Showing posts with label ஆன்மீகம். Show all posts
Showing posts with label ஆன்மீகம். Show all posts

Thursday, April 29, 2010

நான் ஆம்பிளையே இல்லை : சாமியார் நித்யானந்தா கதறல்

பெங்களூர் : ‘நான் ஆண் மகனே இல்லை. யாரோ செய்த சதியில் சிக்கி அவதிப்பட்டுக் கொண்டு இருக்கிறேன்’ என்று போலீஸ் விசாரணையில் சாமியார் நித்யானந்தா கதறி அழுதார்.
நடிகை ரஞ்சிதாவுடன் சாமியார் நித்யானந்தா நெருக்கமாக இருந்த காட்சிகள் வெளியான பிறகு அவர் மீது ஏராளமான புகார்கள் குவிந்து வருகின்றன. அன்னிய செலாவணி மோசடி, தங்கம் கடத்தல் போன்ற புதிய குற்றச்சாட்டுகளும் கிளம்பியுள்ளன. இது பற்றி கர்நாடக சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். அதில் நித்யானந்தா போதிய ஒத்துழைப்பு அளிக்க மறுப்பதால், அவருக்கு தொடர்ந்து காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டு வருகிறது.
5 பெண்களுடன் தொடர்பு: நித்யானந்தாவுக்கு நடிகை ரஞ்சிதாவுடன் மட்டுமின்றி மேலும் 5 பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளது. அவர்களுடன் அவர் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் அடங்கிய சி.டி.க்கள் கிடைத்துள்ளன. சாமியாரிடம் விசாரணை நடத்தும் சி.ஐ.டி. குழுவுக்கு தலைமை வகிக்கும் எஸ்.பி. யோகப்பாவும் இதை உறுதிப்படுத்தி இருக்கிறார். ‘‘பிடதி ஆசிரமத்தில் சோதனை நடத்தியபோது, நித்யானந்தா 5 பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சி.டி.க்களை கைப்பற்றினோம். அவற்றை ஐதராபாத்தில் உள்ள தடயவியல் சோதனை மையத்துக்கு அனுப்பி பரிசோதித்தோம். அது உண்மையான சி.டி.க்கள்தான் என உறுதியாகி இருக்கிறது. அதில் உள்ள பெண்கள் யார் என்று தெரிய வேண்டும்’’ என்று அவர் கூறினார்.
ஆண் மகன் இல்லை: நித்யானந்தாவிடம் சி.ஐ.டி. அதிகாரிகள் நேற்று காலை தொடங்கி மாலை வரை துருவித் துருவி விசாரணை நடத்தினர். ‘நான் எந்த தவறும் செய்யவில்லை, எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும்’ என்று வழக்கமான பாணியில் நேற்றும் அவர் கூறியதால் பொறுமை இழந்த போலீசார், விசாரணை முறையை சிறிது மாற்றி உள்ளனர். அதை சமாளிக்க முடியாத சாமியார், ‘நான் ஆம்பிளையே இல்லை... பிறகு எப்படி பாலியல் உறவில் ஈடுபட முடியும்? போலீசார் கைப்பற்றியுள்ள சி.டி.யில் (5 பெண்களுடன் நெருக்கம்) இருப்பதும் நானில்லை, எனக்கு களங்கம் ஏற்படுத்த யாரோ செய்துள்ள சதியில் மாட்டிக் கொண்டு அவதிப்படுகிறேன்’ என்று குரல் தழுதழுத்தப்படி கூறியுள்ளார். அவருக்கு ஆண்மை சோதனை நடத்த முடிவு செய்துள்ள போலீசார், பெங்களூரில் உள்ள 4 மருத்துவமனைகளிடம் நேரம் ஒதுக்கும்படி கேட்டுள்ளனர்.
ஜாமீன் மனு ஒத்திவைப்பு: ராம் நகரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நித்யானந்தாவின் ஜாமீன் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. நித்யானந்தா இப்போது போலீஸ் காவலில் உள்ளதால், இந்த மனு மீதான விசாரணையை மே 3ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். மேலும், ஆசிரமத்தில் சந்தன கட்டைகள் இருந்தது தொடர்பாக வனத்துறை தொடர்ந்துள்ள வழக்கை இன்று விசாரிப்பதாக தெரிவித்தார்.

ரஞ்சிதா வரவில்லை : நித்யானந்தா வழக்கில் முக்கிய சாட்சியாக விளங்கும் நடிகை ரஞ்சிதா, சி.ஐ.டி. போலீசாரிடம் வாக்கு மூலம் கொடுக்க வருவதாக கூறியிருந்தார். ஆனால், நேற்று மாலை வரை அவர் வரவில்லை. ரஞ்சிதா மற்றும் அவருடைய தந்தையின் செல்போன் எண்கள் போலீசுக்கு கிடைத்துள்ளன. சி.ஐ.டி. போலீசார் அவற்றில் தொடர்பு கொண்டபோது, ‘சுவிட்ச் ஆப்‘ செய்யப்பட்டு இருந்தன.

