Sunday, February 28, 2010

மோசடி பட்டியலில் 160 நிறுவனங்கள்:அரசு ஆய்வில் கண்டுபிடிப்பு

புதுடில்லி:மத்திய கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் கண்டுபிடிப்பில் 160 கம்பெனிகள் மோசடி செய்துள்ளதாகக் கண்டறிந்துள்ளது.பிரபல ஐ.டி., நிறுவனமான சத்யம் நிறுவனம் 10 ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் சிக்கிய பின், அதுபோன்ற மோசடிகள் எதிர்காலத்தில் நடைபெறாத வகையில், மத்திய அரசு, கம்பெனி விவகாரத் துறை அமைச்சகத்தின் மூலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கும் முறை ஒன்றை அறிமுகப்படுத்தியது. அதன் மூலம் ஆண்டுக்கு ஒரு தடவை எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகும்.


ஐ.டி., துறையில் நிகழும் மோசடிகளைக் கண்டறிய 10 நிதியியல் வரையறைகள் இந்த முறையில் உருவாக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து, கம்பெனி விவகாரத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:நிறுவனங்களின் சார்பதிவாளரிடம், 130 கம்பெனிகளின் கணக்கு வழக்குகளையும் பரிசோதிக்கும்படிக் கேட்டிருக்கிறோம். மேலும் 30 பொதுத்துறை நிறுவனங்களின் கணக்கு வழக்குகளும் கணக்குத் தணிக்கையாளர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் இருவரின் பார்வைக்கு விரைவில் வரும்.சில பிரபல முன்னணி நிறுவனங்கள் இந்த முறை மூலம் தங்கள் ஆவணங்களைப் பரிசோதனை மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும் நாங்கள் அவற்றின் ஆவணங்களை சோதனையிட்டு வருகிறோம்.


நிறுவனங்களின் காலாண்டு அறிக்கை, பொது அறிக்கைகள், பணப் பரிமாற்றம் , வரி செலுத்தப்பட்ட விவரங்கள், ஆகியவற்றின் மூலம் நிறுவனங்களின் வளர்ச்சியில் வழக்கத்துக்கு மாறான முன்னேற்றம் இருப்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆனால், மோசடி செய்த நிறுவனங்களின் பெயர்களை அவர் குறிப்பிடவில்லை. வேறு சில நிறுவனங்களுக்கு நிதியைத் திருப்பி விட்டது, பாலன்ஸ்ஷீட்டுகளில் முரண்பாடுகள், சொத்துப் பத்திரங்களில் முறைகேடுகள் போன்றவற்றை இ.டபிள்யூ.எஸ்., என்ற ஆண்டறிக்கை மூலம் அமைச்சகம் கண்டறிந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கம்பெனி விவகாரத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இதுகுறித்து முன் ஒருமுறை கூறுகையில்,"இது ஒரு மருத்துவ பரிசோதனை போலத்தான். முன்கூட்டியே பிரச்னைகளை அறிந்து அதற்கேற்ப நடவடிக்கைகளை இந்த முறை மூலம் எடுக்க முடியும். ஒவ்வொரு நிறுவனத்தையும் கண்காணிக்கும் நிரந்தரமான முறையை உருவாக்குவதுதான் இத்திட்டத்தின் நோக்கம். பொது நிர்வாகத்தின் கீழ் இருக்கின்ற மக்களுக்கு அந்த நிர்வாகத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் உரிமை இருக்கிறது' என்று தெரிவித்தார்.

பாகிஸ்தான் வீரர்கள் அக்மல், ரானாவுக்கு சூதாட்டத்தில் தொடர்பு?



கராச்சி, பிப்.28-
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் மிகவும் மோசமாக விளையாடி தோற்றது. பாகிஸ்தான் அணியின் இந்த தோல்விக்கு சூதாட்டம்தான் காரணம் என்று தகவல் வெளியாகி இருந்தது.
 
இந்த நிலையில் பாகிஸ்தான் வீரர்கள் கமரன்அக்மல், ரானாநவித் ஆகியோருக்கு சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
 
இருவரும் மேட்ச் பிக்சிங் கில் ஈடுபட்டுள்ள தகவலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்து உள்ளது. இதனால் இருவர் மீதும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.
 
சூதாட்டம் தொடர்பு காரணமாக துபாயில் சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த 20 ஓவர் போட்டியில் இருந்து இரு வரும் நீக்கப்பட்டனர்.
இருவரும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான 30 பேர் கொண்ட தேர்வு அணியில் இடம் பெற்றுள்ளனர். 15 பேர் கொண்ட அணியில் அவர்கள் இடம் பெற மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. இதில் கமரன்அக்மல் விக்கெட் கீப்பர் ஆவார். ரானா நவித் வேகப்பந்து வீரர் ஆவார்.

அசத்துகிறது சீனா:உலகின் மிக அதிவேக ரயில் அறிமுகம் : மணிக்கு 354 கி.மீ., வேகத்தில் ஓடும்


பீஜிங் : சீனாவில் மணிக்கு 354 கி.மீ., வேகத்தில் செல்லும் உலகின் அதிவேக ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரை விட, மிக வேகமாக செல்லும் திறன் இந்த ரயிலுக்கு உண்டு.

சீனாவில், ஹார்மனி எக்ஸ்பிரஸ் என பெயரிடப்பட்டுள்ள உலகின் அதிவேக ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மணிக்கு 354 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன் கொண்ட இந்த அதிவேக ரயிலுக்கு சீன மொழியில், "ஹெக்சியோ ஹாவோ' என பெயர். ஹெலிகாப்டரை விட, மிகவும் வேகமாக செல்லக் கூடிய இந்த ரயிலின் தொழில்நுட்பத்தை சீமென்ஸ் மற்றும் கவாசகி நிறுவனங்கள் வடிவமைத்துள்ளன.இதன் சோதனை ஓட்டம் சமீபத்தில் நடத்தப்பட்டது. வுகான் - குவாங்ஜோயு இடையேயான 1,062 கி.மீ., தூரத்துக்கு சோதனை ஓட்டம் நடந்தது. அப்போது, மணிக்கு 354 கி.மீ., தூரத்தை அநாயசமாக கடந்து சென்றது இந்த ரயில். ஜன்னலுக்கு வெளியில் தெரியும் இயற்கைக் காட்சிகள் எல்லாம், கண் இமைக்கும் நேரத்தில் மங்கலாக தோன்றி மறைந்தன.இந்த ரயில் செல்வதற்காகவே பிரத்யேகமான ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவையை விரிவு படுத்துவதற்காக 35.52 லட்சம் கோடி ரூபாய் செலவில் மேலும், 8,000 கி.மீ., தூரத்துக்கு ரயில் பாதை அமைக்கப்படுகிறது.

இந்த ரயில் பாதை அடுத்த ஐந்து ஆண்டுகளில் 3,571 கி.மீ., தூரத்துக்கு விரிவு படுத்தப்படவுள்ளது. ஜப்பானின் புல்லட் ரயில், பிரான்சின், டி.ஜி.வி., போன்ற அதிவேக ரயில்களை விட, இந்த ரயில் வேகமாக செல்லக் கூடியது. இதில் முதல் வகுப்பில் பயணிப்பதற் கான கட்டணம், 5,328 ரூபாயாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இது, சீனாவில் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளியின், ஒரு வார சம்பளத் தொகைக்கு சமம். ஹார்மனி எக்ஸ்பிரசுக்கு கிடைத்துள்ள வரவேற்பை அடுத்து, போட்டியை சமாளிக்கும் வகையில், சீன விமான நிறுவனம், உள்நாட்டு விமான போக்குவரத்துக்கான கட்டணங்களை குறைத்துள்ளது.

இந்த ரயிலில் பயணம் செய்த லுயோ என்ற சீன தொழில் அதிபர் கூறுகையில், "மணிக்கு 480 கி.மீ., வேகம் செல்லக் கூடிய அதிவேக ரயிலை விரைவில் இயக்குவோம், என ரயில்வே அமைச்சர் சில ஆண்டுகளுக்கு முன் கூறினார். இது நடக்காத காரியம் என, நினைத்தேன். தற்போது இந்த ரயிலில் பயணம் செய்ததும், என் கருத்தை மாற்றிக் கொண்டேன்'என்றார்.கார் மற்றும் விமானங்களை இயக்குவதை விட, அதிவேக ரயில்களை இயக்குவதால் மாசு கட்டுப்பாட்டை பெரிய அளவில் குறைக்க முடியும் என, அமெரிக்கா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் கருதுகின்றன. இதையடுத்து, அதிவேக ரயில்கள் செல்லும் வகையிலான பிரத்யேக ரயில் பாதைகளை அமைக்கும் நடவடிக்கைகளை இந்த நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. இதில் சீனா தான் முன்னணியில் உள்ளது.

உலக கோப்பை ஹாக்கி: இந்தியா அபார வெற்றி : பரிதாபமாக வீழ்ந்தது பாக்.,


புதுடில்லி : உலக கோப்பை ஹாக்கி தொடரை இந்திய அணி அமர்க்களமாக துவக்கியது. நேற்று நடந்த பரபரப்பான லீக் போட்டியில் பாகிஸ்தானை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. உள்ளூர் சர்ச்சைகளை கடந்து சாதித்த இந்திய அணிக்கு சந்தீப் சிங் கைகொடுத்தார். இவர் இரண்டு கோல் அடித்து, ஆட்ட நாயகனாக ஜொலித்தார்.

டில்லியில் 12வது உலக கோப்பை ஹாக்கி தொடர் நேற்று துவங்கியது. இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன.

பலத்த பாதுகாப்பு:பயங்கரவாதிகளின் மிரட்டலை தொடர்ந்து, போட்டி நடக்கும் தயான்சந்த் தேசிய மைதானம் உள்ளிட்ட பகுதிகளுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.

அதிரடி துவக்கம்: "பி' பிரிவில் நடந்த லீக் போட்டியில் பரம எதிரிகளான இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்திய வீரர்களின் அதிரடி தாக்குதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி துவக்கத்திலேயே நிலைகுலைந்து போனது. ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் இந்தியாவுக்கு "பெனால்டி கார்னர்' வாய்ப்பு கிடைத்தது. இதனை சிவேந்திர சிங் கோலாக மாற்ற, அரங்கில் குவிந்திருந்த இந்திய ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். பின் 35வது நிமிடத்தில் அம்பயர் மறுபரிசீலனை முறையில் "பெனால்டி கார்னர்' வாய்ப்பை இந்தியா பெற்றது. இதில் சந்தீப் சிங் ஒரு சூப்பர் கோல் அடிக்க, இந்திய அணி முதல் பாதி முடிவில் 2-0 என்ற முன்னிலை பெற்றது.

கோல் மழை:இரண்டாவது பாதி துவங்கியதும் பிரப்ஜோத் சிங்(37வது நிமிடம்) அசத்தல் கோல் அடித்தார். இதற்கு பின் போராடிய பாகிஸ்தான் மூன்று "பெனால்டி கார்னர்' வாய்ப்புகளை வீணடித்தது. ஆட்டத்தின் 57வது நிமிடத்தில் "பெனால்டி கார்னர்' மூலம் சந்தீப் சிங் இரண்டாவது கோல் அடிக்க, இந்தியா 4-0 என்ற அசைக்க முடியாத முன்னிலை பெற்றது. பின் 60வது நிமிடத்தில் "பெனால்டி கார்னர்' மூலம் பாகிஸ்தானின் சோகைல் ஆறுதல் கோல் அடித்தார். இறுதியில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் அசத்தல் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 புள்ளிகளை பெற்றது.

