afghanistan, Pakistan, India and elsewhere.
"The three major groups include the Quetta Shura Taliban, Hezb-e-Islami Gulbuddin (HIG), and the Haqqani Network (HQN).
These groups cooperate and coordinate at times and their areas of operations tend to be geographically and demographically determined," it said.
"They operate mainly in the Pashtun-majority areas of Afghanistan in the south and east, and in Pashtun pockets in the north. The common goals of these groups are to expel foreign forces from Afghanistan (although there is no mention of foreign fighters allied with them or al Qaeda) and to undermine the central government," the report added.

ரோபாட் மூலம் இதய ஆபரேஷன்: இங்கிலாந்து டாக்டர் சாதனை

ரோபாட்டை பயன்படுத்தி ஆபரேஷன் செய்வது இப்போது நடைமுறையில் வந்துள்ளது. மேலை நாடுகளில் கர்ப்ப பை புற்று நோய், சிறுநீரகம், சிறுநீர் பை, ரத்த குழாய்கல் போன்றவற்றில் ரோபாட் மூலம் ஆபரேஷன் செய்கின்றனர்.
 
இப்போது இங்கிலாந்தில் முதன் முதலாக ரோபாட்டை பயன்படுத்தி இதய ஆபரேஷன் செய்து உள்ளனர்.
 
இங்கிலாந்தை சேர்ந்த 70 வயதுகாரர் ஒருவர் இதய நோயால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு இதயத்தில் கிருமி தொற்று ஏற்பட்டு தசைகள் பாதிக்கப்பட்டு இருந்தன. இதனால் இதய துடிப்பு சீராக இல்லாமல் மூச்சுவிட சிரமப்பட்டு வந்தார்.
 
லைஜெஸ்டர் நகரில் உள்ள கிளம்பில்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அவருக்கு டாக்டர் அந்தர் நெக் ஆபரேஷன் செய்ய முடிவு செய்தார்.
 
ரோபாட் மூலம் ஆபரேஷன் செய்யலாம் என திட்டமிட்டார். அதன்படி ஆபரேஷன் தியேட்டருக்கு வெளியே இருந்தபடி ரோபாட்டை ரிமோட் மூலம் இயக்கி ஆபரேஷன் செய்தார். ஆபரேஷன் வெற்றி கரமாக அமைந்தது.
 
ரோபாட் மூலம் இதய ஆபரேஷன் செய்து இருப்பது உலகிலேயே இதுதான் முதல் முறை.
 
இந்த ரோபாட்டை அமெரிக்காவில் உள்ள கதேட்டார் ரோபாட் நிறுவனம் உருவாக்கி இருந்தது.

Wednesday, April 28, 2010

30 வருடமாக மருத்துவமனையில் அடைக்கலம்.. மூதாட்டியின் அவல நிலை



  

உடல் எடையை குறைக்க

“How to become thin” is a common question in people’s mind who is suffering from obesity. If you think you are fat and you want to become thin, then here are some important tips:
  1. Eating in hurry will increase the obesity. So do not eat food fast.
  2. Do not search any fast option for weight loss. Dieting helps to reduce weight fast but when you stop it your weight increases again fast.
  3. Drink at least 8-10 glasses of water every day.
  4. Give at least 2-3 hour gap between each meal.
  5. Depending on your lifestyle, you have to decide how much quantity of food you should intake for reducing calories.
  6. Only food controlling is not important for become thin. Doing exercise is also important, many options are available for exercise such as yoga, dancing, walk, gym, cycling, aerobics etc.
  7. Eat fresh fruits and vegetables. And don’t be hungry or empty stomach for very long hours.
  8. Avoid junk foods and excessive fats like soft drinks, ice cream, butter, chips, bread, pizza etc.

அழகரின் வரலாறும்: அழகர்கோவிலின் சிறப்பம்சமும்

களுக்கு
ஒரு காலத்தில் இந்த உலகில் இறப்பு என்பதே இல்லாமல் இருந்தது. ஏனெனில் யாரும் தவறு செய்வதே கிடையாது. இருந்தும் ஒருவன் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்வதற்காக துரத்தி வரும் போது அங்கு வந்த தர்மதேவன் அவனை ஒரே அடியில் வீழ்த்தினார். இந்த விஷயத்தை கேள்விப் பட்ட சிவன், உலகில் தர்ம,நியாயம் அழிந்து விடக்கூடாது.


அதை பாதுகாப்பது உன் பொறுப்பு. எனவே அதற்குரிய உருவத்தை உனக்கு தருகிறேன் என கூறி தர்மதேவனுக்கு, பற்கள் வெளியே தெரியும் படி ஒரு கொடூரமான உருவத்தை வழங்கி விட்டார். இதைக்கண்ட உயிர்கள் நாம் தப்பு செய்தால் தர்மதேவன் அழித்து விடுவான் என்று பயம் கொண்டன. நல்லது செய்யப்போய் நமது உருவம் இப்படி ஆகி விட்டதே என கவலை கொண்டான் தர்மதேவன். சரி! நமது உருவம் தான் இப்படி ஆகி விட்டது. நாம் தினமும் எழுந்தவுடன் விழிக்கும் முகமாகவது மிகவும் அழகாக இருக்க வேண்டும் என இந்த அழகர்கோவில் மலையில் தவம் இருந்தான். இவனது தவத்திற்கு மகிழ்ந்த அழகின் தெய்வமான விஷ்ணு, இவனுக்கு காட்சி கொடுத்து ''வேண்டியதை கேள்'' என்று கூறினார். அதற்கு தர்மதேவன், நான் இந்த மலையில் தவம் செய்த போது காட்சி கொடுத்தீர்கள். எனவே நீங்கள் நிரந்தரமாக இங்கேயே எழுந்தருளவேண்டும். அத்துடன் தினமும் ஒரு முறையாவது உங்களுக்கு பூஜை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும் என்றான்.


தர்மதேவனின் வேண்டுகோளின் படி மகாவிஷ்ணு சுந்தரராஜப்பெருமாளாக இந்த மலையில் எழுந்தருளினார். சுந்தரம் என்றால் 'அழகு'. எனவே அழகர் என்ற பெயரே நிலைத்து விட்டது. அத்துடன் தர்மதேவனுக்கு காட்சி கொடுத்த மலை அழகர் மலை என்றானது. இன்றும் கூட அழகர்கோவிலில் அர்த்தஜாம பூஜையை தர்மதேவனே செய்வதாக ஐதீகம்.


தல சிறப்பு : பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஸ்ரீரங்கம் முதலிடத்தையும், காஞ்சிபுரம் அடுத்த இடத்தையும் மூன்றாவது இடத்தை அழகர்கோவிலும் பெற்றுள்ளன. இத்தலத்தை பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ் வார், திருமங்கையாழ்வார், ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர். பீஷ்மரும், பஞ்சபாண்டவர்களும் இத்தல பெருமாளை தரிசித்து பலனடைந்துள்ளனர்.


கள்ளழகர் என்ற பெயர் எப்படி ஏற்பட்டது : அழகர்கோவில் மூலவர் பரமசாமி. ஸ்ரீதேவி,பூதேவியுடன் அருள்பாலிக்கிறார். மகாவிஷ்ணுவின் திருக்கோலங்களிலேயே அழகர்கோவிலில் உள்ள சுந்தரராஜப்பெருமாள் தான் பெயருக் கேற்றாற் போல் மிகவும் அழகாக இருப்பார். தர்மதேவனுக்கு காட்சி தர பெருமாள் வந்ததால் வைகுண்டத்தில் பெருமாளை காணாமல் மகாலட்சுமி பெருமாளைத்தேடி இங்கு வந்துவிட்டாள். மகாவிஷ்ணுவை விட மிக அழகான லட்சுமியைக்கண்ட தர்மதேவன், மகாலட்சுமியும் பெருமாளுக்கு அருகில் இங்கேயே தங்க வேண்டும் என அடம் பிடித்தார். இவனது வேண்டுகோளின் படி மகாலட்சுமி பெருமாளை கைப்பிடித்து அவருக்கு அருகில் கல்யாண சுந்தரவல்லி எனும் திருநாமத்துடன் இங்கு வீற்றிருக்கிறாள். இப்படி அழகான இருவரது திருமணக்கோலம் அனைவர் மனதையும் திருடிக்கொண்டது. மக்கள் மனதை கொள்ளை கொண்டதால் அழகர் 'கள்ளழகர்' ஆனார். இதனாலேயே இந்த பெருமாளை நம்மாழ்வார், 'வஞ்சக்கள்வன் மாமாயன்' என்கிறார்.