Tuesday, March 23, 2010

நித்யானந்தா, பிரேமானந்தா பரபரப்பு சந்திப்பு இடம் : திருச்சி மத்திய சிறை

(பிரேமானந்தா கண்களை மூடி தியானத்தில் இருக்க நித்யா உள்ளே நுழைகிறார்)
நித்யா: ஓம் சங்கராச்சார்ய நமஹ! சுவாமி! சுவாமி!
பிரேமா: அட! நித்யா! வா குழந்தாய்! மங்களம் உண்டாகட்டும்
நித்யா: அடப்போங்க சாமி! அதுக்கெல்லாம் இனி வாய்ப்பேயில்ல!. அதுக்குள்ள தான் என் மேல கேஸ போட்டுட்டானுங்களே! இனி மங்களமும் உண்டாகாது, மகேஸ்வரியும் உண்டாகாது.
பிரேமா: அடச்சீ! என்னேரமும் அதே நெனப்பு தானா? நான் சொன்னது வேற அர்த்தத்தில தம்பி.
நித்யா: சாமி! நான் வரும்போது தாங்கள் நித்ய சிஸ்டையில் இருந்தது போலத் தெரிந்ததே?
பிரேமா: அதெல்லாம் ஒரு மண்ணும் கிடையாது மகனே! நைட்டெல்லாம் என் ரூம்மெட்கள் விடும் குறட்டையால் இரவில் தூக்கமே வருவது கிடையாது.பகலில் தூங்கினால் ஜெயிலர்கள் பட்டையைக் கிளப்பிவிடுவார்கள். அதனால் தான் தியானம் செய்கிற சாக்கிலே தினமும் சற்று அசந்து விடுவேன். அதெல்லாம் விடு தம்பி! தொழில் எப்படி போய்க்கொண்டிருக்கிறது? என்ன திடீரென்று திருச்சி விஜயம்? அதுவும் ஏன் இந்த‌ திடீர் சந்திப்பு?
நித்யா: ஊருக்கு ஊரு சந்தி சிரிச்சி போனதால தான் இந்த சந்திப்பு சுவாமி. எப்படியும் இன்னும் கொஞ்ச நாள்ள என்ன அரெஸ்ட் பண்ணப் போறதா என் சீடர்கள் செய்தி கொண்டு வந்துவிட்டார்கள்.சரி ஒரு முன்னோட்டமா ஜெயில் எப்படி இருக்கும்னு பாத்துட்டு போகலாமுன்னு ஒவ்வொரு ஊரா போயி விசாரிக்கிறேன். இங்க தான் சுவாமி இருக்கீங்கல்ல! அதான் ஜெயில் வாழ்க்கையைப் பற்றி கேட்டுத்தெரிஞ்சிக்கிட்டு போகலாமுன்னு வந்தேன்.
பிரேமா: ஓஹோ! மெயின் பிக்சர் வர்றதுக்கு முந்தி டிரைலர் மாதிரியா? அதெல்லாம் சரி தம்பி, கண்ண மூடிக்கிட்டு பாப்பேன்னு மேடைக்கு மேடை உதார் உடுற உன்னால, உன் ரூமுக்குள்ள‌இருந்த கேமிராவ‌ ஏன் பார்க்க முடியாம போச்சி????
நித்யா: அதில்ல சாமி! அந்த வீடியோ எடுத்த ரெண்டு நாளும் என் ஞான திருஷ்டிக்கு பேட்டரி வீக்கா இருந்திச்சி. அதனால சுவிட்ச் ஆப் பண்ணி வச்சிருந்தேன். அந்த நேரம் பாத்து எவனோ ஆட்டயக் கலச்சிட்டான்.
பிரேமா: (மனசுக்குள்: அடப்பாவி எங்கிட்டயேவா?) என்னய்யா இது செல்போனுக்கு சார்ச் இல்லைன்னு சொல்ற மாதிரி சொல்ற! தம்பி நானும் உன்ன மாதிரி தொழில்காரன் தான். எங்கிட்டயே ஞானதிருஷ்டி பூன திருஷ்டின்னு பிலிம சுத்தாதே! அதவிடு உன் பிறந்த நாள்,வருசம் என்னன்னு சொல்லு. உன் ஜாதகம் என்ன சொல்லுதுன்னு கணிச்சிப் பார்ப்போம்.
நித்யா: அதுவந்து சாமி! நான் பொறந்த பத்தாவது நாளு,இமயமலையில உள்ள சித்தர், ரஜினிகாந்த்து குருநாதரு, பாபா வச்ச பேரு.....
பிரேமா: ஏய்!ஏய்! நிப்பாட்டுய்யா! நானும் உன்ன மாதிரி பெரிய ரவுடி தான். கேட்டதுக்கு பதில சொல்லுன்னா ஊருக்கு சொல்ற கதைய என்கிட்டயும் அளந்துவிடுற?
நித்யா: சாரி சாமி! பொதுக்கூட்டமுன்னு நெனச்சிட்டேன்.01/01/1978 ல பொறந்தேன். நான் பொறந்த பத்தாவது நாளு ஒரு பெரிய ஜோசியர்..
பிரேமா: இது என்னடா இம்சையா போச்சி! ஏய் நிப்பாட்டுய்யா.. நானும் உன்னமாதிரி தொழில்காரந்தான்னு மாத்தி மாத்தி சொல்லிக்கிட்டு இருக்கேன்,மறுபடி மறுபடி அதே ரிக்கார்ட ஓட்டுற‌!என்னப் பத்தி ஒனக்குத் தெரியாது, கடுப்பானா கமெண்டலத்த தூக்கி அடிச்சிப்புடுவேன். ஒழுங்கா சொல்லு.
நித்யா: 1/1/1978 ல பொறந்தேன் சுவாமி. 1990 லிருந்து 1993 வரை ஒரு கல்லூரியிலே மெக்கானிக்கல் இன்சினியரிங் முடிச்சேன். அதுக்கப்பறம் 10 வருசம் என் ஞானத்தேடல் காரணமா 1/1/2000த்தில் இமயமலையில இருக்குற பாபாஜி மூலம் என் பெயரை நித்யானந்தா என மாத்திக்கிட்டேன்.
(இதைக் கேட்டவுடன் பிரேம்ஜி தரையில் படுத்து புரண்டு புரண்டு சிரிக்கிறார்)
நித்யா: என்ன சாமி! நான் என்ன ஜோக்கா சொல்லிக்கிட்டு இருக்கேன்! இப்படி சிரிக்கிறீங்களே!