பழி தீர்த்தது இந்திய அணி : கடந்த டிசம்பரில் அர்ஜென்டினாவில் நடந்த சாம்பியன்ஸ் சாலன்ஞ் தொடரில் இந்திய அணி, பாகிஸ்தானிடம் 3-6 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது. இதற்கு இம்முறை நேற்று நடந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணி, பாகிஸ்தானை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, பழி தீர்த்துக்கொண்டது. தவிர, கடைசியாக நடந்த மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து இருந்த இந்திய அணி, நான்காவது மோதலில் பாகிஸ்தானை வெற்றி கண்டது.

ரூ. 1 லட்சம் பரிசு : உலக கோப்பை ஹாக்கி தொடர் லீக் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு பரிசு மழை குவிகிறது. பயிற்சியாளர் உள்ளிட்ட அணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும், தலா ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்குவதாக, ஹாக்கி இந்தியா அமைப்பு அறிவித்துள்ளது.

நாணயத்துக்கு மறுப்பு : பாதுகாப்பு கெடுபிடிகள் "ஓவராக' இருக்க, பத்திரிகையாளர்கள் பரிதவித்து போயினர். இவர்கள், மைதானத்துக்குள் நாணயங்களை கூட எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. சிகரெட், தீப்பெட்டி போன்ற பெருட்களுடன் நாணயங்களையும் நுழைவாயிலில் விட்டுச் சென்றனர். பின் "போட்டோகிராபர்கள்' அமர்வதற்கு சேர் மற்றும் மின் வசதி செய்து தரப்படவில்லை. மைதானத்தை சுற்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகளை கடந்து நிற்கும்படி அறிவுறுத்தப்பட்டனர். இதனால் "போட்டோ' எடுக்க முடியாமல் சிரமப்பட்டனர்.

 இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,""நாணயங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்க கூடாது என எங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நாணயங்களை, யார் வேண்டுமானாலும் மைதானத்தில் தூக்கி எறியலாம். இதனால் வீரர்களுக்கு காயம் அடையலாம். பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியமாக இருக்க முடியாது,''என்றார்.

"வீடியோ அம்பயர்' அறிமுகம் : உலக கோப்பை ஹாக்கி வரலாற்றில் முதல் முறையாக அம்பயர் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் முறை(வீடியோ அம்பயர்) நேற்று அறிமுகமானது. இதன்படி அம்பயர் தீர்ப்பை எதிர்த்து இரு அணிகளும் தலா ஒருமுறை அப்பீல் செய்யலாம். இது வீரர்களுக்கு சாதகமாக அமைந்தால், மீண்டும் அப்பீல் செய்யலாம்.நேற்றைய தென் ஆப்ரிக்க, ஸ்பெயின் மோதிய போட்டியின் 44வது நிமிடத்தில், தென் ஆப்ரிக்க வீரர்கள் "பெனால்டி கார்னர்' வாய்ப்பு கோரினர். இதனை மலேசிய அம்பயர் அமர்ஜித் சிங் நிராகரித்தார். உடனே தென் ஆப்ரிக்கா சார்பில் "அப்பீல்' செய்யப்பட்டது. "ரீப்ளே' பார்த்த "வீடியோ அம்பயர்' ஜாம்சன் ஹமிஷ், "அப்பீலை' ஏற்றுக் கொண்டார். முதல் அப்பீல் சாதகமாக அமைந்ததால், தென் ஆப்ரிக்காவுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தது. ஆட்டத்தின் 45வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் ரோட்ரிகோ கார்சா அடித்த கோல் தவறானது என அப்பீல் செய்தது. பந்து உயரமாக சென்றதாக புகார் கூறியது. இதனை வீடியோ அம்பயர் நிராகரித்தார்.

Saturday, February 27, 2010

உ‌யி‌ரின‌த் தகவ‌ல்க‌ள்



பறவைக‌ள் இன‌த்‌தி‌ல் ‌மிக‌ப்பெ‌ரியது நெரு‌ப்பு‌க் கோ‌ழி. இதனா‌ல் ம‌ணி‌க்கு 65 ‌கி.‌மீ. வேக‌த்‌தி‌ல் ஓட முடியு‌ம்.
ஒ‌ட்டக‌ச் ‌சி‌‌வி‌ங்‌கியா‌ல் உடலை‌த் ‌திரு‌ப்பாம‌ல் கழு‌த்தை ம‌ட்டு‌ம் ‌திரு‌ப்‌பி நான‌்கு புறமு‌ம் பா‌ர்‌க்கு‌ம் ‌திற‌ன் கொ‌ண்டது.
ஒ‌ட்ட‌க‌ச் ‌சி‌வி‌ங்‌கி ‌நி‌ன்று கொ‌‌ண்டுதா‌ன் தூ‌ங்கு‌ம். இத‌ற்கு குர‌ல் வளை ‌இ‌ல்லை எ‌ன்றதா‌ல் இத‌ன் ச‌ப்த‌ம் வெ‌ளி‌யி‌ல் கே‌ட்காது.
க‌வி பறவை இன‌ம் ‌‌‌நீரு‌க்கடி‌யி‌ல் பற‌க்கு‌ம் ஆ‌ற்ற‌ல் படை‌த்தது. ‌கி‌வி‌க்கு வ‌யி‌ற்‌றி‌ல் ப‌ற்க‌ள் உ‌ள்ளன. ஆமை போல பூ‌மியை குடை‌ந்து மு‌ட்டை‌யிடு‌கி‌ன்றன. க‌வி‌‌ப் பறவை‌க்கு பக‌லி‌ல் க‌ண் தெ‌ரியாது. எனவே இர‌வி‌ல் ம‌்டுமே நடமாடு‌ம்.
தே‌னீ‌‌க்கு இர‌ண்டு இரை‌ப்பைக‌ள் உ‌ண்டு. குள‌வி‌யி‌ன் ஆயு‌ட்கால‌ம் 365 நா‌ட்க‌ளாகு‌ம்.
நீ‌ர் இ‌ல்லாம‌ல் எ‌லி ‌நீ‌ண்ட நா‌ள் உ‌யி‌ர் வாழு‌ம். பா‌ம்‌பி‌ன் தலையை வெ‌ட்டினாலு‌ம் கூட அத‌ன் இதய‌ம் பல ம‌ணி நேர‌ம் துடி‌த்தபடியே இரு‌க்கு‌ம்.

கிரிக்கெட் அணியில் இடம் பெறதேர்வுக்குழு தலைவர் ஆலோசனை


திண்டுக்கல்:""கிரிக்கெட்டில் வாய்ப்புகள் கிடைக்கும் போது, திறமையை நிரூபிப்பவர்களுக்கு அணியில் இடம் கிடைக்கும்,'' என இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் பேசினார்.திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., கல்லூரியில், இன்ஜி., கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது.

இதில் இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த், பரிசுகளை வழங்கி பேசியதாவது:""மாவட்ட கிரிக்கெட் போட்டிகளை ஊக்கப்படுத்தும் வகையில், இதுபோன்ற விழாக்களில் பிரபலங்கள் கலந்து கொள்வது அவசியம். கிரிக்கெட் தேர்வுக்குழுவில் பரிந்துரைகளை விட, திறமைக்கு அதிக மதிப்பு கிடைக்கும். உரிய வாய்ப்புகளில் திறனை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு, அணியில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.சச்சின் டெண்டுல்கரின் தொடர் சாதனைகளுக்கு, அவரது பணிவும், தன்னம்பிக்கையும், ஆர்வமும் காரணமாக அமைந்துள்ளன. குறிப்பிட்ட சாதனையை இவரால் மட்டுமே முடிக்க இயலும் என இறைவன் தேர்ந்தெடுத்துள்ளார்.

இதன்படி தனது சாதனைகள் மூலம் கிரிக்கெட்டின் கடவுளாக உயர்ந்து நிற்கிறார். மூளையை கேட்டு செயல்படுவதால், ஒரே நிலையில் செயல்படுவதில் குழப்பம் தடைகல்லாக இருக்கும். இதயத்தோடு இணைந்த செயல்களில் மட்டுமே முழுமையான இலக்கை எட்ட முடியும். மாணவர்கள் அனைத்து துறைகளிலும், தன்னம்பிக்கை, ஆர்வம், துணிவுடன் துரிதமாக செயல்படுதல், எண்ணியதை முழுமையாக செயல்படுத்துதல், உறுதியான மனநிலையுடன் இருத்தல் போன்றவற்றின் மூலம் வெற்றிக்கான இலக்கை எளிதில் அடையலாம்,''இவ்வாறு அவர் பேசினார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் கே.எஸ்.விஸ்வநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உத்தரபிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த 4 பேர் சாவு

காஷியாபாத், பிப். 27-
 
 
உத்தரபிரதேச மாநிலம் காஷியாபாத் அருகே கன்னார் கிராமம் உள்ளது. ஹோலி பண்டிகையையொட்டி அங்கு பலர் கள்ளச்சாராயம் குடித்தனர். அவர்களில் அஜய்குமார் (35), ஜிதேந்தர் (32) உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.
 
இவர்கள் தவிர 7 பேர் வாந்தி மயக்கத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் மீரட், காஷியாபாத், சார்க்முக்தேஷ்வர் ஆகிய நகரங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
 
தகவல் அறிந்ததும் போலீசார் அந்த கிராமத்துக்கு விரைந்து சென்று வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி அங்கு பதுக்கி வைத்திருந்த 100 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதி புறக்காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் எம்.கே.சர்மா, போலீஸ்காரர் சதீஷ்குமார் ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

ஊனமுற்ற பெண்ணை வைத்து பட விளம்பரம்: சல்மான்கான் மீது வழக்கு

மும்பை, பிப்.27-
 
இந்தி சூப்பர் ஸ்டார் சல்மான்கான் நடித்த வீர் படம் சமீபத்தில் ரிலீசானது. இப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக போல் பானு ஷேக் என்ற 30 வயது ஊனமுற்ற பெண்ணின் படத்தை சல்மான் பயன்படுத்தி இருந்தார். படத்துக்கான விளம்பர போஸ்டர்கள், பேனர்களில் அப்படம் அச்சிடப்பட்டு இருந்தது. இதற்காக அப்பெண்ணுக்கு சல்மான்கான் ரூ.1 லட்சம் வழங்கியதாகவும் செய்திகள் வெளியானது.
 
இந்த நிலையில் சல்மான்கானுக்கு எதிராக போல் பானு வழக்கு தொடர்ந்து இருக்கிறார். பட விளம்பரங்களில் என் படத்தை சல்மான்கான் பயன்படுத்தியது தவறு. இதற்காக அவர் ரூ.25 லட்சம் நஷ்டஈடு தர வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு உள்ளார். ரூ.1 லட்சம் வாங்கியதாக வெளியான தகவலையும் மறுத்தார். போல் பானு கூறும்போது, கடந்த வருடம் சல்மான்கான் படப்பிடிப்பை காண உறவினர்களுடன் ஸ்டூடியோவுக்கு சென்றேன். அவருடன் நின்று போட்டோ எடுத்துக் கொள்ள விரும்பினேன். படப்பிடிப்பில் இருந்த ஒரு போட்டோ கிராபர் படம் எடுத்தார். அந்த படத்தை பட விளம் பரங்களில் வெளியிட்டு மோசடி செய்துள்ளனர் என்றார்.