தேனூர் மண்டபத்தில் நடந்த விழா : மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் கொடுப்பதற்காக அழகர் கோயிலிலிருந்து மதுரைக்கு வரும் அழகர், தேனூர் மண்டபத்தில் சித்ரா பவுர்ணமிக்கு மறுநாள் காட்சி தரும் சித்திரை திருவிழா ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தது. அதே போல் மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்பு வரை மாசிமாதம் பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வந்தது. இப்படி சைவத்திற்கு தனிவிழா, வைணவத்திற்கு தனி விழா என மதுரையில் கொண்டாடப்பட்டு வந்ததை திருமலை நாயக்கர் இரண்டு விழாவையும் ஒன்றாக்கி சைவ, வைணவ ஒற்றுமை திருவிழாவாக ஆக்கி விட்டார்.


வைகை தோன்றியது எப்படி : மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண விருந்து சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. தங்கள் வீட்டு விருந்தைப் பற்றி பெருமையுடன் சிவனிடம் பெண் வீட்டார் பேசினர். ''தங்களுடன் வந்துள்ள அனைவரும் உடனடியாக சாப்பிடச் சொல்லுங்கள். இங்கே உணவுவகை கொட்டிக் கிடக்கிறது. சாப்பிடாமல் இருந்தால் வீணாக அல்லவா போய் விடும்?'' என்றனர். சிவன் அவர்களிடம், ''இப்போது யாருமே பசியில்லை என்கிறார்கள். இதோ, எனது கணங்களில் ஒருவனான இந்த குண்டோதரனுக்கு முதலில் விருந்து வையுங்கள். மற்றவர்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம்,'' என்றார்.


விருந்தை மருந்தைப் போல ஒரே வாயில் போட்டு மென்று விட்டான் குண்டோதரன். பெண் வீட்டார் திகைத்தனர்.''மற்றவர்களை எப்படி சமாளிக்கப் போகிறோம். இந்த குண்டோதரன் இப்போது தின்றது போதாதென்று இன்னும் கேட்கிறானே,'' என வெட்கி நின்ற அவர்கள் அந்த இறைவனையே சரணடைந்தனர். திருமண வீட்டில் பெருமை பேசக்கூடாது என்பது இதனால் தான். அரண்மனைவாசிகளாயினும் அகந்தை கூடாது என்பது இச்சம்பவம் தரும் தத்துவம். சிவன் அன்னபூரணியை அழைத்தார். அவள் கொடுத்த உணவை சாப்பிட்டு விட்டு ஆறு, குளம், குட்டை, வாய்க்கால், ஏரி இவைகளில் உள்ள தண்ணீர் எல்லாம் குடித்து முடித்தான் குண்டோதரன்.அப்படியும் தாகம் தீராததால் ஈசனிடம் வந்து முறையிட்டான்.


ஈசன் தன் சடை முடியிலிருந்த கங்கையிடம், '' மதுரை நகருக்கு உடனே தண்ணீர் தேவைப்படுகிறது.  உடனே அங்கு பாய்ந்தோடு,'' என கட்டளையிட்டார். குண்டோதரனிடம், '' நீர் வரும் திசைநோக்கி கை வை. அந்த நீரை குடித்து உன் தாகத்தை தீர்த்து கொள்,'' என்றார். இதுவே 'வைகை' ஆனது. கங்கை பாய்ந்ததால் வைகையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. எனவே அது புண்ணிய நதியாக மாறியது. இப்படி கங்கையையும் வைகையையும் இணைக்கும் திட்டத்தை சிவன் அன்றே உருவாக்கி வைத்திருக்கிறார். இந்த நதி காற்றை விட வேகமாக வந்ததால் 'வேகவதி' எனப்பட்டது.வைகையை பாழடித்து விட்ட நாம், அழகரையே வாய்க்கால் கட்டி இறக்கி விட்டிருக்கும் நாம், அவரிடம் பாவங்களுக்கெல்லாம் மன்னிப்பு கேட்டு, மழை பொழிய வேண்டுவோம்.


அழகர்கோவிலின் சிறப்பம்சம் :கருப்பண்ணசுவாமி: இத்தலத்தில் காவல் தெய்வமாக விளங்கும் கருப்பண்ணசுவாமி மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம்.பதினெட்டாம்படியான் என்று பக்தர்கள் மிகவும் பயபக்தியோடு அழைக்கப்படுகிறார்.இவரை கும்பிட்டால் நினைத்த காரி யங்கள் கைகூடும்.


கோட்டை: விவசாயிகள் விளைச்சல் அறுவடைக்கு முன்பு தங்கள் நிலத்தில் குறிப்பிட்ட இடத்தில் கோட்டை கட்டி அதில் இருக்கும் தானியங்களை அழகருக்கு காணிக்கையாக செலுத்துவார்கள்.


அழகர் கோயில் தோசை: காணிக்கையாகக் கிடைக்கும் தானியங்களை அரைத்து மாவாக்கி அதில் கோயில் சார்பாக தோசை சுட்டு பிரசாதமாகத் தரப்படுகிறது. இது பழநி பஞ்சாமிர்தம், திருப்பதி லட்டு போன்று மிகவும் புகழும், சிறப்பும் உடையது.


நூபுர கங்கை : சிலம்பாறு - ராக்காயி அம்மன் கோயில் அம்மன் கால் சிலம்பிலிருந்து மலைக்குகைக்குள் இருந்து வற்றாத ஜீவ நதியாக வந்து கொண்டிருக்கிறது 
* மூலவர் மானிட பிரதிஷ்டை இல்லை. தெய்வ பிரதிஷ்டை. 
* பெருமாள் சப்தரி ஷிகள் சப்த கன்னிகள் பிரம்மா விக்னேஷ்வர் ஆகியோரால் ஆராதிக்கப்படுகிறார்.
* 6 ஆழ்வார்களாலும் பாடல் பெற்ற முக்கிய திவ்ய தேசம் 
* சக்கரத்தாழ்வார் சப்த கன்னிகளால் ஆராதிக்கப்படுகின்றார். 
* மற்ற தலங்களில் நின்ற கோலத்தில் மட்டுமே காட்சி தரும் ஆண்டாள் உற்சவராக உட்கார்ந்திருக்கிறார்.


