விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் இவற்றின் மூலம் பல்வேறு வித்தியாசமான மாற்றங்களை சந்தித்துக் கொண்டிருக்கும் மனிதர்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு தான் இருக்கின்றனர்.
Wednesday, December 28, 2011
வியக்க வைக்கும் மனிதர்களின் சாகசச் செயல் (வீடியோ இணைப்பு)
Saturday, December 24, 2011
மின்சாரம் இல்லாத உலகத்தின் மாற்றம்
மின்சாரம் மேகத்திலிருந்து பூமிக்கு பாய்வதையே நாம் மின்னல் என்று அழைக்கிறோம் மின்னணுக்களின் ஓட்டத்தினால் மின்சாரம் (electricity) உருவாகிறது. மின்சக்தியை எந்த வித சக்தியாகவும் மிக எளிதில் மாற்ற பல கருவிகள் உள்ளன.
அன்றாட வாழ்வில் மின்சாரம் தற்போது பரவலாக உபயோகப்பட்டு வருகிறது. மின்சாரம் இல்லாமல் உலகம் எப்படி இயங்கும் என்பதை இந்த காணொளியில் காண்போம்.
CLICK THE FOLLOWING LINK:
http://jaffnawin.com/readmore123.php?newsid=4487
Saturday, February 12, 2011
டி.என்.பி.எஸ்.சி.,யின் அலட்சியம்: ஒரே கவரில் 9 "ஹால்டிக்கெட்'கள்
பழநி : டி.என்.பி.எஸ்.சி.,யின் அலட்சியத்தால், வி.ஏ.ஓ., தேர்விற்கு தயாராகும் பலர், ஏமாற்றத்திற்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
வி.ஏ.ஓ., காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பிப்., 20 ல் நடக்க உள்ளது. இத்தேர்விற்கான ஹால்டிக்கெட் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. பல விண்ணப்பதாரர்களுக்கு இதுவரை கிடைக்கப்பெறவில்லை. பழநி அருகே பழைய ஆயக்குடியைச் சேர்ந்த பொன்னுச்சாமி என்பவருக்கு, நேற்று ஹால்டிக்கெட் கவர் வந்தது. இதைப் பிரித்தபோது, பொன்னுச்சாமி உட்பட ஒன்பது பேரின் ஹால்டிக்கெட் அனுப்பப்பட்டு இருந்தது. இதில் சேலம், தூத்துக்குடி, விழுப்புரம் உள்ளிட்ட பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின், ஹால்டிக்கெட்கள் இடம்பெற்றிருந்தன.
பொன்னுச்சாமி கூறுகையில், ""தவறுதலாக ஒரே கவரில் வந்திருக்கலாம். பிறரது ஹால்டிக்கெட்களை, டி.என்.பி.எஸ்.சி., தேர்வாணையத்திற்கே திருப்பி அனுப்ப உள்ளேன்,'' என்றார். மேலும் போட்டோவுடன் விண்ணப்பித்த சிலருக்கு, போட்டோ, தவறுதலான முகவரி போன்றவற்றுடன் அனுப்பப்பட்டு உள்ளது. இத்தேர்வை நம்பி பலர் ஏற்கனவே பார்த்துவந்த பணியை விட்டுள்ளனர். பல ஆயிரம் ரூபாய் செலவழித்து, தேர்விற்கு தயாராகி வந்தனர். இருப்பினும் டி.என்.பி.எஸ்.சி.,யின் அலட்சியத்தால், பலர் ஏமாற்றமடையும் நிலை உள்ளது.
வி.ஏ.ஓ., காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பிப்., 20 ல் நடக்க உள்ளது. இத்தேர்விற்கான ஹால்டிக்கெட் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. பல விண்ணப்பதாரர்களுக்கு இதுவரை கிடைக்கப்பெறவில்லை. பழநி அருகே பழைய ஆயக்குடியைச் சேர்ந்த பொன்னுச்சாமி என்பவருக்கு, நேற்று ஹால்டிக்கெட் கவர் வந்தது. இதைப் பிரித்தபோது, பொன்னுச்சாமி உட்பட ஒன்பது பேரின் ஹால்டிக்கெட் அனுப்பப்பட்டு இருந்தது. இதில் சேலம், தூத்துக்குடி, விழுப்புரம் உள்ளிட்ட பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின், ஹால்டிக்கெட்கள் இடம்பெற்றிருந்தன.
பொன்னுச்சாமி கூறுகையில், ""தவறுதலாக ஒரே கவரில் வந்திருக்கலாம். பிறரது ஹால்டிக்கெட்களை, டி.என்.பி.எஸ்.சி., தேர்வாணையத்திற்கே திருப்பி அனுப்ப உள்ளேன்,'' என்றார். மேலும் போட்டோவுடன் விண்ணப்பித்த சிலருக்கு, போட்டோ, தவறுதலான முகவரி போன்றவற்றுடன் அனுப்பப்பட்டு உள்ளது. இத்தேர்வை நம்பி பலர் ஏற்கனவே பார்த்துவந்த பணியை விட்டுள்ளனர். பல ஆயிரம் ரூபாய் செலவழித்து, தேர்விற்கு தயாராகி வந்தனர். இருப்பினும் டி.என்.பி.எஸ்.சி.,யின் அலட்சியத்தால், பலர் ஏமாற்றமடையும் நிலை உள்ளது.
Subscribe to:
Posts (Atom)