ரிக்டரில் 7.3 ஆக பதிவானது: ஜப்பானில் பயங்கர நில நடுக்கம் சுனாமி எச்சரிக்கையால் மக்கள் ஓட்டம்


டோக்கியோ, பிப். 27-
ஜப்பானில் யோரான் தீவு உள்ளிட்ட பகுதிகளில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 5.31 மணியளவில் (இந்திய நேரப் படி நேற்று இரவு 8.31 மணி) பூமி குலுங்கியது. அப்போது பயங்கர சத்தம் கேட்டது. இதனால் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த மக்கள் என்னதோ! ஏதோ! என அலறியபடி எழுந்தனர்.
பின்னர் தான் நில நடுக்கம் என உணர்ந்தனர். இந்த நிலையில் கடல் அலை வழக்கத்தை விட சீறி எழுந்தது. இதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
இதை தொடர்ந்து வீடு களில் இருந்து அலறியடித்த படி மக்கள் ஓட்டம் பிடித்தனர். பாதுகாப்பு தேடி ரோடுகளுக்கு ஓடினர். இதனால் பதட்டமும், பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. ஆகவே, பதட்டத்தில் இருந்த மக்கள் அமைதி அடைந்தனர்.
இதற்கிடையே, நில நடுக்கம் 6.9 ரிக்டர் அளவில் பதிவானதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. ஆனால் 7.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்காவின் புவியியல் மையம் அறிவித்துள்ளது.
நில நடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்சேதம் மற்றும் பொருட் சேதம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாக வில்லை. ஆனால், யரோன் தீவில் கடுமையான நில நடுக்கம் உணரப்பட்டதாக இவான் பிராகின் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் வரலாற்றில் கடந்த 40 ஆண்டுகளில் இது போன்ற நில நடுக்கத்தை தான் உணர்ந்ததில்லை என்று தெரிவித்துள்ளார். சமார் 6 வினாடிகள் பூமி குலுங்கியதாகவும் அவர் கூறி உள்ளார்.
ஜப்பானில் கடந்த 1995-ம் ஆண்டு 7.2 ரிக்டர் அளவில் கோப் துறைமுகத்தில் பூகம்பம் ஏற்பட்டது. அப்போது 6,400 பேர் பலியானார்கள். தற்போது 7.3 ரிக்டர் அளவில் கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே சேத மதிப்பு அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Oracle Unveils Exadata V2 In Indian Market

Oracle recently introduced its fastest, online transaction processing machine in the Indian market. Called Exadata Version 2, the system features Exadata Smart Flash Cache, which is based on Sun’s FlashFire technology.

The solution is aimed at customers with very large databases, and is designed to provide faster database access and OLTP capabilities. Based on standard x86 architectures, the system is designed on a parallel architecture hence can be expanded incrementally by adding storage servers, database servers, and network switches to its fault-tolerant grid architecture.

Its Smart Flash Cache technology addresses the random disk I/O bottleneck by transparently moving transactional data to Sun FlashFire cards. The solution is also capable of offering a high-bandwidth, massively parallel solution with the capability to deliver up to 50Gbps of raw I/O bandwidth and up to 1,000,000 I/O operations per second (IOPS), thereby enabling high performance OLTP along with consolidation of data warehouse and OLTP workloads onto the same system.

Oracle claims that with this machine, customers can store more than ten-times the amount of data and search data more than ten-times faster without making any changes to applications.

Featuring the Oracle 11g Release 2 and the Exadata Storage Server Software Release 11.2, the system also includes the Hybrid Columnar Compression. The company claims, it delivers ten times more average table compression for data warehouse data; with corresponding increase in table scan performance.

Also included is the Oracle Real Application Cluster (RAC) software which enables the system to provide scale-out grid computing functionalities. The system also features high speed InfiniBand connectivity which is designed to provide faster connectivity.

The new machine is targeted at enterprises in the manufacturing, government, telecom, financial and public sectors. The machine is available in four models: full rack (8 database servers and 14 storage servers), half-rack (4 database servers and 7 storage servers), quarter-rack (2 database servers and 3 storage servers) and a basic system (1 database server and 1 storage server).

Friday, February 26, 2010

IT Park in Puducherry



Following the success of phase I of the IT Techno Polis Park on Pondicherry Engineering College campus, the UT government is planning for the phase-II under the public-private partnership mode, said Puducherry Lt Governor Iqbal Singh during his Republic Day address on Tuesday.Phase II of the proposed IT park is likely to provide employment for more than 2,000 people, he added.Besides, there is a proposal for a multi-product Special Economic Zone (SEZ) at Polagam Growth Centre in Karaikal to increase the economic activities, he said.Greeting people on the 61st Republic Day, he said that the Puducherry government has been consistently increasing its allocation under the Planning Commission of India to achieve significant improvements in the socio-economic frontiers and for this, a plan outlay of Rs 2,250 crore has been approved for the annual plan 2009-10.

He added that a sizeable part of this outlay would be utilised for infrastructure development projects.He noted that to meet the challenges like shrinking agricultural land space, unpredictable monsoon, depleting ground water and excessive use of chemical fertilizers, several initiatives have been taken to achieve four per cent annual growth under the agricultural productivity improvement programme and the latest technique of pesticide farming, which would help farmers save their input cost and get higher returns, was part of it.

Sachin’s Birthday as ‘World Cricket Day’


World cricket day - A new announcement...!

An announcement have been done by ICC that the cricket legend SACHIN TENDULKAR's birthday is the WORLD's CRICKET DAY...!
i.e, 24th April ...!

Its really nice to hear the announcement as a cricket lover and SACHIN fan...!

And I am more proud to say that I am an indian an the world's cricket day is celebrated by the reason of an indian...!

SACHIN rockz...! Lets pray to god to bless him to play more and more...!

Happy lotting...!

Be proud to be an Indian...

Sachin’s Birthday as ‘World Cricket Day’



World cricket day - A new announcement...!

An announcement have been done by ICC that the cricket legend SACHIN TENDULKAR's birthday is the WORLD's CRICKET DAY...!
i.e, 24th April ...!

Its really nice to hear the announcement as a cricket lover and SACHIN fan...!

And I am more proud to say that I am an indian an the world's cricket day is celebrated by the reason of an indian...!

SACHIN rockz...! Lets pray to god to bless him to play more and more...!

Happy lotting...!

Be proud to be an Indian...

கிரிக்கெட் சூதாட்ட புகாரில் பாக்., வீரர்

 


கராச்சி: பாகிஸ்தான் அணியில் கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சை மீண்டும் வெடித்துள்ளது. இம்முறை விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல், சூதாட்ட புகாரில் சிக்கியுள்ளார்.
கடந்த மாதம் ஆஸ்திரேலியா சென்ற பாகிஸ்தான் அணி டெஸ்ட் (0-3), ஒருநாள் (0-5) மற்றும் "டுவென்டி-20' (0-1) என தொடரில் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்தது. இதுகுறித்து தற்போது விசாரணை நடக்கிறது. இதனிடையே இந்த தொடரில் விக்கெட் கீப்பராக இருந்த கம்ரான் அக்மல் (28) மீது, சூதாட்ட புகார் கிளம்பியுள்ளது. இதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
சிட்னியில் நடந்த இரண்டாவது டெஸ்டில் பாகிஸ்தான் அணி, வெல்வதற்கு அதிக வாய்ப்பு இருந்தது. ஆனால் இவர் நழுவவிட்ட மூன்று "கேட்ச்' வாய்ப்புகளால் தப்பிய ஹசி (134*), சதமடித்தார். தவிர, வாட்சன், சிடில் ரன்அவுட் வாய்ப்புகளை வீணடித்தார். பின் இவர் பேட்டிங்கிலும் ஏமாற்ற, எளிதாக வெல்ல வேண்டிய போட்டியை, பாகிஸ்தான் அணி கோட்டை விட்டது. இதையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான "டுவென்டி-20' தொடரில் இருந்து நீக்கப்பட்டார். சூதாட்ட புகார் குறித்து விசாரணை நடக்கும் நிலையில், "டுவென்டி-20' உலக கோப்பை உத்தேச அணியில் கம்ரான் பெயர் சேர்க்கப்பட்டு இருந்தது.
இஜாஸ் மறுப்பு:
சூதாட்டம் தொடர்பான செய்தியை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் இஜாஸ் பட் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"" நாங்கள் தற்போதுள்ள வீரர்கள் குறித்து பேசவில்லை. "மீடியா' தவறாக செய்தி வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் அடைந்த தோல்வி குறித்து விசாரணை நடக்கிறது. அதன் முடிவு வந்தபின், நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
 
 

சச்சினுக்கு "பாரத் ரத்னா' விருது!: கபில் தேவ் வலியுறுத்தல்


புதுடில்லி: சாதனை நாயகன் சச்சினுக்கு, நாட்டின் மிக உயர்ந்த "பாரத் ரத்னா' விருது வழங்க வேண்டுமென, முன்னாள் கேப்டன் கபில் தேவ் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 31,041 ரன்கள் மற்றும் 93 சதங்கள் அடித்து, சாதனை மன்னனாக திகழ்கிறார் இந்தியாவின் சச்சின். சமீபத்தில் குவாலியரில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் விளாசினார். இதன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் 200 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். இதற்கு பல இடங்களில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
கோஹினூர் வைரம்:
சச்சினின் 200 ரன் சாதனை குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் கூறியது:
சச்சின், கிரிக்கெட்டின் கோகினூர் வைரம். இவர் டெஸ்ட், ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' என அனைத்திலும் வெற்றிகரமாக சாதித்தவர். இவரைப் போன்று, வேறொரு வீரர் இனி வருவது கடினம். இங்கிலாந்தின் நாசர் ஹுசைன் கூறியது போல, பிராட்மேனுடன் மட்டுமல்ல, உலகின் எந்த பேட்ஸ்மேனையும் சச்சினுடன் ஒப்பிட முடியாது.
பேட்டிங்கில் சாதித்து வரும் இவர், பீல்டிங்கில் இப்போது வரையிலும் தன்னை நிரூபித்து வருகிறார். இந்திய துணைக்கண்டத்தில் நடக்கவுள்ள 2011 உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் சச்சின், அதன் பின்பும் இரண்டு ஆண்டுகள் வரை அணியில் நீடிக்கலாம். என்னைப் பொறுத்தவரையில், இந்தியாவின் உயர்ந்த விருதான "பாரத் ரத்னாவை' இவருக்கு வழங்குவது தான் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.
இவ்வாறு வடேகர் தெரிவித்தார்.
கபில் தேவ் சம்மதம்:
முன்னாள் இந்திய அணி கேப்டன் கபில் தேவ் கூறுகையில்,"" சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 21 ஆண்டுகளாக, பல சாதனைகளை படைத்து வருபவர் சச்சின். இவர் "பாரத் ரத்னா' விருதுக்கு தகுதியானவர். சச்சினுக்கு இந்த விருது கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சியடைவோம். ஒருவேளை அடுத்த போட்டியில் இவர் "டக் அவுட்டானால்' கூட, விருது வழங்க வேண்டும் என்றுதான் சொல்வேன். ஏனெனில் ஒரு போட்டியை மட்டும் வைத்து அவரை எடைபோட முடியாது. ஒட்டுமொத்தமாக அவரது சாதனைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்,'' என்றார்.
சச்சினுக்கு முதலிடம்:
 முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் வெங்சர்க்கார் கூறுகையில்,"" விளையாட்டு வீரர் ஒருவருக்கு "பாரத் ரத்னா' விருது வழங்கப்படும் என்றால் அதனைப் பெற சச்சினைத் தவிர, யாரும் இல்லை. இவருக்கு கட்டாயம் இந்த விருது கொடுக்கவேண்டும்,'' என்றார்.