மண்டூக முனிவருக்கு விமோசனம் தந்த விழா : முன்னொரு காலத்தில் மகாவிஷ்ணு இந்த உலகை அளக்க தனது திருவடியை தூக்கினார். அப்போது பிரம்மன், திருமாலின் தூக்கிய திருவடியை கழுவி பூஜை செய்தார். அப்படி கழுவிய போது திருமாலின் கால்சிலம்பு(நூபுரம்) அசைந்து அதிலிருந்து நீர்த்துளி பூமியிலுள்ள அழகர்மலை மீது விழுந்தது. கங்கையை விட புண்ணியமான இந்த தீர்த்தமே, நூபுர கங்கை என்ற பெயரில் இன்னும் அழகர் கோவில் மலையில் வந்து கொண்டிருக்கிறது. இந்த தீர்த்தத்தில் அமர்ந்து தான் சுபதஸ் என்ற முனிவர் அமர்ந்து பெருமாளை நினைத்து தியானம் செய்து கொண்டிருந் தார். அப்போது அவரைக்காண கோபக்கார முனிவரான துர்வாசர் அங்கு வந்தார். பெருமாளின் நினைப்பிலேயே இருந்த சுபதஸ் முனிவர், துர்வாசரை சரியாக உபசரிக்கவில்லை. இதனால் கோபமடைந்து துர்வாசர், ''மண்டூக பவ'' அதாவது, மண்டூகமான நீ மண்டூகமாகவே (தவளை) போ என சாபமிட்டார். இந்த சாபத்தினால் பதறிய சுபதஸ் முனிவர், துர்வாசரே, பெருமாளின் நினைப்பில் இருந்ததினால் உங்களை சரியாக உபசரிக்க முடியவில்லை, எனவே எனக்கு சாபவிமோசனம் தந்தருள வேண்டும் என வேண்டினார்.அதற்கு துர்வாசர், வேதவதி என்கிற வைகை ஆற்றில் தவம் செய். அப்போது அழகர்கோவிலிலிருந்து வரும் பெருமாளால் உனக்கு சாபவிமோசனம் கிடைக்கும் என கூறி செல்கிறார். சித்திரை திருவிழாவிற்காக அழகர்கோவிலிலிருந்து கிளம்பும் பெருமாள்,மதுரை தல்லாகுளத்தில் ஆண்டாள் தொடுத்த மாலையை சூட்டிக்கொண்டு குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்குகிறார்.அழகர்கோவிலில் இருந்து பல்லக்கில் கிளம்பும் அழகர் பின் குதிரை வாகனம், சேஷவாகனம் என மாறுகிறார். சித்ராபவுர்ணமிக்கு மறுநாள், தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு காட்சி தந்து சாபவிமோசனம் தருகிறார். இதன் பின் ராமராயர் மண்டகப்படியில் தசாவதாரம் எடுக்கிறார்.


நேர்த்திக்கடன் : தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றி கொடுத்த அழகருக்கு பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனாக முடிக்காணிக்கை தருகின்றனர். எடைக்கு எடை நாணயம், எடைக்கு எடை தானியங்கள் ஆகியவற்றை தருகின்றனர். இத்தலத்தில் துலாபாரம் மிகவும் சிறப்பு.பெருமாளுக்கு தூய உலர்ந்த ஆடை சாத்தலாம்.ஊதுவத்தி, வெண்ணெய் சிறு விளக்குகள் துளசி தளங்கள் பூக்கள் பூமாலைகள் முதலியன படைக்கலாம். பிரசாதம் செய்து அழகருக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு கொடுக்கலாம்.இது தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.

முன் முளைத்து, இன்று விஸ்வரூபமாக வளர்ந்திருக்கும் இந்த புது கலாச்சாரத்தில் சமீபகாலமாக குழந்தைகளும் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். பெற்றோர்களும் சினிமா திரையில் தோன்றும் கவர்ச்சி நடிகைக்கு நிகராக குழந்தைகளை மேடையில் ஆட விட்டு ரசிக்கிறார்கள். இந்த விவகாரம்தான் இப்போது ஆந்திர சின்னத்திரை வட்டாரத்தை கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கிறது.


குழந்தைகளை அரை நிர்வாண ஆட்டம் போட வைக்கும் தனியார் டி.வி., சேனல்கள் மீது ஆந்திராவை சேர்ந்த சமூக சேவகி ஒருவர் மனித உரிம‌ை கமிஷனில் புகார் செய்தார். அதில், ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் தனியார் டி.வி.க்கள் குழந்தைகளை அரை நிர்வாணமாக ஆட வைக்கின்றனர். இது பிஞ்சு உள்ளங்கள் மனதில் விஷ கலாசாரத்தை பரப்புவதாக உள்ளது. தனியார் டி.வி.க்கள் தங்களது நிகழ்ச்சியை பிரபலப்படுத்த எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. அதை விட்டுவிட்டு குழந்தைகளை அலங்கோலமாக்கி ஆட வைப்பது நல்லதல்ல. இது அந்த சிறுமிகளின் எதிர் காலத்தை கடுமையாக பாதிக்கும். பெற்றோர்களும் டி.வி. சானல்கள் தரும் பணத்திற்கு ஆசைப்பட்டு தங்கள் குழந்தைகளை ஆட விடுகிறார்கள். எனவே குழந்தைகளை நிர்வாணமாக ஆட விடும் டி.வி.சானல் உரிமையாளர்கள், பெற்றோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.


சின்னத்திரை உலகத்தையே பரபரக்க வைத்த இந்த புகார் குறித்து ஆந்திர மனித உரிமை கமிஷனர் சுபாஷன் ரெட்டி விசாரித்தார். அப்போது அரை நிர்வாண நடனம் ஆடிய குழந்தைகளின் பெற்றோர் மற்றும் டி.வி., நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது சுபாஷன் ரெட்டி கூறுகையில், டி.வி., சானல்களில் குழந்தைகளை அரை நிர்வாணமாக ஆட விடுவது குற்றமாகும். இது நம் நாட்டின் கலாசாரத்திற்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல, குழந்தைகளின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கக்கூடியது. குழந்தைகளை வலுக்கட்டாயமாக இந்த மாதிரியான நிகழ்ச்சிகளில் பெற்றோர் ஆட விடக்கூடாது. இது குழந்தைகளின் உரிமைகளை பறிக்கும் செயலாகும். இனியும் பெற்றோரும், டி.வி. சேனல் நிர்வாகிகளும் குழந்தைகளை அலங்கோலப்படுத்தி ஆடவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்று எச்சரிக்கை விடுத்தார்.


இந்த விவகாரத்தில் திருந்த வேண்டியது தனியார் டி.வி., சேனல்களா அல்லது டி.வி., மோகத்தால் குழந்தைகளை அரைகுறை ஆடையுடன் ஆபாச ஆட்டம் போடவைக்கும் பெற்றோர்களா?
Tags »
Obscene, dance, Tv, reality show, டி.வி., ரியாலிட்டி ஷோ, சின்னத்திரை, சர்ச்
க்கு நிகராக குழந்தைகளை மேடையில் ஆட விட்டு ரசிக்கிறார்கள். இந்த விவகாரம்தான் இப்போது ஆந்திரடி.வி.,க்களில் ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் ஆபாச நடனம் ஆடுவதும், ஆட்டம் போடும் பெண்களை ஆபாசமாக வர்ணிப்பதும் டி.வி., சேனல்களுக்கு புதிதல்ல. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முளைத்து, இன்று விஸ்வரூபமாக வளர்ந்திருக்கும் இந்த புது கலாச்சாரத்தில் சமீபகாலமாக குழந்தைகளும் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். பெற்றோர்களும் சினிமா திரையில் தோன்றும் கவர்ச்சி நடிகைக்கு நிகராக குழந்தைகளை மேடையில் ஆட விட்டு ரசிக்கிறார்கள். இந்த விவகாரம்தான் இப்போது ஆந்திர சின்னத்திரை வட்டாரத்தை கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கிறது.

குழந்தைகளை அரை நிர்வாண ஆட்டம் போட வைக்கும் தனியார் டி.வி., சேனல்கள் மீது ஆந்திராவை சேர்ந்த சமூக சேவகி ஒருவர் மனித உரிம‌ை கமிஷனில் புகார் செய்தார். அதில், ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் தனியார் டி.வி.க்கள் குழந்தைகளை அரை நிர்வாணமாக ஆட வைக்கின்றனர். இது பிஞ்சு உள்ளங்கள் மனதில் விஷ கலாசாரத்தை பரப்புவதாக உள்ளது. தனியார் டி.வி.க்கள் தங்களது நிகழ்ச்சியை பிரபலப்படுத்த எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. அதை விட்டுவிட்டு குழந்தைகளை அலங்கோலமாக்கி ஆட வைப்பது நல்லதல்ல. இது அந்த சிறுமிகளின் எதிர் காலத்தை கடுமையாக பாதிக்கும். பெற்றோர்களும் டி.வி. சானல்கள் தரும் பணத்திற்கு ஆசைப்பட்டு தங்கள் குழந்தைகளை ஆட விடுகிறார்கள். எனவே குழந்தைகளை நிர்வாணமாக ஆட விடும் டி.வி.சானல் உரிமையாளர்கள், பெற்றோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

சின்னத்திரை உலகத்தையே பரபரக்க வைத்த இந்த புகார் குறித்து ஆந்திர மனித உரிமை கமிஷனர் சுபாஷன் ரெட்டி விசாரித்தார். அப்போது அரை நிர்வாண நடனம் ஆடிய குழந்தைகளின் பெற்றோர் மற்றும் டி.வி., நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது சுபாஷன் ரெட்டி கூறுகையில், டி.வி., சானல்களில் குழந்தைகளை அரை நிர்வாணமாக ஆட விடுவது குற்றமாகும். இது நம் நாட்டின் கலாசாரத்திற்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல, குழந்தைகளின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கக்கூடியது. குழந்தைகளை வலுக்கட்டாயமாக இந்த மாதிரியான நிகழ்ச்சிகளில் பெற்றோர் ஆட விடக்கூடாது. இது குழந்தைகளின் உரிமைகளை பறிக்கும் செயலாகும். இனியும் பெற்றோரும், டி.வி. சேனல் நிர்வாகிகளும் குழந்தைகளை அலங்கோலப்படுத்தி ஆடவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்று எச்சரிக்கை விடுத்தார்.