பிரேமா: இல்ல தம்பி! 1978 ல பிறந்த ஒருவன் 1990ல ஏழாவது தான் படிக்க முடியும். எப்படி பாலிடெக்னிக் இன்சினியரிங் படிக்க முடியும்? 1993 லிருந்து 2000 வரைக்கும் இடைப்பட்ட காலம் 7வருசம் தான். ஆனா நீ 10 வருஷம்னு உன் வெப்சைட்ல போட்டு இருந்த. இப்படி ஆரம்பமே பெரிய புளுகு மூட்டையா இருக்கே! உன்னய போயி எப்படி சாமின்னு ஏத்துக்கிட்டாய்ங்கே!
நித்யா: சுவாமி! எனக்கு பில்டிங்க் ஸ்டிராங்கு, பேஸ்மட்டம் ஃபுல் வீக்குங்கிறத இப்ப நீங்க சொல்லித்தான் தெரிஞ்சிக்கிட்டேன். இனிமே உசாராயிடுறேன்.நீங்க என் ஜாதகம் என்ன சொல்லுதுன்னு பாருங்க!
பிரேமா: குருமேடு..சுக்கிரமேடு..புதன்மேடு... உன் ஜாதகப்பிரகாரம் நீ எப்பவோ.....
நித்யா: ராஜகுருவா ஆயிருக்கனுமா?
பிரேமா: இல்ல மகனே! எப்பவோ உள்ள வந்திருக்கனும்! என்ன செய்றது பெரிய பெரிய தலைங்கலையெல்லாம் மடக்கிப் போட்டுட்ட. அதுவும் அந்த சரக்கு மாநிலத்து சி.எம் உன் ஆஸ்தான சீடராமே!
நித்யா: ஆமா சுவாமி! ஆனா இப்ப யாரு சிபாரிசும் கதைக்குஆவாது. என் மேல 6 கேஸ புக் பண்ணிடுச்சி காவல்துறை. எல்லாமே சினிமாவில வர்ற மாதிரி நடக்குது.
பிரேமா: சினிமான்னதும் ஞாபகம் வருது! நீ ஏதோ சினிமா படம் எடுக்கப்போறதா ஒரு நியூஸ் கசியுதே?
நித்யா: இந்தச் செய்தி உங்க வரைக்கும் வந்திடுச்சா! உண்மைதான் சாமி! "நான் அவன் இல்லை 3" அப்டின்னு ஒரு படம் எடுக்கலாம்னு நெனச்சி அறிவிப்பு உட்டேன். அடுத்த நிமிசம் பாருங்க, நம்ம ஷகிலா, ஷர்மிலி, ரேஷ்மா, மரியா,சிந்துக்கிட்டேயிருந்து வரிசையா போனு. சுவாமி நிச்சயமா அதுல எங்களுக்கு ஒரு சீன் வைக்கனும்னும், தேவைன்னா இப்பவே சாம்பிள் சீன் ரிகர்சல் பார்க்க நாங்க ரெடின்னும் போன் மேல போன் பண்றாங்க. சாம்பிள் பாத்து வாங்க நான் என்ன ஸ்வீட்டா ஆர்டர் பண்ணப் போறேன்!!!??. நான் எவ்வளவு தான் தாங்குவேன் சாமி?
பிரேமா: அடப்போய்யா! நம்மள மாதிரி சாமியாருங்க வாயிலேந்து லிங்கம் எடுத்து வச்சமா, 4 பெண்கள‌ வாந்தி எடுக்க வச்சமான்னு இல்லாம நீ என்னய்யா புதுசா சினிமா படம் எடுக்குறேங்கிற , நான் சென்ஸ்.!
நித்யா: அட நீங்க வேற சாமி! உங்க லிங்கம் எடுக்குற மேட்டற நீங்கதான் மெச்சிக்கனும்., அதான் கருப்புச் சட்டைக்காரன் ஊருக்கு ஊரு மேடையைப் போட்டு உங்கள விட பெரிய பெரிய லிங்கமா எடுத்துக்காட்டி நம்மள மாதிரி ஆளுகள கிழிகிழின்னு கிழிக்கிறானே!!
பிரேமா: அவனுக்கு லிங்கந்தான்யா எடுக்க முடியும்,வெள்ளக்காரிய வாந்தி எடுக்க வைக்க முடியுமா?
நித்யா: என்னமோ வாந்தி எடுக்க வக்கிற மேட்டர வாரனாசி யுனிவர்சிட்டியில‌ வாங்குன பட்டம் மாதிரி பேசுறீங்க. இதெல்லாம் கேட்டு சனங்க உசாரானா சங்கு தான். அதெல்லாம் பரவாயில்ல சாமி! என் மேட்டர வச்சி எல்லாரும் தன்னோட ரேட்டிங்க ஏத்திக்கிறாங்க. இவன பாருங்க, எதிரொலியில என்னயப் பத்தி இது 3வது பதிவு.
பிரேமா: ஏம்பா! பெரிய பெரிய மீடியாக்களெல்லாம் உன் வீடியோவ கண்டினிவா காட்டி ரேட்டிங்க் ஏத்தும் போது, ஆப்ட்ரால் இவன் பிளாக்குல‌ தானய்யா எழுதுறான். விடுய்யா போயிட்டு போறான்.
நித்யா: இதுகூட பெரிய விசயமில்லை சாமி! என் வீடியோவில எல்லாரும் அவங்க கம்பெனி லோகோவைப் போட்டு அதுக்கு காப்பிரைட்டும் போட்டு சம்பாதிக்கிறாங்க. திருட்டு விசிடிக்கு போராடுற திரையுலகம் இந்த மேட்டர்ல வாய்பொத்தி இருக்கு. இதுவும் ஒருவகையில திருட்டி விசிடி தானே சுவாமி.
பிரேமா: உன் ஆதங்கம் புரியுது நித்யா! அதுக்கெல்லாம் ஒரே வழி தான் இருக்கு. மொதல்ல நாம "தென்னிந்திய சாமியார்கள் சங்கம்" அப்டிங்கிற பேர்ல ஒரு சங்கத்த பதிவு செஞ்சி இனிமே இது மாதிரி திருட்டு விசிடி வெளியிட்டா அத எதிர்த்து போராடுனும். அதுமட்டுமல்லாம நமக்கு ஒரு வினியோகஸ்தர்கள் சங்கமும் ஆரம்பிச்சி நம்மகிட்ட இருக்கிற வீடியோவெல்லாம் அவங்க மூலமாத்தான் வெளியிடனும்னு ஒரு தீர்மானம் போட்டாத்தான் இவனுங்க திருந்துவானுங்க!.,