உட‌ல் ந‌ல‌த்‌தி‌ற்கு செ‌ரிமான‌ம் அவ‌சிய‌ம்

செ‌ரிமான‌த்‌தி‌ற்கு‌ம் உட‌ல் நல‌த்‌தி‌ற்கு‌ம் மு‌க்‌கிய‌ப் ப‌ங்கு உ‌ண்டு. செ‌ரிமான‌த்‌தி‌ல் பா‌தி‌ப்பு ஏ‌ற்ப‌ட்டா‌ல் வ‌யி‌ற்றுவ‌லி‌யி‌ல் துவ‌ங்‌கி அடு‌த்தடு‌த்து பல ‌வியா‌திக‌ள் ப‌ற்‌றி‌க் கொ‌ள்ளு‌ம்.
மரு‌த்துவ‌ர்க‌ள் கூறு‌ம் ம‌ற்றொரு ‌விஷய‌ம் எ‌ன்னவெ‌ன்றா‌ல், ஒரு ம‌னித‌னி‌ன் வ‌யி‌ற்‌றி‌ல் ஏராளமான ‌கிரு‌மிக‌ள் வா‌ழ்‌ந்து கொ‌ண்டு தா‌ன் இரு‌க்‌கி‌ன்றன. அத‌ற்கே‌ற்ற ‌தீ‌ணி போடு‌ம்போது அ‌ந்த நோ‌ய் வள‌ர்‌ந்து ந‌ம்மை‌த் தா‌க்கு‌கிறது. எனவே, நா‌ம் உ‌ண்ணு‌ம் உணவு‌ம், அது செ‌ரிமான‌ம் ஆவது‌ம்தா‌ன் நமது உட‌ல் ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌ற்கு அடி‌ப்படையான ‌விஷய‌ங்க‌ள் ஆ‌கி‌ன்றன.
அதனா‌ல்தா‌ன் பெரு‌ம்பாலான ‌வியா‌திக‌ள் வ‌யி‌ற்‌‌றி‌ல் ஏ‌ற்படு‌ம் கோளாறுகளா‌ல் வரு‌கி‌ன்றன எ‌ன்று மரு‌த்துவ‌ர்க‌ள் ‌கு‌றி‌ப்‌பிடு‌கிறா‌ர்கள‌். எனவே ‌செ‌ரிமான‌த்தை‌ப் ப‌‌ற்‌றி மேலோ‌ட்டமாகவாவது தெ‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டியது அவ‌சிய‌ம்.
பொதுவாக நா‌ம் சா‌ப்‌பி‌ட்ட உணவு 3 முத‌ல் 4 ம‌ணி நேர‌த்து‌க்கு‌ள் ‌ஜீரணமா‌கி‌வி‌ட வே‌ண்டு‌ம். நா‌ம் முத‌லி‌ல் சா‌ப்‌பி‌ட்ட உணவு ‌ஜீரணமா‌கி ப‌சி எ‌ன்ற உண‌ர்வு ஏ‌ற்ப‌ட்ட ‌பிறகுதா‌ன் அடு‌த்த உணவை உ‌ண்ண வே‌ண்டு‌ம்.
சா‌ப்‌பி‌ட்ட ‌பி‌ன்பு அ‌திகமாக ‌நீ‌ர் அரு‌ந்துவது ந‌ல்லது. ஆனா‌ல் சா‌ப்‌பிடு‌ம் மு‌ன் ‌நீ‌ர் அரு‌ந்துவது ‌ஜீரண இய‌க்க‌த்தை ‌கெடு‌த்து‌விடு‌ம். நடுநடுவேயு‌ம் ‌நீ‌ர் அரு‌ந்துவது கூடாது. ஆனா‌ல், ப‌சி எடு‌த்த ‌பிறகு, சா‌ப்‌பிட இ‌ன்னு‌ம் ‌சி‌றிது நேரமாகு‌ம் எ‌ன்று தெ‌ரி‌ந்தா‌ல் ‌நீ‌ர் அரு‌ந்துவது வ‌யி‌ற்றை‌க் கா‌ப்பா‌ற்று‌ம் ‌வித‌த்‌தி‌ல் அமையு‌ம்.
ஒ‌வ்வொருவரு‌ம், த‌ங்களது செ‌‌ரிமான‌த் ‌திறனை‌ப் ப‌ற்‌றி அ‌றி‌ந்‌திரு‌க்க வே‌ண்டா‌ம். ஒரு ‌சிலரு‌க்கு ‌சில உணவு‌ப் பொரு‌ட்க‌ள் செ‌ரி‌‌க்க நேரமாகு‌ம். அவைகளை உ‌ண்ணு‌ம்போது, அடு‌த்த உணவை நேர‌ம் தா‌ழ்‌த்‌தியே உ‌ண்ண வே‌ண்டு‌ம்.
பொதுவாக நா‌ம் சா‌ப்‌பி‌ட்ட உணவு 3 முத‌ல் 4 ம‌ணி நேர‌த்து‌க்கு‌ள் ‌ஜீரணமா‌கி‌வி‌ட வே‌ண்டு‌ம். அ‌ப்படி இரு‌ந்தா‌ல் ந‌ம் உட‌ல் ந‌‌ல்ல ‌நிலை‌யி‌ல் இரு‌க்‌கிறது எ‌ன்று அ‌ர்‌த்த‌ம்.
பரோ‌ட்டா போ‌ன்ற ‌சில கடினமான உணவுக‌ள் ‌ஜீரணமாக கால தாமத‌ம் ஆகலா‌ம். பரோ‌ட்டா போ‌ன்ற உணவுகளை உ‌ண்டா‌ல் அ‌‌திகமாக ‌நீ‌ர் அரு‌ந்த வே‌ண்டியது ‌ஜீரண‌த்‌தி‌ற்கு அவ‌சியமா‌கிறது.
இய‌ல்பாக நா‌ன்கரை ம‌ணி நேர‌ம் அ‌ல்லது 5 ம‌ணி நேர இடைவெ‌ளி‌க்கு‌ப் ‌பிறகே ‌மீ‌ண்டு‌ம் ப‌சி‌க்க‌‌த் தொட‌ங்‌கினா‌ல் உட‌லி‌ன் ‌‌‌ஜீரண உறு‌ப்புக‌ள் ந‌ல்ல ‌நிலை‌யி‌ல் செய‌ல்படு‌கிறது எனலா‌ம்.



இரவு உணவு‌க்கு‌ம், காலை உணவு‌க்குமான இடைவெ‌ளியானது ச‌ற்று ‌வி‌த்‌‌தியாச‌ப்படு‌ம். இரவு உண‌வு உ‌ண்ட ‌பிறகு வெகு நேர‌ம் க‌ழி‌த்த அடு‌த்த உணவை உ‌ண்பதா‌ல், காலை உணவு ச‌ற்று எ‌ளிய உணவாக இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று கூற‌ப்படு‌கிறது. காலை‌யிலேயே, அசைவ உணவுகளை ஒரு ‌பிடி ‌பிடி‌த்தா‌ல், வ‌யி‌ற்‌றி‌ன் ‌செ‌ரிமாண‌த் ‌‌திற‌ன் வெகுவாக பா‌தி‌க்கு‌ம்.

உடல் உறு‌ப்புக‌ள் ப‌ற்‌றி

நமது உட‌லி‌ல் மா‌ற்ற இயலாத ஒரே உறு‌ப்பு ஈர‌ல். ம‌னித உட‌லி‌ல் ‌மிக‌க் குறைவாக உ‌ள்ள தாது மா‌ங்க‌னீ‌‌ஸ்.
உட‌லி‌ல் உ‌ள்ள சுர‌ப்‌பிக‌ளி‌ல் ‌மிக‌ப்பெ‌ரிய சுர‌ப்‌பி க‌ல்‌லீர‌ல். ‌விர‌ல் நக‌ங்க‌ளி‌ல் நடு‌விர‌ல் நகமே வேகமாக வளரு‌ம்.
நா‌க்‌கி‌ல் சுமா‌ர் மூவா‌யிர‌ம் சுவை மொ‌ட்டுக‌ள் உ‌ள்ளன. தலை முடி பக‌ல் நேர‌த்‌தி‌ல் தா‌ன் அ‌திகமாக வளரு‌கிறது.
முதுகெலு‌ம்பு தரை‌யி‌ல் படுமாறு உற‌ங்கு‌ம் ஒரே உ‌யி‌ரின‌ம் ம‌னித‌ன்தா‌ன்.
நக‌ம் கடி‌க்கு‌ம் பழ‌க்க‌ம் மன அழு‌த்த‌த்‌தி‌ன் வெ‌ளி‌ப்பாடு என சொ‌ல்ல‌ப்படு‌கிறது.
சரும‌த்‌தி‌ன் அனை‌த்து ப‌க்க‌த்‌திலு‌ம் நு‌ண்‌ணிய துளைக‌ள் உ‌ள்ளன. துளைகளு‌க்கு‌க் ‌கீழே ‌விய‌ர்வை சுர‌ப்‌பிகளு‌ம் அமை‌ந்து‌ள்ளன.

கையில் கிடைத்ததை வைத்து மனநோயாளி வரைந்த ஓவியம் : குட்டிசுவரில் குவிந்த ரசிகர்கள்


ராமநாதபுரம் : இடிந்த சுவரில் கையில் கிடைத்தவற்றை கொண்டு மனநோயாளி ஒருவர் வரைந்த தத்ரூபமான ஓவியத்தை காண, ஏராளமானோர் குவிந்ததால் போக் குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத் தில் புண்ணிய தலங்களுக்கு நிகராக மனநோயாளிகளின் எண்ணிக்கைக் கும் பஞ்சமிருக்காது. இது போன்ற நோயாளிகளுக்கு ஒவ்வொருவருக்கும் ஒரு "ஸ்பெஷல்' தன்மை இருக்கும். அந்த வகையில் ராமநாதபுரத்தில் சிறிது நாட்களாக சுற்றித்திரியும்,தஞ்சாவூரை சேர்ந்த சதானந்தம் என்ற மனநோயாளியின் செயல், நேற்று பலரையும் சிந்திக்க வைத்தது. ராமநாதபுரம் தலைமை மருத்துவமனை அருகே உள்ள இடிக்கப் பட்ட கட்டடத்தில் சில நாட்களாக முடங்கிய,

இவரின் நடவடிக்கைகள் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. "என்ன தான் உள்ளே நடக்கிறது, என, பார்க்க அந்த இடிந்த கட்டடத்தில் உள்ளே நுழைந்தவர்களுக்கு காத்திருந்தது அதிர்ச்சி மட்டும் தான். ""இயற்கை எழில் கொஞ்சும் ஒரு பகுதியின் வழித்தடத்தில் சிலர் நடந்து செல்வதை போல'' தத்ரூபமான ஓவியம் ஒன்று அந்த சுவரில் வரையப்பட்டிருந்தது. கையில் கிடைத்த செங்கல், செடிகளின் இலை, குச்சிகள், கட்டைகள் போன்றவற்றை கொண்டு அந்த ஓவியத்தை சதானந்தம் வரைந்ததை கண்டு அங்கு கூடியவர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். சிறிது நேரத்தில் இந்த தகவல் காட்டு தீ போல பரவ,பலரும் ஆர்வமுடன் வந்து அந்த ஓவியத்தை பார்த்து ரசித்து, போட்டோ எடுத்து சென்றனர். இதை பற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல் ஓவியத்தல் மறுதிசையில் அமர்ந்திருந்த சதானந்தத்திடம், ""சார், வாங்க உங்களுக்கு சாப்பாடு வேணுமா? என்ன வேணும் கேளுங்க,'' என, ஒருவர் கேட்டார்.