இந்த விவகாரத்தில் திருந்த வேண்டியது தனியார் டி.வி., சேனல்களா அல்லது டி.வி., மோகத்தால் குழந்தைகளை அரைகுறை ஆடையுடன் ஆபாச ஆட்டம் போடவைக்கும் பெற்றோர்களா
சின்னத்திரை வட்டாரத்தை கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கிறது.

குழந்தைகளை அரை நிர்வாண ஆட்டம் போட வைக்கும் தனியார் டி.வி., சேனல்கள் மீது ஆந்திராவை சேர்ந்த சமூக சேவகி ஒருவர் மனித உரிம‌ை கமிஷனில் புகார் செய்தார். அதில், ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் தனியார் டி.வி.க்கள் குழந்தைகளை அரை நிர்வாணமாக ஆட வைக்கின்றனர். இது பிஞ்சு உள்ளங்கள் மனதில் விஷ கலாசாரத்தை பரப்புவதாக உள்ளது. தனியார் டி.வி.க்கள் தங்களது நிகழ்ச்சியை பிரபலப்படுத்த எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. அதை விட்டுவிட்டு குழந்தைகளை அலங்கோலமாக்கி ஆட வைப்பது நல்லதல்ல. இது அந்த சிறுமிகளின் எதிர் காலத்தை கடுமையாக பாதிக்கும். பெற்றோர்களும் டி.வி. சானல்கள் தரும் பணத்திற்கு ஆசைப்பட்டு தங்கள் குழந்தைகளை ஆட விடுகிறார்கள். எனவே குழந்தைகளை நிர்வாணமாக ஆட விடும் டி.வி.சானல் உரிமையாளர்கள், பெற்றோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

சின்னத்திரை உலகத்தையே பரபரக்க வைத்த இந்த புகார் குறித்து ஆந்திர மனித உரிமை கமிஷனர் சுபாஷன் ரெட்டி விசாரித்தார். அப்போது அரை நிர்வாண நடனம் ஆடிய குழந்தைகளின் பெற்றோர் மற்றும் டி.வி., நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது சுபாஷன் ரெட்டி கூறுகையில், டி.வி., சானல்களில் குழந்தைகளை அரை நிர்வாணமாக ஆட விடுவது குற்றமாகும். இது நம் நாட்டின் கலாசாரத்திற்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல, குழந்தைகளின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கக்கூடியது. குழந்தைகளை வலுக்கட்டாயமாக இந்த மாதிரியான நிகழ்ச்சிகளில் பெற்றோர் ஆட விடக்கூடாது. இது குழந்தைக
டி.வி.,க்களில் ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் ஆபாச நடனம் ஆடுவதும், ஆட்டம் போடும் பெண்களை ஆபாசமாக வர்ணிப்பதும் டி.வி., சேனல்களுக்கு புதிதல்ல. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முளைத்து, இன்று விஸ்வரூபமாக வளர்ந்திருக்கும் இந்த புது கலாச்சாரத்தில் சமீபகாலமாக குழந்தைகளும் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். பெற்றோர்களும் சினிமா திரையில் தோன்றும் கவர்ச்சி நடிகைக்கு நிகராக குழந்தைகளை மேடையில் ஆட விட்டு ரசிக்கிறார்கள். இந்த விவகாரம்தான் இப்போது ஆந்திர சின்னத்திரை வட்டாரத்தை கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கிறது.

குழந்தைகளை அரை நிர்வாண ஆட்டம் போட வைக்கும் தனியார் டி.வி., சேனல்கள் மீது ஆந்திராவை சேர்ந்த சமூக சேவகி ஒருவர் மனித உரிம‌ை கமிஷனில் புகார் செய்தார். அதில், ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் தனியார் டி.வி.க்கள் குழந்தைகளை அரை நிர்வாணமாக ஆட வைக்கின்றனர். இது பிஞ்சு உள்ளங்கள் மனதில் விஷ கலாசாரத்தை பரப்புவதாக உள்ளது. தனியார் டி.வி.க்கள் தங்களது நிகழ்ச்சியை பிரபலப்படுத்த எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. அதை விட்டுவிட்டு குழந்தைகளை அலங்கோலமாக்கி ஆட வைப்பது நல்லதல்ல. இது அந்த சிறுமிகளின் எதிர் காலத்தை கடுமையாக பாதிக்கும். பெற்றோர்களும் டி.வி. சானல்கள் தரும் பணத்திற்கு ஆசைப்பட்டு தங்கள் குழந்தைகளை ஆட விடுகிறார்கள். எனவே குழந்தைகளை நிர்வாணமாக ஆட விடும் டி.வி.சானல் உரிமையாளர்கள், பெற்றோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

சின்னத்திரை உலகத்தையே பரபரக்க வைத்த இந்த புகார் குறித்து ஆந்திர மனித உரிமை கமிஷனர் சுபாஷன் ரெட்டி விசாரித்தார். அப்போது அரை நிர்வாண நடனம் ஆடிய குழந்தைகளின் பெற்றோர் மற்றும் டி.வி., நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது சுபாஷன் ரெட்டி கூறுகையில், டி.வி., சானல்களில் குழந்தைகளை அரை நிர்வாணமாக ஆட விடுவது குற்றமாகும். இது நம் நாட்டின் கலாசாரத்திற்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல, குழந்தைகளின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கக்கூடியது. குழந்தைகளை வலுக்கட்டாயமாக இந்த மாதிரியான நிகழ்ச்சிகளில் பெற்றோர் ஆட விடக்கூடாது. இது குழந்தைகளின் உரிமைகளை பறிக்கும் செயலாகும். இனியும் பெற்றோரும், டி.வி. சேனல் நிர்வாகிகளும் குழந்தைகளை அலங்கோலப்படுத்தி ஆடவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்று எச்சரிக்கை விடுத்தார்.

இந்த விவகாரத்தில் திருந்த வேண்டியது தனியார் டி.வி., சேனல்களா அல்லது டி.வி., மோகத்தால் குழந்தைகளை அரைகுறை ஆடையுடன் ஆபாச ஆட்டம் போடவைக்கும் பெற்றோர்களா
ளின் உரிமைகளை பறிக்கும் செயலாகும். இனியும் பெற்றோரும், டி.வி. சேனல் நிர்வாகிகளும் குழந்தைகளை அலங்கோலப்படுத்தி ஆடவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்று எச்சரிக்கை விடுத்தார்.

இந்த விவகாரத்தில் திருந்த வேண்டியது தனியார் டி.வி., சேனல்களா அல்லது டி.வி., மோகத்தால் குழந்தைகளை அரைகுறை ஆடையுடன் ஆபாச ஆட்டம் போடவைக்கும் பெற்றோர்களா

13 மணி நேரத்தில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் பெண்; ஸ்பெயின் நாட்டுக்காரரின் சாதனையை முறியடித்தார்


காத்மாண்டு, ஏப். 28-

உலகிலேயே மிக உயரமான இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி பலர் சாதனை படைத்துள்ளனர். இந்த நிலையில் தென் கொரியாவை சேர்ந்த ஓ யுன்-சன் (44) என்ற பெண் 13 மணி நேரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

இவர் எவரெஸ்ட் சிகரத்துக்கு செல்லும் 14 மலை முகடுகளில் கடைசியில் உள்ள அன்னபூர்னாவில் இருந்து 13 மணி நேரத்தில் 26,247 அடி (8 ஆயிரம் மீட்டர்) உயர சிகரத்தில் ஏறினார்.