நித்யா: நல்ல யோசனை சுவாமி! முயற்சி பண்ணலாம்!
பிரேமா: அதுசரி நித்யா! நீ ஞானபீடம்கிற பேர்ல ஒரு டிவி சேனல் ஆரம்பிக்க இருந்ததா ஒரு தகவல் கசிந்ததே!
நித்யா: ஆமாம் சுவாமி! எல்லா வேலையும் முடிஞ்சி ரெண்டு மூனு என்.ஆர்.ஐய மடக்கி வச்சிருந்தேன். எங்க? அதுக்குள்ள தான் என்னய மடக்கிப் போட்டுட்டாங்களே!
பிரேமா: ச்சே! டிவி சேனல் மட்டும் ஆரம்பிச்சிருந்தா இந்த வீடியோவ நாம காட்டி வெளம்பரங்கள அள்ளியிருக்கலாம்.
நித்யா: அட ஏன் சாமி வெந்த புண்ணுல வெடிய வெக்கிறீங்க! நீங்களும் என்ன புரிஞ்சிக்கிட்டது அவ்ளோ தானா? நான் சட்டப்பூர்வமா எந்த தப்பும் செய்யல சாமி! நான் ஒரு பாலியல் ஆராச்சியாளன்.
பிரேமா: ஓஹோ! ஆராய்ச்சி தியேரி முடிஞ்சி பிராக்டிகல் பண்ணும் போது தான் படம் புடிச்சிட்டானுங்களா?
நித்யா: கரெக்ட் சுவாமி! ஒரு சுவாமி மனசு ஒரு சுவாமிக்குத் தான் தெரியும்.
பிரேமா: ஆமா நமக்கு மட்டும் தானே தெரியும் நம்ம சீக்ரெட் ஆப் எனெர்ஜி. என் காதுலயே இந்த மாதிரி பூவச்சுத்துற நீ மத்தவன் காதுலயெல்லாம் பெரிய மாலையை சுத்துவேன்னு எனக்கு இப்பதானே புரியுது! சும்மா மொக்கயப் போடாம அடுத்த கேள்விய கேளப்பா!
நித்யா: நம்மள மாதிரி இவ்வளவு ஆளுங்க வரிசையா மாட்டியும் இந்த சனங்க எதைப்பத்தியும் கண்டுக்காம மறுபடியும் நம்மகிட்டயே வர்றத நெனச்சா எனக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கு. அந்த தப்ப நான் தான் செஞ்சேன்னு நானேஒத்துக்கிட்டாலும் , இவங்க அத ஒத்துக்க மாட்டாங்க. அதுசரி சாமி! நாம மட்டும் தான் இப்படியா? அல்லது எல்லா சாமியார்களும் இப்படித்தானா?
பிரேமா: உண்மையான சாமியார்களுக்கு சொத்து சுகம் எதுக்கு?பிச்சையெடுத்துக்கிட்டு கோயிலே கதின்னு கெடக்குற அந்த சாமியார்கள ஒப்பிடும் போது நாம சுழியந்தான். இந்த மாதிரி சாதுக்களுக்கு நம்ம மக்கள் ஒருவேள சோறுகூடப் போடாம வெரட்டி அடிக்குவாங்க. ஆனா நம்மள மாதிரி தாழ்தள சொகுசு சாமியார்களுக்கு கோடிகோடியா கொண்டு வந்து கொட்டுவாங்க. தாழ்தள, சொகுசு, தங்கரத சாமியார்கள் எல்லாரும் நம்மள மாதிரி தான். என்ன‌, இன்னும் மாட்டாதவனெல்லாம் வெளிய இருக்கான். நாம மாட்டிக்கிட்டோம் உள்ள இருக்கோம்.
நித்யா: சுவாமி! நாமன்னு ஏன் என்னையும் சேத்து சொல்றீங்க,நான் இன்னும் வெளிய தானே இருக்கேன்.
பிரேமா: சீக்கிரமே குட் ஜெயிலி பிராப்பிரஸ்து...
நித்யா: ரொம்ப முக்கியம் இந்த ஆசிர்வாதம். அவனவனுக்கு இங்க புளிய கரைக்கிது. அதெல்லாம் விடுங்க சாமி ஜெயில் வாழ்க்கையைப் பத்தி சொல்லுங்க.
பிரேமா: காத்தால 5 மணிக்கு எந்திரிச்சி கதவேயில்லாத கழிவறையில உக்காந்து , தண்ணியே இல்லாத கிணத்துல,அடிப்பாகமே இல்லாத வாளியாள தண்ணி எறச்சி, கையே படாம....
நித்யா: சுவாமி...!
பிரேமா: உண்மையதான்யா சொல்றேன். இங்க ஷவரெல்லாம் கிடையாது, வெஸ்டர்ன் டாய்லெட்டெல்லாம் கிடையாது. காலைல பல்லுவெளக்க சமயக்கட்டுப் பக்கம் போனா அங்க அடுப்புச்சாம்பல் கிடைக்கும், ஆனா அதுக்கு ரொம்ப ரிமாண்டு. அத எடுக்க நம்ம ரேசன் கட கியூ மாதிரி காத்தால 4 மணிக்கே கூட்டம் ஆரம்பிச்சிடும். அது கிடைக்காட்டி கக்கூசுக்கு பின் சுவத்துல காரை பேர்ந்த செங்கல், அதுவும் கிடைக்காட்டி கடைசியா வேப்பங்குச்சி தான். இந்த வேப்பங்குச்சியோட மருத்துவகுணம் இருக்கே!
நித்யா: போதும் நிப்பாட்டுங்க சாமி! முடியல! சிக்னல் பேஸ்ட்டால பல்லு வெளக்கிய எனக்கு வேப்பங்குச்சியும், செங்கற்பொடியுமா?எல்லாம் என் நேரம்!
பிரேமா: அதான் இப்ப உன் சிக்னல் வீக் ஆயி கெடக்குல! அப்பறம் என்ன பகுமானம்? அது மட்டுமில்ல தம்பி, ஆஸ்ரமம் மாதிரி இங்க உதவிக்கு ஆளெல்லாம் கிடையாது. எல்லாமே செல்ஃப் சர்வீஸ்தான்.