""இன்று நீ வாங்கி தருவ, நாளைக்கு நீ வாங்கி தருவியா? , போ, போ, போய் வேலையை பாருங்க...,'' என, தனக்கே உரிய பாணியில் தத்துவம் கசிந்தார் சதானந்தம். "திறமைக்கு "மனம்' ஒரு பொருட்டல்ல,' என, பலரும் முணுமுணுத்தபடி களைந்தனர்.

சிகரெட் பிடிப்பவர்களுக்கு அறிவு திறன் குறையும் ஆய்வில் தகவல்




லண்டன், பிப் 26-
சிகரெட் பிடிப்பது உடல் நலத்துக்கு தீங்கானது என்பதுஅனைவரும் அறிந்த ஒன்று. இந்த நிலையில் சிகரெட் பிடிப்பதால் உடல் நலம் மட்டுமின்றி அறிவுத்திறனும் குறையும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
 
இந்த ஆய்வு இஸ்ரேலில் உள்ள டெல் ஹஸ்கோமரில் உள்ள ஷெபா மருத்துவ மையத்தில் டாக்டர் மார்க் வெய்கர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுக்கு இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 20, 211 பேர் பயன்படுத்தப்பட்டனர்.
 
அவர்களில் சிகரெட் பிடித்தவர்களுக்கு மற்றவர்களைவிட 7.5 புள்ளிகள் அறிவுத்திறன் குறைந்து இருப்பது ஆய்வில் தெரிய வந்தது.
இந்த பாதிப்பு பெரிய அளவில் இல்லாவிட்டாலும் அவர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டனர்.

பட்ஜெட் சிறப்பு அம்சங்கள்

 
 
*தனி நபர் வருமானம் 1 லட்சத்து 60 ஆயிரம் வரை உள்ளவர்களுக்கு வருமான வரி கிடையாது

*5 லட்சம் முதல் 8 லட்சம் வரை உள்வர்களுக்கு 20% வருமான வரி நிர்ணயம்
*8 லட்சத்திற்கு மேல் 30% வருமான வரி

*உணவு பொருள் விலையேற்றத்திற்கு காணரம்  பருவ மழை பெய்யாததே என குறிப்பிட்டுள்ளார்.

 *வரும் நிதி ஆண்டில் ரூ250000-க்கு பொது துறை நிறுவனத்தின் பங்குகள் விற்க திட்டம்

*புதிய வங்கி தொடங்க தனியார் துறைக்கு அனுமதி வழங்க ரிசர்வ் வங்கி பரிசிலனை

*வங்கி துறையை முறைப்படுத்த புதிய நிதி கமிஷன் அமைப்பு

*புதிய வருமான வரி சட்டம் 2011-ல் அமல்

*சந்தையில் பட்டியலிடப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களின் மதிப்பு 3.6 மடங்கு உயர்வு

*பொருளாதார ஊக்குவிப்பு திட்டம் வரும் ஆண்டிலும் தொடரும்

*கிழக்கு பகுதி மாநிலங்களின் வேளாண்மை உற்பத்தியை பெருக்க 400 கோடி ஒதுக்கீடு 

*வேளாண்மை துறையை மேம்படுத்த 4 முறை யுத்தி கையாளப்படும்

*சில்லறை விற்பனை துறையை தாராளமயமாக்க திட்டம்

*சாலை அமைப்பு பணிகளுக்கு 19894 கோடி ஒதுக்கீடு

*அன்னிய நேரடி முதலீடு எளிமைப்படுத்தப்பட்டுள்ளது

*ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் 2% வரி சலுகை நீடிப்பு

*வேளாண்மை கடனை உரிய நேரத்தில திருப்பி செலுத்தினால் 2% வட்டி சலுகை 

*மின்துறை வளர்ச்சிக்கு 5132 கோடி ஒதுக்கீடு

*சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தியை பெருக்க 1000 கோடி ஒதுக்கீடு

*வரும் நிதியாண்டில்  சூரிய  சக்தி மூலம் 50000 ஆயிரம் மெகாவாட் மின்  உற்பத்திக்கு இலக்கு

*திருப்பூரில்  ஜவுளி தொழில் வளர்ச்சிக்கு 200 கோடி தமிழக அரசுக்கு வழங்கப்படும்

*வேளாண் கடன் இலக்கு  3.75 லட்சம் கோடியாக அதிகரிப்பு

*கல்வி துறைக்கு நிதி ஒதுக்கீடு 31036 கோடி.
 
*சிறு தொழில், குறுந்தொழில் வளர்ச்சிக்கு ரூ 2400 கோடி ஒதுக்கீடு

*2000 பேருக்கு மேல் வசிக்கும் கிராமங்களில் வங்கி தொடங்கப்படும்

*அமைப்பு சாரா தொழிலாளர் நலனுக்கு  தேசிய அமைப்பு ஏற்படுத்தப்படும்

*உணவு பாதுகாப்பு சட்டம் மசோதா விரைவில் பொது விவாதத்திற்கு முன் வைக்கப்படும்

*ஜவுளி துறையில் 30 லட்சம் தொழிலாளர்களின் திறனை மேம்படுத்த இலக்கு

*அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 1000 கோடி ஒதுக்கீடு

*குறிப்பிட்ட வீட்டு வசதி கடனுக்கு 1% மானியம்

*நிலக்கரி ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படும் 

*நகர் புற வளர்ச்சிக்கு 5400 கோடி ஒதுக்கீடு

*சுகாதார துறைக்கு 22300 கோடி ஒதுக்கீடு

*தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு 41000 கோடி ஒதுக்கீடு
 
*பாதுகாப்பு துறைக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

*கிராம மேம்பாட்டு திட்டத்திற்க்கு 66100 கோடி ஒதுக்கீடு

*அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கும் திட்டம்- 1900 கோடி ஒதுக்கீடு

*நாட்டில் வெவ்வேறு பகுதிகளின் 5- உணவு பூங்காக்கள் அமைக்கப்படும்

*சிறுபான்மையினர் நலனுக்கு  2600 கோடி ஒதுக்கீடு

*கிராமப்புற கல்வி திட்டங்களுக்கு  கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படும்

*மத்திய காவல்படைக்கு மேலும் 2000 பணியாளர்களை அமர்த்த திட்டம்

*பாரத் நிர்மான் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 48000 கோடி ஒதுக்கீடு

*மகளிருக்கு அதிகாரம் வழங்கும் திட்டத்திற்கு 4500 கோடி ஒதுக்கீடு

*பெண் விவசாயிகளில் நிதி திட்டதிற்கு 100 கோடி இந்த நிதி ஆண்டில் ஒதுக்கப்படும்

*நிதி பற்றாக்குறையை 5.5% மடங்கு குறைக்க திட்டம்

Cigarettes, TVs, ACs and cars go dearer

Pay more for cars, fuel, TVs, ACs, cigarettes

New Delhi

Car, fuel, AC, TV, gold and silver jewellery, cigarettes and other tobacco products will cost more in the new fiscal with Finance Minister Pranab Mukherjee proposing a hike in duties and change in tax structure on these items in the Budget for 2010-11.
As part of a partial withdrawal of stimulus measures, given the recovery seen in the economy, Mukherjee announced hiking excise duty on non-oil products to 10 per cent from 8 per cent across all sectors.
Within minutes, car manufacturers announced that they would hike prices while government officials said that petrol and diesel would cost Rs 2.67 and Rs 2.58 more per litre, respectively, from midnight tonight.
Perhaps, Mukherjee wanted to create more demand by giving more tax concessions and provide more money in consumers' hand so that they buy more and boost the industry and economy.

மனதார மனம்கொடு.

வானவில்லின்
வருகைக்காக காத்திருக்கும்
வானம்போல்,,

வாழ்க்கையின்
வசந்தத்திற்காக காத்திருக்கும்
வாலிபம்!

வரன்கள்
வந்துகொண்டுதான் இருக்கிறது
வந்த இடத்தில்
வயிற்றை நிரப்பிக்கொண்டு,

வயது
போய்கொண்டுதான் இருக்கிறது
வரதட்சணை
கொடுக்க வழியில்லையே என்று!

உடல்
உருப்படியாயிருக்கும்
மனிதனுக்கு
உள்ளம் ஊனமோ?

பழமுதிர்
சோலையாகவேண்டிய
பாவையர்களின் நிலை
பாலைவனமாக மாறுமோ?

முதிர்க் கன்னிகளின்
காத்திருப்புக்கு
முடிவேயில்லையா?
முதுகெலும்பில்லாதவருக்கு
கல்யாணம் தேவையா?

கொடுமையான வரதட்சணையைக்
கொன்று போடுங்கள்
கன்னியர்க்கு வாழ்வுதந்து
கண்ணியமாகுங்கள்.

கல்யாணத்தின் கடமையினைக்
கருத்தில் கொள்ளுங்கள்
கணவரென்ற உறவுக்கு
கெளரவம் சேருங்கள்....

Development of more fascinating Communication Network with Mobile Applications

For the last many years mobile users are increasing at rapid pace! There are various devices available such as (PDAs) personal digital assistance, (EDAs) enterprise digital assistance, smartphones and cellphones or mobiles for the communication and for performing various commercial and social activities digitally. Nowadays communication is not only the purpose of the mobile user, there are various entertaining and business oriented activities possible by using mobiles. For extending the mobile usage more than communication, mobile applications are used in the mobile phones. So a variety of mobile applications are present in the mobile devices for the various activities like games, messaging, audio & video applications, calculations, travel, search, utilities, etc. For the implementation of the new applications there are various technologies used by the technical experts of the mobile application development. In the field of mobile applications Java is the oldest technology which is preferred by the developers for the development. Other popular technologies for the development of mobile applications are J2ME, DOTNET framework and C++. Going more in technical terms there are various software platforms used by the developers for the mobile phones such as Symbian, JavaMe, Android, Lazarus, Python, Flash Lite, BREW, etc. All these technologies are used for the graphical interface, unrestricted functionality, for full phone data access and for the best run time speed.
According to market & technological experts near future will demand for more advance applications for use in mobile devices, which can fulfill the growing demands of the hi-tech users of the modern world. Mobile applications use to play big role to provide more flexible use of the mobile devices according to desire, these applications help in increasing features and functions. Applications added in the mobile devices help in adding value such as access any time & everywhere, finding user locations through GPS (global positioning system) tracking and various numerical tasks.
For the successful and technologically error-free implementation of these applications is critical without technical expertise in mobile application development. Professional expertise services can be availed nowadays from the various globally active web development companies and other service providers. As nowadays in the field of mobile devices and in the communication network world various new inventions can be seen such as iPhone, iPods, Palm and PocketPC and related applications for implementing in these hi-tech devices.
World is growing in fast communication network with additional attractive and more interactive features of mobile and other contact devices.