இதற்கு முன்பு ஸ்பெயின் நாட்டை சேர்ந்த எடுர்ன் பசயின் (26) என்பவர் 26,330 அடி உயரம் ஏறி இருந்தார். அவரது சாதனையை நேற்று இவர் முறியடித்தார். எவரெஸ்ட் உச்சியில் ஏறிய அவர் அங்கு தென்கொரிய நாட்டின் கொடியை அசைத்தார்.

இந்த சாதனை நிகழ்ச்சியை தென் கொரியாவின் கேபிஎஸ் என்ற டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பியது.

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த ஒயுன்-சன்னு தென் கொரிய அதிபர் லீ மியுங் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். அவரது மிகப் பெரிய சாதனையை பாராட்டுவதாகவும் அவரைப்பற்றி பெருமைப்படுவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

தனது சாதனை பற்றி கூறும் போது, எவரெஸ்டில் ஏறியவுடன் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அதை தென்கொரிய மக்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்று ஓயுன்-சன் தெரிவித்தார்.

ஜாக்கெட் கிழிந்ததாக அ.தி.மு.க., பெண் எம்.எல்.ஏ.,புகார்

சென்னை :  சட்டசபையில் பேச வாய்ப்பு கேட்டு அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க., கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். சபையில் இருந்து வெளியேற்றும்போது, சபைக் காவலர்கள் தங்களை தாக்கியதாக ஆண் எல்.எல்.ஏ.,க்களும், பெண் எம்.எல்.ஏ., ஒருவரின் ஜாக்கெட் கிழிந்ததாகவும் புகார் எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டசபையில் நேற்று காலை கேள்வி நேரம் துவங்கியதும், காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயகுமாரின் கேள்விக்கு அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பதில் அளிக்கத் துவங்கினார். அப்போது, அ.தி.மு.க., - ம.தி.மு.க., - மார்க்சிஸ்ட் - இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.,க்கள் எழுந்து நின்று தங்களை பேச அனுமதிக்குமாறு தொடர்ந்து குரல் எழுப்பினர்.அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், சபாநாயகர் இருக்கை முன்பாக ஒன்று திரண்டு விலைவாசி உயர்வைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். ம.தி.மு.க., - மார்க்சிஸ்ட் - இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.,க்களும் முன்பகுதிக்கு வந்து கோஷங்களை எழுப்பி, அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபையில் பரபரப்பு ஏற்பட்டது.இந்த கோஷங்களுக்கு மத்தியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயகுமாரின் கேள்விக்கு அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பதில் அளித்த வண்ணம் இருந்தார்.

'நீங்களாக சபையில் இருந்து வெளியேறினால் மீண்டும் உள்ளே வரலாம். நானாக, வெளியேற்றினால் திரும்ப உள்ளே வர முடியாது' என அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களை, சபாநாயகர் எச்சரித்தார்.இதன் பிறகும் கோஷங்களை எழுப்புவதை அ.தி.மு.க.,வினர் தொடர்ந்தனர். பொள்ளாச்சி ஜெயராமன் கோஷங்களை படிக்க, அதை அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் திரும்ப கூறினர். ' கேள்வி நேரம் முடிந்ததும் உங்களுக்கு நேரம் ஒதுக்கித் தருகிறேன். சபை நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம்' என, சபாநாயகர் மீண்டும் வேண்டுகோள் விடுத்தார்.

அப்போது, நிதியமைச்சர் அன்பழகன் பேசும்போது, ' கேள்வி நேரம் முடிந்ததும், எந்தவொரு எம்.எல்.ஏ.,வோ, கட்சித் தலைவரோ தங்கள் கருத்துகளை தெரிவிக்கவும், அரசை கண்டித்துப் பேசவும் உரிமை உண்டு. கேள்வி நேரம் என்பது அவையில் உரிமை. அதை மாற்ற முடியாது. இப்போது எழுந்து நின்று குரல் எழுப்புவது அவை நடவடிக்கைகளை தடுப்பதாக பொருள்படும்' என்றார்.

'சபை நடவடிக்கைகளை பாதிக்கும் வகையில் செயல்படும் இவர்களை வெளியேற்ற வேண்டும்' என, அமைச்சர் துரைமுருகன் கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க., கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் ஆவுடையப்பன் உத்தரவிட்டார்.எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்றும் பணியில் சபைக்காவலர்கள் ஈடுபட்டனர். அப்போது, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமனின் கையைப் பிடித்து இழுத்து வெளியேற்ற, காவலர் ஒருவர் முயற்சித்தார். இதை தடுத்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ., செ.ம.வேலுச்சாமி, காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இருவரையும் சபைக்காவலர்கள், 'நகர்த்தி' வெளியேற்றினர். அதே போல், அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சி.வி. சண்முகத்தை வெளியேற்றும்போது, தள்ளுமுள்ளு நடந்தது. அவரது ஒரு செருப்பு சபைக்குள் மாட்டிக் கொண்ட நிலையில், ஒற்றை செருப்புடன் சபையில் இருந்து வெளியேறினார். பின், அதையும் சபைக்கு வெளியே விட்டு விட்டு வெளிநடப்பில் பங்கேற்றார்.

சபைக்கு வெளியே எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், கொறடா செங்கோட்டையன் ஆகியோர் கூறும்போது, 'முக்கியப் பிரச்னைகளின் போது, கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து பேச சபையில் வாய்ப்பு கொடுத்துள்ளனர். விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இன்று, 'பந்த்' நடக்கும் நிலையில், அது பற்றி சட்டசபையில் பேச அனுமதி மறுக்கப்பட்டது.தொடர்ந்து பேச முற்பட்டபோது, எங்களை வெளியேற்றியுள்ளனர். நாங்களாக வெளியேறும்முன், சபைக் காவலர்களை வைத்து எங்களை தர, தர என இழுத்து வெளியேற்றினர். இது போன்ற சம்பவத்தை சபாநாயகரும் வேடிக்கை பார்க்கிறார்' என்றனர்.

எம்.எல்.ஏ.,க்கள் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோரை சபைக் காவலர்கள் வயிற்றில் குத்தியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.

பெண் எம்.எல்.ஏ.,க்கள் புகார்: அ.தி.மு.க., பெண் எம்.எல்.ஏ., பதர் சயீது கூறும்போது, ''நாங்கள் வெளியேற வந்தபோது, வலுக்கட்டாயமாக இழுத்ததோடு, சபைக் காவலர்கள் என் வயிற்றில் குத்தினர். நான் வெளியில் போகவில்லை என்றால், தூக்கித்தான் செல்ல வேண்டும். அடிக்க இவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது' என்றார். இளமதி சுப்பிரமணியம் எம்.எல்.ஏ., கூறும்போது, 'பெண் காவலர்கள் சேலையை பிடித்து இழுத்தனர். இதனால், எனது ஜாக்கெட் கிழிந்து விட்டது' என்றார்.