நித்யா: எல்லாமேன்னா?
பிரேமா: எல்லாமேன்னா நீ நெனக்கிற மாதிரி இல்ல. சாப்பாடு வரிசையில் நின்னு நாமே வாங்கனும்னு சொன்னேன்.
நித்யா: அப்பறம்?
பிரேமா: வேகாதா சோறு, பருப்பேயில்லாத சாம்பாரு,புளியேயில்லாத ரசம்
நித்யா: வாரா வாரம் சிக்கன் போடுறதா கேள்விப்பட்டேனே!
பிரேமா: சிக்கன் போடறதா வெளிய பேசிக்கிறாங்க. ஆனா எனக்கென்னமோ இங்க போடறது 5 ரூவா பிரியாணி அயிட்டம் மாதிரியே தோனுது.
நித்யா: ஓ மை காட்!!! காக்காவா??
பிரேமா: காவி துறந்து கம்பிக்குள்ளே வந்த பிறகு காக்காவைப் போட்டால் என்ன, கழுகைப் போட்டால் என்ன மகனே! ஒரு கை பார்த்து விட வேண்டியது தானே!
நித்யா: சுவாமி இப்படி பச்சையா அசைவத்துக்கு அப்பீட் ஆயிட்டீங்களே! என்ன கொடும சாமி இது?
பிரேமா: ஏன்கிட்டயேவா? இன்னும் கேளு, பாலே இல்லாத காபி,ரெக்கையே இல்லாத ஃபேனு, காத்தே வராத ஜன்னல்
நித்யா: போதும் சுவாமி போதும்! இப்பவே எனக்கு குமட்டிக்கொண்டு வருது. இங்க ஜெயிலர்கள் எல்லாம் எப்படி நடந்துக்கிறாங்கன்னு சொல்லுங்க சாமி!
பிரேமா: அத ஏன் கேக்குற நித்தி! ஒரு தடவை எங்க‌ ஜெயிலர், சக கைதிய கூப்பிட்டு அவருக்கு கால் அமுக்கிவிடச் சொன்னாரு. அவன் சரியா அமுக்கலைன்னு அடுத்த நாளு அவன பொன்மலைப்பட்டி பக்கமா கூட்டிக்கிட்டு போயி என்கவுண்டர்ல போட்டுட்டாங்க.
நித்யா: சாமி! என்ன சொல்றீங்க! கால ஒழுங்கா அமுக்கலைன்னதுக்கா என்கவுண்டர். என்ன சாமி பீதிய கெளப்புறீங்க?
பிரேமா: உண்மைதான் நித்யா! அன்னிலேந்து அந்த ஆபிஸர் என்னய கால் அமுக்க கூப்பிட்டா 3 நாளா இருந்தாலும் கண் முழுச்சி அமுக்கிவிடுவேன்.
நித்யா: இதுவேறயா? அதுசரி..,போதும் சுவாமி போதும்! பொழுது போக்குகள் பற்றி சொல்லுங்க.
பிரேமா: பொழுது போக்கு ஸ்னோ பௌலிங்கும், கோல்ஃபும் தான்.
நித்யா: சுவாமி கிண்டல் பண்ணாதீங்க!
பிரேமா: வேற என்னய்ய கடுப்பக்கிளப்பிக்கிட்டு. இங்க கரிக்கட்டயும், கல்லும் தான் கெடக்கு. அதவச்சி வச்சி ஆடுபுலி ஆட்டம், கண்ணாமூச்சி, கில்லிதாண்டு, கிளித்தட்டு, கோகோ மாதிரி ஆட்டங்கள் எல்லாமே ஆடுவோம்.
நித்யா: என்ன சுவாமி எல்லாமே லேடீஸ் அயிட்டமா இருக்கே!
பிரேமா: ஹிஹி! கேமில் கூட எனக்கு லேடீஸ் கேம்தான் புடிக்கும். அதவிடு நித்யா ஆடுபுலி ஆட்டம் கேம்ல நான் தான் சாம்பியன். மாநில அளவில ஜெயில்கள்ல நடந்த போட்டிகல்ல முதல் பரிசு வாங்கியிருக்கேன். வேனுமுன்னா சர்டிபிகேட்ட காட்டாவா?
நித்யா: சுவாமி! என்னய கடுப்பேத்தாதீங்க‌, வேற மேட்டர் இருந்தா சொல்லுங்க.
பிரேமா: வாராவாரம் தூர்தர்ஷன்ல ஒரு படம். போன வாரம் கூட ஒரு படம் போட்டான் பாரு..,ஆஹா!
நித்யா: யோவ்! நீ சொன்னதிலயே பெரிய தண்டனை இதான்யா! நான் எங்க எப்படி இருந்த ஆளு தெரியுமா? வீடியோவ வாங்கி பாருய்யா! ஒரு கையில ரஞ்சிதா, இன்னொரு கையில டிவி ரிமோட் தான்யா இருக்கும். மொத்தம் 300 சேனல மாத்தி மாத்தி பாத்த எனக்கு வாரம் ஒரு படமா? அய்யோ..
பிரேமா: தம்பி! இங்க வந்திட்டா இப்படித்தான். போகப்போக உனக்கு நல்லா பழகிரும் பாரு. வேனுமினா இப்ப வாரியா, உனக்கு ஆடுபுலி ஆட்டம் ஆடுறதுக்கு டிரைனிங்க் தாரேன்!
நித்யா: யோவ்! நிப்பாட்டுய்யா! நான் வெறும் பொம்பள கேஸூல மட்டும் தான் உள்ள வரலாமுன்னு இருக்கேன், என்ன கொலை கேஸ் கைதியா மாத்திராத. என்ன தூக்குல போட்டாலும் பரவாயில்லய்யா! ஆனா நீ இருக்குற இந்த ஜெயிலுக்கு மட்டும் வரமாட்டேன்யா! நான் கெளம்பறேன்..
பிரேமா: தம்பி! ஒரு நிமிசம். உன் மொமைல அந்த வீடியோ இருந்தா புலுடூத் வழியா எனக்கு கொஞ்சம் ஏத்தி விடேன்?
நித்யா: ஹேய்ய்ய்ய்!!! உனக்கு புலுடூத் கேக்குதா? மொதல்ல உன் டூத்த இல்லாம ஆக்குறேன் பாரு
(கத்தியபடியே கீழே கிடந்த செங்கல்லை தூக்கிக் கொண்டு பிரேமாவை நோக்கி பாய டரியலான பிரேமா ஜெயிலரை நோக்கி கத்திக்கொண்டே ஓடுகிறார்)