Thursday, February 25, 2010

* விரைவாக பார்க்க உங்கள் ஐடியாவை சேமித்துவைக்க எளிதான ஒரு இணையதளம்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணிநேரமும் கூட நமக்கு ஐடியா
திடீரென்று தோன்றி கொண்டே தான் இருக்கும் அந்த வகையில்
நமக்கு தோன்றும் ஐடியாவை உடனடியாக ஆன்லைன் -ல்
சேமித்துவைக்க ஒரு இணையதளம் உள்ளது அதைப்பற்றி தான்
இந்த பதிவு.

படம் 1
நமக்கு பல ஐடியாக்கள் தோன்றும் அனைத்தயுமே எழுதிவைத்து
திரும்பி பார்க்ககூட நேரம் இருக்காது சரி இமெயில் சேமித்து
வைதுக்கொள்ளலாம் என்றாலும் தினம் தினம் வரும் இமெயிலை
படிக்கவே நமக்கு நேரம் சரியாக இருக்கிறது அப்படி இருக்கும் போது
இந்த ஐடியாவை நாம் எப்படி படித்துபார்க்க முடியும் அந்த வகையில்
தான்  இந்த இணையதளம் வந்துள்ளது ஐடியாவை மட்டும் சேமித்து
வைத்துக்கொள்ளலாம் என்று இந்த தளம் வந்துள்ளது.

இணையதளமுகவரி : http://www.ideary.ru
படம் 2
படம் 3
இதில் கணக்கு வைப்பதற்கு பெரிதாக தகவல் ஒன்றும் கொடுக்க
வேண்டாம் ஒரு பயனாளர் பெயர் ,கடவுச்சொல் மற்றும் இமெயில்
முகவரி என்ற மூன்றும் கொடுத்து நொடியில் உருவாக்கிவிடலாம்.
(படம் 1-ல் காட்டப்பட்டுள்ளது). கணக்கை உருவாக்கி முடித்ததும்
படம்-2ல் உள்ளது போல் add என்பதை அழுத்தி நம் ஐடியாவை
கொடுத்து சேமித்துக்கொள்ளவும் அவ்வளவு தான் இனி உங்கள்
கணக்கை திறந்ததும் நீங்கள் சேமித்துவைத்திருக்கும் ஐடியா
படம்3-ல் உள்ளதுபோல் காட்டப்படும். இந்த தளம் ஐடியாவை
சேமித்து வைத்துக்கொள்ள பயனுள்ளதளமாக இருக்கும்.

சினிமாவை விழுங்குகிறது ஐ.பி.எல்., கிரிக்கெட்


தியேட்டர்களில் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பக் கூடாது என்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும், வினியோகஸ்தர்கள் சங்கமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், புதிய மோதல் உருவாகியுள்ளது. மீறும் தியேட்டர்களுக்கு புதிய படங்கள் தராமல், "ரெட் கார்டு' போடவும் வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது.

ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள் வருகிற 12ம் தேதியிலிருந்து ஏப்ரல் 25ம் தேதி வரை இந்தியாவில் நடக்கிறது. இப்போட்டிகள் டில்லி, மும்பை, கோல்கட்டா மற்றும் சென்னை உட்பட முக்கிய நகரங்களில் 59 ஆட்டங்கள் நடத்தப்பட உள்ளன. சென்னை சேப்பாக்கத்தில் ஏழு ஆட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இப்போட்டியை தியேட்டர்களில் காண, இந்தியா முழுவதும் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.இதையொட்டி, இப்போட்டிகளை இந்தியா முழுவதும் 450 தியேட்டர்களில் திரையிட, தனியார் நிறுவனங்கள் முயன்று வருகின்றன. தமிழகத்தில் 100 தியேட்டர்களில் கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்ப தனியார் நிறுவனம் ஒன்று களமிறங்கி, சென்னையில் ஐநாக்ஸ், பைலட், பேபி ஆல்பர்ட், பி.வி.ஆர்., மதுரையில் மாணிக்க விநாயகர், திருச்சியில் மாரீஸ் காம்ப்ளக்ஸ், கோவையில் கங்கா காம்ப்ளக்ஸ் தியேட்டர் உட்பட 70 தியேட்டர்களில் திரையிட ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும், 30 தியேட்டர்களில் ஒப்பந்தம் பேசி வருகிறது. இதன் மூலம் இந்நிறுவனமும், தியேட்டர்காரர்களும் கணிசமான வருவாய் ஈட்ட முடிவு செய்துள்ளனர்.இந்த முடிவிற்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. "தியேட்டர்களில் ஐ.பி.எல்., கிரிக்கெட்டை ஒளிபரப்புவது, சினிமா தொழிலை அழித்து விடும்' என்று தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம.நாராயணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தயாரிப்பாளர்கள் சிலர் கூறியதாவது:எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு தமிழ்ப் படங்கள் அதிகமாக தயாரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த நான்கு மாதங்களாக வாரத்தில் நான்கு அல்லது ஐந்து படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், கார்ப்பரேட் கம்பெனிகள் தியேட்டர் பிடிப்பதற்கு போட்டி போடுவதால், சுமாராக ஓடிக் கொண்டிருக்கும் படங்கள் கூட திடீரென்று தியேட்டர்களிலிருந்து தூக்கப்பட்டு, அடுத்தடுத்த படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. கார்ப்பரேட் சினிமா கம்பெனிகள், முன்னணி நடிகர்களின் படங்களை அதிகமான தியேட்டர்களில் வெளியிட்டு வருகின்றன.கடந்த ஜனவரியிலிருந்து இதுவரை 18 படங்கள் வெளியாகியுள்ளன. இதில், மூன்று படங்களை தவிர மற்ற படங்களின் தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். இந்நிலையிலும் புதிய பட வெளியீட்டில் போட்டி ஓய்ந்தபாடில்லை. 21 படங்கள் ரிலீசிற்கு தயாராக உள்ள நிலையில், மார்ச் 12ம் தேதியிலிருந்து ஏப்ரல் 25ம் தேதி வரை, 70க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பப்பட உள்ளதால் ஆறு மணி நேரம் தியேட்டரில் இந்த ஒளிபரப்பு இருக்கும். இதனால், இந்நாட்களில் சில காட்சிகள் அல்லது நாள் முழுவதும் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படும் நிலையும் ஏற்படும்.இவ்வாறு தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து சென்னையில் உள்ள தியேட்டர் நிர்வாகிகள் சிலரிடம் கேட்ட போது, " ஐ.பி.எல்,, கிரிக்கெட் போட்டிகள் குறிப்பிட்ட தியேட்டர்களில் தான் திரையிடப்படுகிறது; இதற்கு ஒப்பந்தமும் செய்யப்பட்டு விட்டது. ஒப்பந்தத்தை மீற முடியாது. தனி தியேட்டர்களை விட காம்ப்ளக்ஸ் தியேட்டர்களில் தான் அதிகமாக கிரிக்கெட் போட்டி ஒளிபரப்ப ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.படம் திரையிட்டு கிடைக்கும் வருமானத்தை விட கிரிக்கெட் போட்டி ஒளிரப்பில் பல மடங்கு கூடுதல் வருமானம் கிடைக்க வழி உள்ளது. இப்படியிருக்க தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் சங்கங்களின் கட்டுப்பாட்டுக்கு எப்படி நாங்கள் தலை ஆட்ட முடியும். திட்டமிட்டபடி தியேட்டர்களில் மார்ச் 12ம் தேதியிலிருந்து 45 நாட்கள் கிரிக்கெட் ஒளிபரப்பப்படும்' என்றும் தெரிவித்தனர்.

ஆங்கிலத்தில் அசத்த ஆசையா...

இன்றைய உலகமயமாக்கப்பட்ட காலகட்டத்தில் படிப்பு, வேலை, வியாபாரம் என அனைத்திற்கும் அடிப்படை ஆங்கிலம் என்ற நிலை உருவாகி விட்டது.
ஆங்கிலம் தெரிந்திருப்பது உலகளாவிய நோக்கித்திலான எண்ணங்களையும், தன்னம்பிக்கையும் தரும். எந்த ஒரு மொழியையும் கற்பதில் என்றுமே தவறில்லை. சமுதாயாத்தில் பெரும்பாலும் யாருடன் தொடர்புகொள்ளவும் ஆங்கில மொழி அத்தியாவசியமாக விட்டது. குறிப்பாக, வேலைக்கான நேர்காணலில் இன்றைய இளைய தலைமுறையினரில் பெரும்பாலும் திறமை இருந்தும், ஆங்கில மொழி தெரியாத ஒரே காரணத்தால் குறுகிப் போகின்றனர்.

எந்தமொழியையும் எளிதில் கற்றுவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் கீழ்கண்ட ஆலோசனைகளை உங்களது வாழ்வில் பயன்படுத்த துவங்குங்கள்... விரைவில் உங்களுக்குள் ஒரு மாற்றம் தெரியும்.

* ஆங்கிலம் ஒரு அன்னிய மொழி; நம்மால் படிக்க முடியாது... போன்ற எதிர்மறையான எண்ணங்களை முதலில் உங்களது மனதில் இருந்து முழுவதுமாக அகற்றிவிடுங்கள்.

* தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது ஆங்கிலம் நாளிதழ், சிறுகதை, கவிதை, கட்டுரை போன்றவற்றை வாசியுங்கள்.

* ஆங்கிலத்தில் எழுத பழகுங்கள்... போதுமான வார்த்தை ஞானம் இல்லை என்றால் எந்தமொழியிலும் திறம்பட உங்களது கருத்துக்களை வெளியிட முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, முடிந்தவரை ஆங்கில வார்த்தைகளின் அர்த்தத்தை கற்றுக்கொள்ளுங்கள்.

* நீங்கள் கேட்ட, வாசித்ததில் புரியாத வார்த்தகளை குறித்துக்கொண்டு அதற்கான அர்த்தங்களை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இதை ஒரு பழக்கமாகவே தொடருங்கள்.

* தவறாகப் பேசு விடுவோம்... மற்றவர்கள் ஏளனத்திற்கு ஆளாகிவிடுவோம்... போன்ற எண்ணங்களை அடியோடு தகர்ந்தெரிந்துவிட்டு ஆங்கிலத்தில் பேசப் பழகுங்கள்.

* ஆங்கில டி.வி செய்தி சேனல்களை பாருங்கள். பிரிட்டிஷ் மொழி உச்சரிப்பை அறிந்துகொள்ள பி.பி.சி சேனலையும், அமெரிக்க மொழி உச்சரிப்பை அறிந்துகொள்ள சி.என்.என் சேனலையும், இந்திய ஆங்கில மொழி உச்சரிப்பை அறிந்துகொள்ள என்.டி.டி.வி போன்ற இந்திய ஆங்கில செய்தி சேனல்களையும் பார்க்கலாம்.

* தனிமையில் உங்களது கருத்துக்களை ஆங்கிலத்தில் பேசி, அதை ரெக்கார்டு செய்துகொள்ளுங்கள். பின், அதை நீங்களே கேட்டு வார்த்தை உச்சரிப்பில் உள்ள தவறுகளை அறிந்து, அடுத்தமுறை அதனை தவிர்க்க பயிற்சி பெறுங்கள்.

* எந்த ஒரு மொழிக்கும் இலக்கணம் அவசியம். பேசும்திறன், காலங்கள், வினைச் சொற்கள் போன்றவை ஒரு மொழியில் முக்கியத்துவம் பெறுகின்றன. அவற்றை முழு ஆர்வத்துடன் கற்றுக்கொள்ள முயலுங்கள்.