Tuesday, April 27, 2010

WEB DESIGN FREE BOOK IN TAMIL

fur website

IPL திறந்து வைக்கும் ஜன்னல்களும் திறவா கதவுகளும்




சஞ்சய் மஞ்சிரேக்கர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இப்படி கூறுகிறார்: “முப்பத்திரண்டு வயதில் நான் ஏன் ஓய்வு பெற்றேன் என்று பலரும் கேட்டார்கள். ரஞ்சிப் போட்டிகளில் காலியான மைதானத்தில் கடுமையாக உழைத்து சதம் அடிக்க அதற்கு மேலும் நான் விரும்ப வில்லை என்பதே காரணம்”. அவர் மேலும் கூறுகிறார்: “என் காலத்தில் ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரர் நட்சத்திர அந்தஸ்து பெற நாலு பருவங்களில் ஏனும் ஆயிரம் ஓட்டங்கள் தொடர்ந்து குவிக்க வேண்டும். அப்போது தான் அவரது பெயரே மீடியாவில், ஆர்வலர்கள் மற்றும் தேர்வாளர்கள் இடையே லேசாக அடிபடத் தொடங்கும். பின்னர் அதிர்ஷடமிருந்தால் தேசிய அணிக்காக சில ஓட்டங்கள் ஆடினால் ஒரு குட்டி நட்சத்திரமாக சில காலம் இருக்கலாம்”. ஐ.பி.எல்லின் மகத்துவத்தை சஞ்சய் மற்றொரு உதாரணம் கொண்டு இப்படி விளக்குகிறார். ஐ.பி.எல்லை ஆரம்ப தொண்ணூறுகளின் டி.வி ஒளிபரப்போடு ஒப்பிடுகிறார்: “பாகிஸ்தானில் சிறப்பாக ஆடி ஓட்டங்கள் குவித்தேன். அந்த டெஸ்டு தொடரை நேரடியாக ஒளிபரப்ப யாரும் முன்வர இல்லை. இதனால் எனக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை. அடுத்த டெஸ்டு தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்தது. நேரடியாக டி.வியில் ஒளிபரப்பினார்கள். நம்ப மாட்டீர்கள். அந்த தொடரில் படுமோசமாக ஆடி சொற்ப ஓட்டங்களே எடுத்தேன். ஆனால் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா திரும்பிய போது நான் நட்சத்திரம் ஆகி விட்டேன். பார்த்த இடத்தில் எல்லாம் மக்கள் என்னை கண்டுகொண்டார்கள்; அங்கீகரித்தார்கள். கிரிக்கெட் அல்ல டீ.வி என்னை நட்சத்திரமாக்கியது”. அடுத்து இந்த தலைமுறையின் ஐ.பி.எல் நட்சத்திரமான ஜார்கண்ட் மட்டையாளர் சவுரப் திவாரி சொல்வதை கவனியுங்கள்: “ரஞ்சி ஆட்டங்களில் நான் என்னதான் திரும்பத் திரும்ப சிறப்பாக சதம் அடித்தாலும் அதிகபட்சமாய் பத்திரிகை கடைசி தாளில் சிறுகுறிப்பு எழுதுவார்கள். ஆனால் நான் இந்தியா முழுக்க பிரபலமாக ஐ.பி.எல்லில் இருபது ரன்கள் எடுத்தாலே போதும்.” ஐ.பி.எல் இளைய வீரர்களுக்கு அங்கீகாரம் தருவது உண்மைதான். ஆனால் சிறந்த இளந்திறமைகளை கண்டெடுக்க உதவுகிறதா? இதுதான் மேலும் முக்கியமான கேள்வி. Cricinfo பேட்டியில் ஹர்ஷா போக்ளே இந்த வலுவான ஐயத்தை எழுப்புகிறார் “சென்னை சூப்பர் கிங்ஸின் கோனி முதல் ஐ.பி.எல்லின் பெரும் கண்டுபிடிப்பாக கருதப்பட்டார். பிறகு இரண்டாவது, மூன்றாவது ஐ.பி.எல்களில் அவர் காணாமல் போனார். ராஜஸ்தான் ராயல்சின் அஸ்னோட்கருக்கும் இதுவே நடந்தது. ஐ.பி.எல்லில் நாம் கண்டடைந்ததாய் கொண்டாடி இப்படி தற்காலிக பெருமிதங்கள் அடையவா ஐ.பி.எல்?” இதற்கு பெங்களூர் ராயல் செலஞ்சர்சின் ராபின் உத்தப்பா இப்படி பதிலளிக்கிறார்: “ஐ.பி.எல் ஒரு இளைய வீரருக்கு புகழ்வெளிச்சத்தை நோக்கி ஒரு ஜன்னலை திறந்து கொடுக்கிறது. அவ்வளவே. அதனை ஒரு கதவாக மாற்றி சர்வதேச அளவில் ஒருநாள் அல்லது டெஸ்டு நட்சத்திரமாக உயர்வதற்கு தன்னை மேம்படுத்துவது அந்த குறிப்பிட்ட வீரரின் பொறுப்பே. ஜன்னலில் மட்டுமே அமர்ந்து புகழ் காய்வது போதும் என்றால் வாழ்வெல்லாம் அதனையும் கூட ஒருவர் செய்யலாம்”. இதுவரையிலான ஐ.பி.எல்களில் நம் இளைஞர்களின் சாதனை வரலாறு இந்த பதிலுக்குள் சுருங்கி விடுவது சற்றே கசப்பான நிஜம். 2010 ஐ.பி.எல்லில் திறமை, பொறுமை, மனஉறுதி கொண்ட எத்தனை பேர் நம் கவனத்தை கவர்ந்துள்ளார்கள்? சிறிய பட்டியல் இது. ஐ.பி.எல்லில் இவர்கள் சேகரித்த ஓட்டங்களோ வீழ்த்திய விக்கெட்டுகள் மட்டுமன்றி இயல்பான திறமை மற்றும் மனப்பக்குவத்தையுமே முக்கியமான அளவுகோலாக கொண்டுள்ளேன். இவர்களும் எதிர்காலத்தில் காணாமல் போகலாம் என்று அரைசிட்டிகை உப்பையும் இந்த உவப்பான கண்டுபிடிப்பு பட்டியலுடன் சேர்த்துக் கொள்ள பரிந்துரைக்கிறேன். இரண்டாக இந்த பட்டியலை வகைப்படுத்தலாம். நிலைத்து சோபித்தவர்கள். வந்த வேகத்தில் சற்றே கவனிக்கப்பட்டு மறைந்தவர்கள்..