Tuesday, March 9, 2010

வீடியோவில் இருப்பது நான்தான்! ரஞ்சிதா பரபரப்பு பேட்டி!!


சாமியார் நித்தியானந்தருடன் நடிகை ரஞ்சிதா உல்லாசமாக இருப்பதுபோன்ற வீடியோ ‌வெளியானதைத் தொடர்ந்து, இந்த வீடியோ வெளியான விவகாரத்தில் ரஞ்சிதாவுக்கு தொடர்பு இருப்பதாக முதலில் செய்தி வந்தது. பின்னர் அந்த வீடியோவை எடுத்தது சாமியாரின் சீடர்களில் ஒருவரான ‌லெனின் கருப்பன் என்று கூறப்பட்டது. அதனைத்தொடர்ந்து தானும், ரஞ்சிதாவும் சேர்ந்து சாமியாரிடம் பணம் கறப்பதற்காக இந்த வீடியோவை எடுத்ததாக லெனின் கருப்பனே கூறியதாக செய்திகள் வெளியாயின. இந்த விவகாரத்தில் சாமியார் நித்தியானந்தர் தான் சட்ட ரீதியாக எந்த தவறும் செய்யவில்லை என ஏற்கனவே விளக்கம் அளித்து விட்டார். வீடியோ விவகாரத்தில் ஆதாரங்களை திரட்டி வருவதாகவும் இன்னும் சில தினங்களில் உண்மையை உலகுக்கு சொல்வேன் என்றும் சாமியார் தனது விளக்கத்தில் கூறி விட்டார்.

ஆனால் ரஞ்சிதா எங்கே போனார்? என்ற கேள்வி எழுந்தபோதே... அவர் சாமியாருடன் சென்று விட்டார், சாமியாரின் ஆசிரத்தில் தலைமறைவாக உள்ளார்.... ரஞ்சிதா வாய் திறக்க மறுக்கிறார்... என்றெல்லாம் செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன. இந்நிலையில் வாரஇதழ் ஒன்றிற்கு நடிகை ரஞ்சிதா பரபரப்பு பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சுவாமி நித்தியானந்தருடன் வீடியோவில் இருப்பது நான்தான். ஆனால் அதை மிகைப்படுத்தி ஏதேதோ சேர்த்துள்ளனர். என்னை பற்றி, என்னை வளர்த்துவிட்ட தமிழ் மீடியாவே ரொம்ப கேவலப்படுத்திக் கொண்டிருப்பது நியாயம்தானா? நான் நல்ல குடும்பத்து பெண். தென்னிந்திய சினிமாவில் கொடி கட்டி பறந்தவள். ஏதோ பணத்துக்காக அந்த வீடியோவை நான்தான் எடுத்தது போல மீடியாக்கள் சொல்வதை என்னால் தாங்க முடியவில்லை. எனக்கு நித்யானந்தர் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு. இது ஊருக்கே தெரியும். அவரது சொற்பொழிவுகளாலும், கருத்துக்களாலும் கவரப்பட்டவள் நான். அது மட்டுமல்ல, சிறுவயது முதல் என்னை பாடாய் படுத்திக்கொண்டிருந்த வீஸிங் பிரச்சனையை ஒரே நாளில் அவர் சரி செய்துவிட்டார். அன்று முதல் நான் அவரது பக்தை ஆகிவிட்டேன். காலை பிடித்துவிடுவதும், மாத்திரை கொடுப்பதும், சாப்பிட உணவு கொடுப்பதும் ஒரு பணிவிடைதான். அதில் ஏதேதோ சேர்த்து ஒரு நீலப்படம் அளவுக்கு கொண்டு வந்துவிட்டார்கள்.

நித்யானந்தா மகாஞானி. அவரே இரண்டு வாரங்களில் எல்லாவற்றையும் விளக்கமாக சொல்வார். தயவு செய்து மீடியாக்கள் என்னை மேலும் காயப்படுத்திக் கொண்டிருக்காதீர்கள். ப்ளீஸ்...

இவ்வாறு ரஞ்சிதா கூறியதாக அந்த இதழில் செய்தி வெளியாகியிருக்கிறது. 

Monday, March 8, 2010

செக்ஸ் சாமியார்களை சட்டம் என்ன செய்யும்?