* ‘டிக்ஸ்னரி’ (அகராதி)யை உங்களது அபிமான நண்பராக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் குறிப்பெடுக்கும் வார்த்தைக்கான விளக்கத்தை டிக்ஸ்னரி உதவியுடன் அறிந்து கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை உங்களது தகவல் தொடர்பில் தொடர்ந்து பயன்படுத்துங்கள்.

* ஆங்கில மொழியில் புலமை பெற்ற ஒருவரை ஆங்கில நாளிதழை சத்தமாக வாசிக்க சொல்லி, அவர் எவ்வாறு உச்சரிக்கிறார் என்பதை கூர்ந்து கவனியுங்கள்.

* டய்ரி எழுவதை உங்களது பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அதனை நீங்கள் மட்டுமே பயன்படுத்துவதால், தவறாக எழுதிவிடுவோமோ என்ற பயம் உங்களுக்கு பெரும்பாலும் இருக்காது. தினமும் நூறு வார்த்தைகளாவது தயக்கமின்றி எழுதுங்கள்.

இவை அனைத்தையும் உங்களது ஆர்வத்தின் அடிப்படையில் மட்டுமே மிகச் சிறப்பாக செயல்படுத்த முடியும் என்பதை அடிமனதில் பதிந்துகொண்டு, பயிற்சி பெறுங்கள். ஆங்கிலம் விரைவில் உங்களது நாக்கில் தவழும்...


பாராட்டு மழையில் சச்சின் : கால் தொட்டு வணங்க கவாஸ்கர் விருப்பம்



 
 






புதுடில்லி
: ஒரு நாள் போட்டிகளின் வரலாற்றில் 200 ரன்கள் விளாசிய முதல் வீரரான சச்சினுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. இவரது கால் தொட்டு வணங்க, கவாஸ்கர் விருப்பம் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேனை காட்டிலும் சச்சின் தான் சிறந்த வீரர், என புகழாரம் சூட்டப் பட்டுள்ளது.
குவாலியரில் நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது. இப்போட்டியில் அதிரடி யாக பேட் செய்த சச்சின், 200 ரன்களை விளாசி உலக சாதனை படைத்தார். சுமார் 40 ஆண்டு கால ஒரு நாள் போட்டிகளின் வரலாற்றில் 200 ரன்கள் எடுக்கும் முதல் வீரரான இவர், மீண்டும் ஒரு முறை வெற்றி நாயகனாக ஜொலித்தார். 36 வயதான நிலையில், மிக நீண்ட நேரம் விளை யாடியது இவரது உடல் உறுதியை காட்டியது.

கிரிக்கெட் கடவுள்: இது குறித்து பிரிட்டன் மீடியா வெகுவாக புகழ்ந்துள்ளது. பி.பி.சி., வெளியிட்டுள்ள செய்தியில்,""கடைசி ஓவரில் ஒரு ரன் எடுத்து சச்சின் நிகழ்த்திய சாதனை பிரமிக்க வைத்தது. ஒரு இன்னிங்ஸ் முழுமையாக விளையாடியது அவரது உடல் வலிமையை சுட்டிக் காட்டியது,'' என குறிப் பிட்டுள்ளது.

டைம்ஸ் பத்திரிகையின் செய்தியில்,""கிரிக்கெட் உலகின் கடவுளாக போற்றப்படும் சச்சினின் சாதனையை அனைவரும் பாராட்ட வேண்டும. 21 ஆண்டுகளாக விளையாடி வரும் இவருக்கு, இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது,'' என குறிப்பிட்டுள்ளது. சச்சின் சாதனை குறித்து பல்வேறு அணிகளின் முன்னாள் கேப்டன்கள் புகழ்ந்து கூறியது:

கவாஸ்கர் (இந்தியா): சர்வதேச கிரிக்கெட்டில், சச்சினை போல் 93 சதங்கள் மற்றும் 30 ஆயிரம் ரன்களுக்கு மேல் வேறு யாரும் எடுக்கவில்லை. இவரை போன்ற சாதனையாளரின் கால் தொட்டு வணங்க ஆசைப்படுகிறேன். சச்சினுக்குள் எப்போதுமே ஒரு சிறுவனின் உணர்வு உண்டு. அந்த உணர்வு தான் தொடர்ந்து சாதிக்க தூண்டுகிறது. இவரது அகராதியில் "போதும்' என்ற வார்த்தைக்கு இடமில்லை. எனவே, டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்சில் 450 ரன், ஒரு நாள் போட்டிகளில் 250 ரன் எடுக்க முயற்சிக்க வேண்டும். பின் அவரது விருப்பத்திற்கு ஏற்ப, 2011ல் உலக கோப்பை கைப்பற்ற வேண்டும்.

வெங்சர்க்கார் (இந்தியா): ஒரே நாளில் சச்சின் 200 ரன்கள் எடுத்துள்ளது வியக்கத்தக்க விஷயம். இந்த இலக்கை வெறும் 147 பந்துகளில் எட்டியது அவரது மனம் மற்றும் உடல் வலிமையை எடுத்துக் காட்டுகிறது.

அஜித் வடேகர் (இந்தியா): சச்சின் சாதனைக்காக விளை யாடுவதில்லை. சாதனைகள், அவரை தேடி வருகின்றன. அன்று முதல் இன்று வரை ஒரே மாதிரியான அர்ப்பணிப்பு உணர்வுடன் ஆடி வருகிறார். இவரது, "சூப்பர் பார்மை' பார்க்கும் போது, 2011ல் இந்தியா உலக கோப்பையை கைப்பற்றுவது உறுதி.

நாசர் ஹூசைன் (இங்கிலாந்து): பொதுவாக வீரர்களை ஒப்பிட்டு பார்ப்பது இல்லை. ஆனாலும், குவாலியரில் சச்சினின் ஆட்டத்தை பார்த்த போது, கவாஸ்கர், ஆலன் பார்டர், லாரா, பாண்டிங்கை காட்டிலும் சிறந்த வீரராக தோன்றி னார். தவிர, ஆஸ்திரேலிய "பேட்டிங் பிதாமகன்' பிராட்மேனை காட்டிலும் மிகச் சிறந்த வீரராக காட்சி அளித்தார்.

சயீத் அன்வர் (பாக்.,): கடந்த 1997ல் சென்னை யில் நான் 194 ரன்கள் விளாசி சாதனை படைத்த போது, சச்சின் தான் இந்திய அணியின் கேப்டனாக இருந்தார். அப்போது முதல் ஆளாக என்னை பாராட்டினார். பதிலுக்கு இப்போது, எனது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

லோக்சபாவில் பாராட்டு: சாதனை நாயகன் சச்சினுக்கு, லோக்சபாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சபாநாயகர் மீராகுமார் வாசித்த செய்தியில்,"" ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ரன்கள் கடந்த உலகின் முதல் வீரர் என்ற, மகத்தான சாதனை படைத்த சச்சின், தேசத்துக்கு பெருமை சேர்த்துள்ளார். இது இளம் வீரர்களுக்கு பெரும் ஊக்கமாக இருக்கும்,'' என தெரிவிக்கப்பட்டது.

முதல்வர் வாழ்த்து: சச்சினுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி அனுப்பியுள்ள வாழ்த்து தந்தி: குவாலியரில் நடந்த சர்வதேச ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து உலக சாதனை படைத்த உங்களுக்கு எனது சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துக்கள். முந்தைய சாதனைகள் அனைத் தையும் நீங்கள் கடந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த அருமையான உலக சாதனையை இந்திய மக்களுக்கு சமர்ப்பிப்பதாக தாங்கள் கூறியதால், நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த தேசமே தங்களால் மிகவும் பெருமைப்படுகிறது. இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இதுவே ஆசை: சாதனை குறித்து சச்சின் கூறுகையில், ""சாதனைகள் முறியடிப்பதற்கே என கூறுவதுண்டு. இதன் அடிப்படையில் எனது சாதனையை, இந்திய வீரர் ஒருவர் தகர்த்தால் மகிழ்ச்சி அடை வேன்,'' என்றார்.

3வது இடம்: ஐ.சி.சி., ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன் களுக்கான ரேங்கிங் பட்டியலில், சச்சின், 3வது இடத்துக்கு (766 புள்ளி) முன்னேறி னார். கேப்டன் தோனி (827), முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய அணி 123 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதன்மூலம் ரூ. 35 லட்சம் பரிசு பெற காத்திருக்கிறது.

ரசிகர்களின் அடுத்த எதிர்பார்ப்பு "401'


புதுடில்லி: ஒருநாள் போட்டியில் 200 ரன்களை கடந்து சாதித்தது போன்று, டெஸ்ட் கிரிக்கெட்டில் 401 ரன்கள் எடுத்து, வெஸ்ட்இண்டீசின் லாராவின் (400*) சாதனையை, சச்சின் தகர்க்க வேண்டும் என்பது தான், ரசிகர்களின் அடுத்த எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்திய கிரிக்கெட்டின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் (36). 442 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று, 17598 ரன்கள் குவித்துள்ள இவர், முதல் வீரராக 200 ரன்களை கடந்து (முந்தைய சாதனை, 194 ரன்கள்) சாதித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள், அதிக சதம் (46) எடுத்துள்ள வீரர்களில் முதலிடம் வகிக்கிறார்.
டெஸ்டில் "401':
தான் பங்கேற்ற 166 டெஸ்டில் சச்சின், 46 சதத்தின் உதவியுடன் இதுவரை 13447 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக வங்கதேசத்துக்கு எதிராக ஒரு இன்னிங்சில் 248* ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்டில் ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் குவித்து சாதித்துள்ள சச்சின், ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீசின் லாராவின் (400*) சாதனையை முறியடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இப்போது எழுந்துள்ளது.
"நூற்றுக்கு நூறு':
இவை தவிர சச்சின், சத்தமில்லாமல் மற்றொரு சாதனையையும் நெருங்கிக் கொண்டுள்ளார். அதாவது ஒருநாள் (46) மற்றும் டெஸ்ட் (47) என இரண்டையும் சேர்த்து, இதுவரை 93 சதம் அடித்துள்ள சச்சின், விரைவில் இதிலும் சதம் (100) கடக்கவுள்ளார். இதுபோல 93 ஒருநாள் அரைசதம் அடித்துள்ள சச்சின், 100வது அரைசதத்தையும் விரைவில் எட்டுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
விரைவில் எட்டலாம்:
இந்த ஆண்டு (2010) துவங்கி பிப்ரவரி 26 வரை, டெஸ்டில் 4, ஒருநாள் போட்டியில் ஒன்று, என மொத்தம் ஐந்து சதம் அடித்துள்ளார். இதே வேகத்தில் சென்றால் எப்படியும் இந்த ஆண்டு இறுதிக்குள் 100 க்கு 100 கடந்து விடுவார்.
சேவக் வாய்ப்பு:
சச்சினின் 200 ரன், சாதனையை தற்போதுள்ள வீரர்களில் யாரால் முறியடிக்க முடியும் என பார்த்தால், நமது சேவக் தான் முன்னிலையில் இருக்கிறார். அதிரடி துவக்கவீரர் என்பதால், இவருக்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறுகிறார்கள். இரண்டாவதாக "சிக்சர் மன்னன்' யுவராஜ் சிங் பெயர் அடிபடுகிறது. தனது சாதனயை சச்சினே தகர்த்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்றும் கிரிக்கெட் நிபுணர்கள் கணிக்கின்றனர்.