பட்டியல் 1

ராபின் உத்தப்பா

















இந்த வருட ஐ.பி.எல்லின் மிகச்சிறந்த தருணம் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான பெங்களூர் ராயல் செலஞ்சர்ஸ் ஆட்டத்தில் வெளிப்பட்டது. முதலில் மட்டையாடிய பெங்களூர் அணி ஓட்டசேகரிப்பில் கியர் விழாமல் விமர்சகர்கள், வர்ணனையாளர்கள் மற்றும் பார்வையாள ஆதரவாளர்களிடம் இருந்து ஹாரன் மற்றும் வசை ஒலிகளை கேட்டுக் கொண்டிருந்தது. மூன்று விக்கெட்டுகள் இழந்த நிலையில் இங்கிலாந்தின் இயன் மோர்கன் அடுத்து ஆட வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மோர்கன் இங்கிலாந்தின் அடுத்த கெவின் பீட்டர்சனாக வர்ணிக்கப்படுபவர். 5 சர்வதேச T20 போட்டிகளில் அவரது சராசரி 59. ஸ்டிரைக் ரேட் 150. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இரு ஆட்டங்களை தனியொருவராக வென்றவர். இவருக்கு அடுத்து பெங்களூரின் மட்டை ஆட்டவரிசையில் இந்திய ஒருநாள் அணியில் நிரந்தர இடம் பெற்றுவிட்ட விராத் கோலி. இவருக்கும் அடுத்து தான் உத்தப்பா. உத்தப்பா இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டு இரு வருடங்களாகின்றன. இரண்டாவது ஐ.பி.எல்லில் அவரது ஆட்டத்தகுதி தரை தட்டி விட்டிருந்தது. 2009-ஐ.பி.எல்லின் இறுதி ஆட்டத்தில் பெங்களூர் சொற்ப ஓட்ட வித்தியாசத்தில் தோற்க உத்தப்பாவின் பரிதாபமான ஆட்டநிலையும் ஒரு காரணம். அடுத்து, சமீப ரஞ்சி தொடரில் அவரது ஆட்டநிலை மட்டுமல்ல மன-உறுதியும் சேதமுற்றிருந்தது. கர்நாடகாவின் தலைவராக ஆடிய உத்தப்பா மிகக் கோழைத்தனமாக நடந்து கொண்டார். மும்பைக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் அகார்க்கரின் வேகப்பந்துகளை சந்திக்க தயங்கி அவர் தனது வழக்கமான துவக்க நிலையில் ஆடாமல் வெகுவாக இறங்கி ஐந்தில் வந்தார். அப்போதும் அகார்க்கரிடமே விக்கெட்டை இழந்தார். இந்த ஐ.பி.எல்லிலும் சதா தலையை தொங்கப் போட்டு உற்சாகமின்றியே தெரிந்தார். ஆனால் இந்த குறிப்பிட்ட ஆட்ட கட்டத்தினோடு அனைத்தும் மாறிப் போனது. மோர்கன் மற்றும் கோலிக்கு பதிலாக உத்தப்பாவை களமிறக்கினார் அணித்தலைவர் கும்பிளே. இம்முடிவு வர்ணனையாளர்களிடம் கடுமையான கண்டனத்தை ஏற்படுத்தியது. சற்றும் எதிர்பாராமல் ரோபின் அடித்தாட ஆரம்பிக்க சட்டென்று தன் மேம்பட்ட ஆட்டநிலையை மீட்டெடுத்தார். 38 பந்துகளில் 68 விளாசி ஆட்டத்தை வென்றார். அப்போதில் இருந்து ஐ.பி.எல்லின் கடைசி ஆட்டம் வரை உத்தப்பா தான் பெங்களூர் அணியின் நட்சத்திர மட்டையாளர். மோர்கனும் கொலியும் கடைசி வரை ஒரு அரைசதம் கூட எடுக்கவில்லை. இங்கு இரண்டு அவதானிப்புகள். முடிவுகள் எடுப்பதிலும், சூழலுக்கு ஏற்றபடி நடந்து கொள்வதிலும் கும்பிளேவின் டைமிங் பிரபலமானது. கடந்த ஆஸி பயணத்தின் போது ”only one team played in the spirit of the game” என்று அவர் சொன்னது மொத்த தொடரின் வரலாற்றையும் மாற்றி அமைத்தது. அதே போன்றே மோசமான ஆட்டதகுதி காரணமாய் நீக்கப்பட்டிருந்த சேவாகை அத்தொடருக்காக முழுக்க தன் உள்ளுணர்வை நம்பி தேர்வாளர்களிடம் போராடி அணிக்குள் கொண்டு வந்தார். இன்று சேவாக் விஸ்டன் கிரிக்கெட்டராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு கும்பிளேவின் அம்முடிவும் ஒரு முக்கிய காரணம். உத்தப்பாவை முன்னதாக இங்கு கும்பிளே களமிறக்கியதும் இப்படி தன் உள்ளுணர்வை முழுக்க நம்பியே. இதனோடு உத்தப்பாவை விக்கெட் கீப்பராக பயன்படுத்தியதும் சிறப்பான பலனை கொடுத்தது. முன்னணி கீப்பர்களுக்கு இணையாக பங்காற்றினார் உத்தப்பா. அடுத்து, வெற்றிக்கு உழைப்பு, திறமை, பக்குவம் மட்டுமல்ல வெளியில் இருந்து கிடைக்கும் சிறு ஊக்கம் மற்றும் அதிர்ஷ்டக் கீற்றும் எப்படி முக்கியமாக உள்ளன எனப்தற்கு இந்த திருப்புமுனை ஒரு நல்ல உதாரணம்.

சவுரப் திவாரி



20 வயது திவாரி மகேந்திர சிங் தோனியின் மாநிலமான் ஜார்கண்டின் தற்போதைய அணித்தலைவர். உள்ளூர் போட்டிகளில் 50 சராசரியுடன் 19 ஆட்டங்களில் 5 சதங்கள் அடித்துள்ளார். உள்ளூர் ஒருநாள் ஆட்டங்களில் இவரது ஸ்டிரைக் ரேட் 89.08. T20 ஆட்டங்களில் 133.09. மும்பை இண்டியன்ஸ் அணிக்காக சச்சினால் கண்டடையப்பட்ட சவுரப் திவாரி இந்த ஐ.பி.எல்லில் மும்பை அணியின் பெரும்பாலான வெற்றிகளில் முக்கிய பங்காற்றி உள்ளார். திவாரியிடம் கவனம் கவரும் பண்புகள் இரண்டு. ஆட்டச்சூழல் தன்னை பாதிக்க அவர் அனுமதிப்பதில்லை. ஆட்டச்சூழலை கணித்து அதற்கு ஏற்றாற் போல் ஆடுகிறார். சமகால இந்திய மட்டையாளர்களில் மிக வலுவாகவும் பிசிறின்றியும் பந்தை நெடுந்தொலைவு அடிக்கக் கூடியவர்களில் திவாரி முன்னணியில் இருக்கிறார். தோனியின் ஆட்டமுறையை சற்றே நினைவுபடுத்தும் திவாரி அவரைப் போன்றே நீண்ட தலைமயிரும், உடல்மொழியும் கொண்டுள்ளார். இந்த ஒப்பீடு உருவாக்கும் அழுத்தம் தன்னை பாதிக்காமல் அவர் பார்த்துக் கொள்ள வேண்டும். ஐ.பி.எல் 2010-இன் சிறந்த 23 வயதுக்கு கீழான ஆட்டக்காரருக்கான விருதை திவாரி வென்றுள்ளார்.

அம்பத்தி ராயுடு



2010 ஐ.பி.எல்லில் மும்பை அணியின் மத்திய வரிசை மட்டையாட்டத்தை வழிநடத்தியது சவுரப் திவாரியுடன் சேர்ந்து அப்மத்தி ராயுடுவே. இவர் விக்கெட் கீப்பராகவும் மிக சிறப்பாக செயல்பட்டதால் மேலும் சில ஆல்ரவுண்டர்களை அணியில் நுழைக்க அணித்தலைவர் சச்சினால் முடிந்தது. ஒரு ஆட்டத்தில் 4 வெளிநாட்டு வீரர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால் சச்சின் திவாரி, ராயுடு போன்ற இந்திய இளைஞர்களிடம் மட்டையாட்ட பொறுப்பை ஒப்படைத்து விட்டு பந்து வீச்சுக்கு பெரும்பாலும் மலிங்கா, பெர்ணாண்டஸ், பொலார்டு போன்ற மூன்று வெளியூர் வீச்சாளர்களை பயன்படுத்தினார். இந்த திட்டவரைவுதான் மும்பையின் தொடர்ச்சியான வெற்றிகளுக்கு அடித்தளம். அம்பத்தி ராயுடுவின் ஆட்டவாழ்வு பெரும் எதிர்பார்ப்புகளுடன் ஆரம்பித்தது. 19-வயதினருக்கு கீழான ஆட்டமொன்றில் இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் ஆட்டத்தில் ராயுடு 177 அடிக்க அடுத்த டெண்டுல்கராக விமர்சகர்கள் கையில் மகுடத்துடன் அவரை வரவேற்றனர். பிறகு ராயுடு சந்தித்தது எல்லாம் வீழ்ச்சிகள் தாம். சொந்த உள்ளூர் அணியான ஹைதராபாதின் கிரிக்கெட் நிர்வாக அதிகாரிகளுடன் மோதி ஆந்திரா அணிக்கு சென்றார். பிறகு அங்கும் நிலைக்காமல் ஹைதிராபாதிற்கு திரும்பி அங்கு அர்ஜுன் யாதவ் எனும் சகவீரருடன் ஸ்டெம்புகளை பறித்து மோதிக் கொண்டார். பிறகு ஐ.சி.எல் ஆட்டத்தொடர் அறிவிக்கப்பட ஹைதராபாத் அணியில் இருந்து கொத்தாக வெளியேறி பி.சி.சி.ஐயால் தடை செய்யப்பட்ட ஏழு பேர்களில் ராயுடுவும் ஒருவர். மூன்றாவது ஐ.பி.எல்லுக்கு முன்னர் ஐ.சி.எல் அமைப்பு கலைக்கப்பட பி.சி.சி.ஐ ஐ.சி.எல் கலக ஆட்டக்காரர்களுக்கு மன்னிப்பு வழங்கி திரும்ப ஏற்றுக் கொண்டது. அவர்களில் சிலர் ஐ.பி.எல் அணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர். ஐ.பி.எல் தேர்வுக்கு ஐ.சி.எல்லில் இவர்களின் ஆடின ஆட்டமே அளவுகோலாக இருந்தது ஒரு நகைமுரண். சென்னை அணிக்கு பதானி, மும்பைக்கு சதீஷ் மற்றும் ராயுடு, மற்றும் ராஜஸ்தான் அணிக்கு ஜுன்ஜுன்வாலா ஆகியோர் வாங்கப்பட்டனர். அறிமுகமாகி 8 வருடங்களுக்கு பின் ஏறத்தாழ அனைவராலும் மறக்கப்பட்டு விட்ட நிலையில் அம்பத்தி ராயுடு நிகழ்த்திய மறுவருகை ஒரு கதைப்பாடல் நாயகனுக்கு உரியது.