சாமியார்கள் பற்றி சமீபத்தில் வந்த இரண்டு நிகழ்வுகள், உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இதுவரை, "யூ டியூப்' பற்றி கேள்விப்பட்டிராதவர்கள் கூட, இப்போது அதிலேயே 24 மணி நேரமும் லயித்துக் கிடக்கின்றனர். இதற்கு காரணமானவர்கள் இருவர். முதலாமவர், காஞ்சிபுரம் கோவிலின் கர்ப்பகிரகத்தை, "கர்ப்ப' கிரகமாக்கிய தேவநாதன். இரண்டாமவர், "ரஞ்சிதா புகழ்' நித்யானந்தர்.


இவ்விருவரின் செயல்பாடுகள், வீடியோக்கள் மூலம், உலகம் முழுவதும் பரவின. "யூ டியூப்'பின் சர்வர், "ஜாம்' ஆகும் அளவுக்கு, நேயர்கள் விரும்பிப் பார்த்த, "நம்பர் ஒன் வீடியோ' காட்சிகளாக இவை அமைந்தன. இந்த பரபரப்புகள் ஒரு புறம் இருக்க, இந்தப் பிரச்னையில் சட்டத்தின் நிலைப்பாடு என்ன? தேவநாதன் (36), திருமணமாகி, இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பன். இவர் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 295 (ஏ) மதத்தை களங்கப்படுத்துதல், 153 (ஏ) சமூக அமைதியைக் குலைத்தல், 506 (2) மிரட்டல், 376 கற்பழிப்பு ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நித்யானந்தர் (32) "கட்டை' பிரம்மச்சாரி. இவர் மீதும் கிட்டத்தட்ட இதே போல, 295 (ஏ), 420 மோசடி, 376, 377 இயற்கைக்கு முரணான புணர்ச்சி, 506 (1) மற்றும் 120 (பி) சதித் திட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளுக்கான தண்டனை, மூன்று ஆண்டுகளில் இருந்து பத்து ஆண்டுகள் வரை விரிகிறது. சட்டப் பிரிவெல்லாம் சரி தான். இவற்றை நிரூபிக்க முடியுமா? என்றால், அங்கு தான் இருக்கிறது சிக்கல். இரண்டு வழக்குகளுமே, பொதுமக்களால் வீடியோவில் பார்க்கப்பட்ட பிறகு பதிவு செய்யப்பட்டவை.


தேவநாதன் வழக்கில் நான்கு பெண்கள் சாட்சியமளித்தனர். இவர்களில் ஒரு பெண், பிரதான வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகு, கற்பழிப்பு புகார் கொடுத்தார். நித்யானந்தர் வழக்கில், அவருடைய பிரதான சிஷ்யராக இருந்த லெனின் கருப்பன் (எ) நித்ய தர்மானந்தா புகார் கொடுத்துள்ளார். இவர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளில் கடுமையானது கற்பழிப்பு புகார். நிரூபிக்க கடினமானதும் அதுவே. தேவநாதன் மீது புகார் கொடுத்த பெண், மிகுந்த ஈடுபாட்டோடு செயல்பட்டதை, வீடியோவை பார்த்தவர்கள் உணர முடியும். எனவே, "தேவநாதன் தனக்கு மயக்க மருந்து கொடுத்ததால், என்ன நடந்தது எனத் தெரியவில்லை' என அவர் கூறுவது, கோர்ட்டால் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது கேள்விக்குறியே. ரஞ்சிதா எப்படியும் நித்யானந்தர் மீது கற்பழிப்பு புகார் கொடுக்கப்போவதில்லை. அப்படியே கொடுத்தாலும், ஆட்டையாம்பட்டி முருகேசனே முன்வந்து, அவர் சொல்வது பொய் என சாட்சியம் சொல்லுவார். அப்புறம், இந்த வழக்குகளின் கதி என்ன ஆகும்?


இதுகுறித்து, மூத்த வக்கீல் விஜயனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: பொதுவாகவே, கற்பழிப்பு குற்றச்சாட்டுகளை நிரூபிப்பது கடினம். சம்பந்தப்பட்ட பெண்ணின் சம்மதம் இருந்தால், அது கற்பழிப்பிலேயே சேராது. யாரோ ஒரு மனிதர், எவளோ ஒரு பெண்ணை கற்பழித்ததாக மூன்றாவது மனிதர் கொடுக்கும் புகாரும் செல்லாது; பாதிக்கப்பட்ட பெண் தான் கொடுக்க வேண்டும். அதை விட முக்கியமான விஷயம், நாடு முழுவதும் பதிவு செய்யப்படும் குற்ற வழக்குகளில், வெறும் ஆறு சதவீதம் வழக்குகள் மட்டுமே நிரூபிக்கப்படுகின்றன. பொதுமக்களுக்கு அதீத ஆர்வம் இருப்பதால், இத்தகைய வழக்குகள் பிரபலமடைந்துவிடுகின்றனவே தவிர, வேறொன்றுமில்லை. விசாரணை நடைமுறைகளில் உள்ள குறைபாடுகள் களையப்பட்டு; சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது நிஜமானால் மட்டுமே, குற்ற வழக்குகள், நிரூபணங்களை நோக்கிச் செல்ல முடியும். அதுவரை, சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி, தொழில்நுட்பக் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டி, குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலையாவது தொடரத்தான் செய்யும். இவ்வாறு விஜயன் கூறினார். அப்படியென்றால், தேவநாதன், நித்யானந்தர் வழக்குகளின் கதி? எதிர்காலத்தில் அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்தால் கூட, அவர்களின் மானம் போனது போனது தான். தண்டனைகளிலேயே பெரிய தண்டனை அவமரியாதையே என ஆறுதல் பட்டுக்கொள்ள வேண்டியது தான்.