பிராட்மேனை மிஞ்சிய சச்சின்: வீரர்கள் புகழாரம்




புதுடில்லி: ஒரு நாள் போட்டிகளின் வரலாற்றில் 200 ரன்கள் விளாசிய முதல் வீரரான சச்சினுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. இவரது கால் தொட்டு வணங்க, கவாஸ்கர் விருப்பம் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய ஜாம்பான் பிராட்மேனை காட்டிலும் சச்சின் தான் சிறந்த வீரர், என புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.
குவாலியரில் நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது. இப்போட்டியில் அதிரடியாக பேட் செய்த சச்சின், 200 ரன்களை விளாசி உலக சாதனை படைத்தார். சுமார் 40 ஆண்டு கால ஒரு நாள் போட்டிகளின் வரலாற்றில் 200 ரன்கள் எடுக்கும் முதல் வீரரான இவர், மீண்டும் ஒரு முறை வெற்றி நாயகனாக ஜொலித்தார். 36 வயதான நிலையில், மிக நீண்ட நேரம் விளையாடியது இவரது உடலுறுதியை காட்டியது.
கிரிக்கெட் கடவுள்:
இது குறித்து பிரிட்டன் மீடியா வெகுவாக புகழ்ந்துள்ளது. பி.பி.சி., வெளியிட்டுள்ள செய்தியில்,""கடைசி ஓவரில் ஒரு ரன் எடுத்து சச்சின் நிகழ்த்திய சாதனை பிரம்மிக்க வைத்தது. ஒரு இன்னிங்ஸ் முழுமையாக விளையாடியது அவரது உடல் வலிமையை சுட்டிக் காட்டியது,'' என குறிப்பிட்டுள்ளது. பிரபல டைம்ஸ் பத்திரிகை செய்தியில்,""கிரிக்கெட் உலகின் கடவுளாக போற்றப்படும் சச்சினின் சாதனையை அனைவரும் பாராட்ட வேண்டும. 21 ஆண்டுகளாக விளையாடி வரும் இவருக்கு, இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது,'' என குறிப்பிட்டுள்ளது.
சச்சின் சாதனை குறித்து பல்வேறு அணிகளின் முன்னாள் கேப்டன்கள் புகழ்ந்து கூறியது:
கவாஸ்கர்(இந்தியா): சர்வதேச கிரிக்கெட்டில், சச்சினை போல் 93 சதங்கள் மற்றும் 30 ஆயிரம் ரன்களுக்கு மேல் வேறு யாரும் எடுக்கவில்லை. இவரை போன்ற சாதனையாளரின் கால் தொட்டு வணங்க ஆசைப்படுகிறேன். சச்சினுக்குள் எப்போதுமே ஒரு சிறுவனின் உணர்வு உண்டு. அந்த உணர்வு தான் தொடர்ந்து சாதிக்க தூண்டுகிறது. இவரது அகராதியில் "போதும்' என்ற வார்த்தைக்கு இடமில்லை. எனவே, டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்சில் 450 ரன், ஒரு நாள் போட்டிகளில் 250 ரன் எடுக்க முயற்சிக்க வேண்டும். பின் அவரது விருப்பத்திற்கு ஏற்ப, 2011ல் உலக கோப்பை கைப்பற்ற வேண்டும்.
வெங்கசர்க்கார்(இந்தியா): ஒரே நாளில் சச்சின் 200 ரன்கள் எடுத்துள்ளது வியக்கத்தக்க விஷயம். இந்த இலக்கை வெறும் 147 பந்துகளில் எட்டியது அவரது மனம் மற்றும் உடல் வலிமையை எடுத்துக் காட்டுகிறது. தனது விக்கெட்டை வீணாக இழக்க மாட்டார். சிறிது நேரம் தாக்குப்பிடித்து விட்டால் மிகப் பெரும் இலக்குகளை எளிதாக எட்டி விடுவார்.
அஜித் வடேகர்(இந்தியா): சச்சின் சாதனைக்காக விளையாடுவதில்லை. சாதனைகள், அவரை தேடி வருகின்றன. அன்று முதல் இன்று வரை ஒரே மாதிரியான அர்ப்பணிப்பு உணர்வுடன் ஆடி வருகிறார். இவரது, "சூப்பர் பார்மை' பார்க்கும் போது, 2011ல் இந்தியா உலக கோப்பையை கைப்பற்றுவது உறுதி.
நாசர் ஹூசைன்(இங்கிலாந்து): பொதுவாக வீரர்களை ஒப்பிட்டு பார்ப்பது இல்லை. ஆனாலும், குவாலியரில் சச்சினின் ஆட்டத்தை பார்த்த போது, கவாஸ்கர், ஆலன் பார்டர், லாரா, பாண்டிங்கை காட்டிலும் சிறந்த வீரராக தோன்றினார். தவிர, ஆஸ்திரேலிய "பேட்டிங் பிதாமகன்' பிராட்மேனை காட்டிலும் மிகச் சிறந்த வீரராக காட்சி அளித்தார்.
இம்ரான் கான்(பாகிஸ்தான்): ஒரு நாள் போட்டிகளில் சேவக் தான் இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்த்தேன். ஆனால், இச்சாதனையை சச்சின் படைத்துள்ளார். இவர் நிறைய சாதனைகள் படைத்திருக்கலாம். அதில், 147 பந்தில் 200 ரன்கள் என்பது மிகவும் "ஸ்பெஷல்'. இதனை ஒரு அற்புதமான வீரர் நிகழ்த்திய அதிசயமாக கருதுகிறேன்.
சயீத் அன்வர்(பாக்.,): கடந்த 1997ல் சென்னையில் நான் 194 ரன்கள் விளாசி சாதனை படைத்த போது, சச்சின் தான் இந்திய அணியின் கேப்டனாக இருந்தார். அப்போது முதல் ஆளாக என்னை பாராட்டினார். பதிலுக்கு இப்போது, எனது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். எனது சாதனை 13 ஆண்டுகள் நீடித்தது ஆச்சரியம் தான். தற்போது 200 ரன்கள் விளாசி சாதித்துள்ள சச்சின், தன்னை நவீன கிரிக்கெட்டின் சிறந்த வீரராக அடையாளம் காட்டியுள்ளார்.
இதுவே ஆசை:
"மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் கூறுகையில்,""நான் சாதனைக்காக கிரிக்கெட் விளையாடவில்லை. காலப் போக்கில் சாதனைகள், தானாகவே வருகின்றன. குவாலியர் போட்டியில் 175 ரன்களை எட்டிய போது, 200 ரன்களை எடுக்கலாம் என மனதில் தோன்றியது. சாதனைகள் முறியடிப்பதற்கே என கூறுவதுண்டு. இதன் அடிப்படையில் எனது சாதனையை, இந்திய வீரர் ஒருவர் தகர்த்தால் மகிழ்ச்சி அடைவேன்,''என்றார்.
அஞ்சலி பெருமிதம்:
சச்சின் சாதனையை அவரது குடும்பத்தினர் முழுமையாக காண முடியவில்லையாம். பள்ளி தேர்வு நடப்பதால் மகள் சாரா, மகன் அர்ஜூன் ஆகியோர் மாலை முழுவதும் படித்துள்ளனர். இவர்களை தேர்வுக்கு தயார்படுத்துவதில் தான் மனைவி அஞ்சலி அதிக கவனம் செலுத்தியுள்ளார். அஞ்சலி கூறுகையில்,""இரட்டை சதம் அடித்த விஷயத்தை "போன்' மூலம் கூறி இன்ப அதிர்ச்சி தந்தார் சச்சின். கிரிக்கெட் மீதுள்ள பக்தி தான் அவரது சாதனைகளுக்கு முக்கிய காரணம்,''என்றார்.
சாதனைக்கு அங்கீகார:
சச்சின் சாதனை படைத்த குவாலியர் ரூப் சிங் மைதானத்தின் ஒரு பகுதிக்கு அவரது பெயரை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தவிர, ம.பி.,யில் உள்ள "சிட்டி சென்டர்-ஹுரவாலி' சாலைக்கு சச்சின் பெயர் வைக்கப்படும் என முதல்வர் சிவராஜ் சவுகான் தெரிவித்தார்.
லோக்சபாவில் பாராட்டு:
சாதனை நாயகன் சச்சினுக்கு, லோக்சபாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சபாநாயகர் மீராகுமார் வாசித்த செய்தியில்,"" ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ரன்கள் கடந்த உலகின் முதல் வீரர் என்ற, மகத்தான சாதனை படைத்த சச்சின், தேசத்துக்கு பெருமை சேர்த்துள்ளார். இது இளம் வீரர்களுக்கு பெரும் ஊக்கமாக இருக்கும். எதிர்காலத்திலும் சச்சின் இதுபோன்று சாதிக்க வாழ்த்துக்கள்,'' என தெரிவிக்கப்பட்டது.
முதல்வர் வாழ்த்து
உலக சாதனை படைத்த சச்சினுக்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
சச்சினுக்கு முதல்வர் அனுப்பியுள்ள வாழ்த்து தந்தி: குவாலியரில் நடந்த சர்வதேச ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து உலக சாதனை படைத்த உங்களுக்கு எனது சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துக்கள். முந்தைய சாதனைகள் அனைத்தையும் நீங்கள் கடந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த அருமையான உலக சாதனையை இந்திய மக்களுக்கு சமர்ப்பிப்பதாக தாங்கள் கூறியதால், நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த தேசமே தங்களால் மிகவும் பெருமைப்படுகிறது.
இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சச்சின் "நம்பர்-3'
ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங் பட்டியலை, ஐ.சி.சி., துபாயில் நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் சச்சின் (766 புள்ளி) மூன்று இடங்கள் முன்னேறி, "நம்பர்-3' இடம் பிடித்தார். இதற்கு குவாலியர் ஒருநாள் போட்டியில் இரட்டை சதமடித்து சாதித்ததே காரணம். இப்போட்டியில் அதிரடியாக ஆடிய இந்திய கேப்டன் தோனி (827), முதலிடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலியாவின் மைக்கேல் ஹசி (809), இரண்டாவது இடத்தில் தொடர்கிறார். பவுலர்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் ஹர்பஜன் சிங், தொடர்ந்து 6வது இடத்தில் உள்ளார்.
இந்தியா "நம்பர்-2':
அணிகளுக்கான ரேங்கிங்கில், இந்திய அணி 123 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. தென் ஆப்ரிக்க அணி (115), மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதன்மூலம் வரும் ஏப்ரல் 1ம் தேதி ஐ.சி.சி., சார்பில் வழங்கப்படும், ரூ. 35 லட்சம் பரிசு இந்திய அணிக்கு கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

போபால் நகர சாலை மற்றும் மைதானத்திற்கு சச்சின் பெயர்

போபால் : ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் முதன்முறையாக இரட்டை சதம் அடித்து உலக சாதனை படைத்த சச்சின் டெண்டுல்கரை கவுரவிக்க மத்திய பிரதேச அரசு தீர்மானித்துள்ளது. இதன் காரணமாக மத்திய பிரதேச சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில், குவாலியரில் உள்ள சாலை ஒன்றிற்கும், மைதான அரங்கிற்கும் சச்சினின் பெயரை சூட்டும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். இதனை அவை உறுப்பினர்கள் கைதட்டி வரவேற்றனர்.

சச்சின்னின் வாழ்க்கை வரலாறு ஒரே பார்வை