அஷ்வின்

ஹர்பஜனுடன் ஒப்பிடுகையில் சராசரியாக தெரிந்தாலும் அஷ்வினின் திறமைகள் வேறுமாதிரியானவை. அவர் சம்பிரதாய சுழலர் அல்ல. சற்று வேகமாக நேராக சிக்கனமாக வீசக்கூடியவர். தூஸ்ரா, டென்னிஸ் பால், ஆர்ம் பால் உள்ளிட்ட பல வேறுபாடுகளை பந்து வீச்சில் கொண்டுள்ள அஷ்வின் கடுமையான நெருக்கடிகளின் போது அணித்தலைவரின் வலது கையாக செயல்படக் கூடியவர். மற்றொரு வலு அவர் பந்து வீச்சில் பெறும் பவுன்ஸ். ஓரளவுக்கு நல்ல மட்டையாளரும் கூட. பலவீனம் களத்தடுப்பு. அஷ்வினை பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் புறக்கணிக்க முடியாது. இந்திய உள்ளூர் ஆட்டங்களின், தற்போது ஐ.பி.எல்லின், கெ.எஸ் ரவிக்குமார் இவரே.

முரளி விஜய்

இந்த வருட ஐ.பி.எல்லில் விஜய் தன்னை ஒரு T20 மட்டையாளராக சுயகண்டுபிடிப்பு செய்து கொண்டார் எனலாம். குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான அவரது சதம் மிகச்சிறந்த T20 ஸ்கோர்களில் ஒன்று. விஜய்யின் கால்பக்க ஆட்டம் லக்‌ஷ்மணை நினைவுறுத்துபவை. கால்பக்கமாய் பந்தை கோரியடிக்கும் பிக்-அப் ஷாட்டுகளைத் தான் T20 அதிரடி ஓட்டங்களுக்கு நம்பி உள்ளார். வரும் T20 உலகக் கோப்பையில் விஜய்யின் ஆட்டம் உன்னிப்பாக கவனிக்கப்படும். அவரது ஒரே பலவீனம் பின்னங்காலில் குறை நீளத்தில் தோளுக்கு குறுக்கே வீசப்படும் பந்து. இந்த குறையை அவர் மீண்டு வருவாரா என்பது இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால சுவாரஸ்யங்களில் ஒன்றாக இருக்கும்.

ஸ்ரீகாந்த் அனுருத்தா

அனிருத்தா தற்போதைய கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்தின் மகன். அதிரடி மட்டையாளர். கடந்த உள்ளூர் செலஞ்சர் தொடரில் அனிருத்தாவின் ஆட்டம் பொருட்படுத்தக் கூடியதாக இருந்தது. முதல் கீழ்மத்திய வரிசையில் ஆடின அனிருத்தா நான் கவனித்த எல்லா ஆட்டங்களிலும் நெருக்கடி நிலைகளில் தான் ஆட்டத்துக்குள் நுழைந்தார். ஆட்ட அழுத்தத்தை பஞ்சு போல் உள்வாங்கினார். பொறுமையாக திட்டமிடலுடன் தன்னம்பிக்கையுடன் ஆடி மிக முக்கியமான ஓட்டங்களை சேர்த்தார். சேலஞ்சர் தொடரின் மற்றொரு ஆட்டத்தில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய போதும் அவர் சற்று பதற்றத்தை காட்டவில்லை. இந்த வருட ஐ.பி.எல்லில் அரை இறுதி மற்றும் இறுதி ஆட்டங்களில் மட்டுமே ஆடின அவர் கடைசி ஓவர்களில் மிக அத்தியாவசிமாக அதிரடி ஓட்டங்கள் தேவைப்படும் போது மிகுந்த தன்னம்பிக்கையுடன் ஆடினார். சாமர்த்தியம், மனப்பக்குவம் மற்றும் பந்தை வெகுதூரம் அடிப்பதற்கான இயல்பான திறமையும் கொண்ட அனிருத்தா தோற்றத்தில் இன்சமாமை நினைவுபடுத்தினாலும் ஆட்டத்தில் இங்கிலாந்தின் கோலிங்வுட்டுடன் ஒப்பிடத்தக்கவர். எதிர்கால இந்திய கிரிக்கெட்டில் இவருக்கு ஒரு சிறு பங்கிருக்கும்.

அபிஷேக் ஜுன்ஜுன்வாலா



அபிஷேக் வங்க அணியை சேர்ந்தவர். ராஜஸ்தான் ராயல்சுக்காக மத்திய வரிசையில் ஆடுகிறார். குள்ளமான மெலிதான் தோற்றம். நேர்த்தியான தொழில்நுட்பமும், மரபான ஆட்டப்பொறுமையும் கொண்ட இவர் பந்தை விரட்டும் இயல்பான திறமையும் கொண்டவர். ஜுன்ஜுன்வாலாவிடம் அந்த தெறிப்பு உள்ளது.










பட்டியல் 2

உமேஷ் யாதவ்



விதர்பாவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர். தில்லி டேர் டெவில்சுக்காக இந்த பருவத்தில் முதல் முறையாக ஆடினார். நீண்ட தயாரிப்பு ஓட்டமோ மூச்சு வாங்கலோ இன்றி 145 கிலோமீட்டர் வேகத்தை லகுவாக தொடுகிறார். ஐந்தே உள்ளூர் ஆட்டங்கள் ஆடியுள்ள உமேஷ் இன்னும் முதிரவில்லை. திசை மற்றும் நீளத்தில் கட்டுப்பாடு இல்லை. ஆனாலும் இவருக்கு மிக இயல்பாக கைவரும் வேகம் அனைத்து தரப்பிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. வரும் உள்ளூர் ஆட்ட பருவத்தில் உமேஷ் உன்னிப்பாக கவனிக்கப்படுவார்.










கேதார் மகராஜ் ஜாதவ்



கேதார் மகாராஷ்டிராவை சேர்ந்தவர். தில்லி டேர் டெவில்சுக்காக இந்த பருவத்தில் சில ஆட்டங்கள் ஆடினார். பெங்களூர் அணிக்கு எதிராக 29 பந்துகளில் இவர் அடித்த அரை சதத்தில் நேராக அடித்த டென்னிஸ் ஷாட்கள் பாதி மொயின்கானையும் மீதி தோனியையும் ஞாபகப்படுத்தின. இந்த வாமன வடிவத்தில் இருந்து கிளம்பி பந்தை பறக்க செய்யும் ஆற்றல் அடிக்கடி ஆச்சரியப்படுத்தும் ஒன்று.














சரப்ஜித் லட்டா



லட்டா கும்பிளே பாணியில் வேகமாக கால்-சுழல்பந்து வீசுபவர். கும்பிளேவைப் போன்றே கராறான திசையும் நீளமும் இவரது சிறப்புகள். நெருக்கடியான ஆட்டசூழலிலும் தீரமாக ஆடுகிறார். லட்டாவிடம் கும்பிளேவின் பிளைட், லூப் போன்றவை கிடையாது. ஒருவேளை எதிர்காலத்தில் உருவாக்கலாம். இவ்வருட ஐ.பி.எல்லில் பாதியில் காணாமல் போனாலும் ஒரு தெறிப்பு இவரிடமும் தென்படுகிறது.