உண்மை இல்லை என மறுக்கிறார் நித்தியானந்தர் ; ஆதரவு கதவும் திறக்கிறதாம்; வீடியோ மூலம் விளக்கம் வெளியீடு

சென்னை : ""நானோ, தியான பீடமோ சட்டரீதியாக எந்த தவறும் செய்யவில்லை. குற்றச்சாட்டுக்கு எதிரான உண்மைகளை சேகரித்து விரைவில் வருவேன்,'' என, நித்யானந்தா கூறியுள்ளார்.நேற்று பிற்பகல் நித்யானந்தரின் வக்கீல் ஸ்ரீதர், இ-மெயில் மூலம் வந்ததாக, நித்யானந்தர் விளக்கம் அளித்த, "சிடி' ஒன்றை பத்திரிகையாளர்களுக்கு அளித்தார். அந்த "சிடி' வாயிலாக நித்யானந்தர் கூறியிருப்பதாவது:என் மீதும், தியான பீடம் மீதும் பல குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் என் மீது கொண்ட அன்பினால் கடிதம், இ-மெயில் மூலம் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். என் மீதும், தியான பீடத்தின் மீதும் வதந்தி பரப்பப்படுகிறது.; சட்டரீதியாக நானோ, தியானபீடமோ எந்த தவறையும் செய்யவில்லை. குற்றச்சாட்டு மற்றும் வதந்தி, செய்தியின் உண்மையை திரட்ட முயற்சி செய்து வருகிறோம். எல்லா குற்றச்சாட்டுக்கும் விரைவில் விடை அளிப்பேன். சில நாட்கள் மட்டும் பொறுமையாக இருங்கள்.இவ்வாறு நித்யானந்தர் கூறியுள்ளார்.

இதுகுறித்து நித்யானந்தரின் வக்கீல் ஸ்ரீ தர் கூறியதாவது:நேற்று பிற்பகல் நித்யானந்தரிடம் இருந்து இ-மெயில் மூலம் இந்த தகவல் கிடைத்துள்ளது. அவர் தற்போது வாரணாசியில் நடக்கும் கும்பமேளாவில் தனது குருவான பாபாஜியுடன் இருக்கிறார். சட்டரீதியான பாதுகாப்பு கிடைத்த பின், அவர் வெளியில் வந்து அனைவரையும் சந்திப்பார். அவர் மீது கூறப்பட்டுள்ள குற்றச் சாட்டுக்கள் அனைத்தும் உள்நோக்கத்துடன் கூடியதாக உள்ளது. புகாரை அளித்துள்ள லெனின் பல்வேறு வழக்குகளில் சிறை சென்று வந்துள்ளார். காந்த படுக்கை மோசடி வழக்கு அவர் மீது உள்ளது.அவர் அளித்துள்ள "சிடி' மார்பிங் முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் நித்யானந்தர் மிரட்டல் விடுத்ததால், அங்கு புகார் அளிக்காமல் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தது; ஏன் என்பது தெரியவில்லை. அவர் அளித்த புகார் மனு கூட எங்களுக்கு இதுவரையிலும் கிடைக்கவில்லை.சட்ட ரீதியாக பாதுகாப்பு இல்லாத சூழலில் நித்யானந்தர் வெளியில் வந்தால் சரியாக இருக்காது என்பதால் தான், அவர் இந்த செய்தியை அளித்துள்ளார். விரைவில் நாங்கள் எதிர் மனு தாக்கல் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.இவ்வாறு ஸ்ரீ தர் கூறினார்.

Friday, March 5, 2010

சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் பெருமையுடன் வழங்கும் நித்தியானந்தா In & As "லீலைகள்"

நித்யானந்தாவின் செக்ஸ் லீலைகள் : நெருங்கிய நடிகைகள் பட்டியல் நீள்கிறது! 

சென்னை: பிரபல தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்த சாமியார் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கொதிப்படைந்த பக்தர்கள், பல நகரங்களிலும் உள்ள அவரது ஆசிரமங்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். பல இடங்களில் நித்யானந்தரின் உருவப் படங்களை செருப்பால் அடித்து கொளுத்தினர். திடீரென நித்யானந்தா தலைமறைவானது பரபரப்பை அதிகரித்துள்ளது.  இந்நிலையில் நித்யானந்தாவின் ஆசிரமங்களுக்கு பல நடிகைகள் வந்து சென்றுள்ளனர். பழம் பெரும் கதாநாயகியின் சகோதரி, அவரது மகள் ஆகியோரும் நடிகைகள். சகோதரி மகள் நடிகைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் நித்யானந்தாவை சந்தித்துள்ளார். அப்போது அவருடன் நடிகைக்கு தொடர்பு ஏற்பட்டது. நித்யானந்தாவுக்கு நடிகைகளுடன் தொடர்பு ஏற்பட இவர் முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. ஆசிரமத்துடன் தொடர்புடைய நடிகைகளின் பட்டியலில் சினிமாவிலிருந்து தற்போது ஒதுங்கியிருக்கும் நடிகைகள், நடித்து வருபவர்கள், திருமணமானவர்கள் என பலர் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் அனைவருமே நித்யானந்தாவுடன் நெருங்கி பழகியுள்ளனர். ஹீரோயினாக நடித்து பிறகு சீரியலில் நடித்தும், அங்கிருந்தும் காணாமல் போன யுவ நடிகை, சின்னப்பூவாய் மெல்லப்பேசும் நடிகை என பலருக்கு நித்யானந்தா ஆசிரமத்துடன் தொடர்பு உள்ளது. விஷயம் வெளியானதால் அந்த நடிகைகள் கலக்கத்தில் உள்ளனர்.

நிர்மலமான நடிகை

நித்யானந்தாவிடம் பல சினிமா நடிகைகள் தொடர்பு வைத்துள்ளனர். அவர்களில் ஒருவர் நடிகை ராகசுதா. இவர், தமிழில், ராமராஜன் ஜோடியாக ‘தங்கத்தின் தங்கம்’, நெப்போலியன் நடித்த ‘தமிழச்சி’, ‘தம்பி’, ‘அம்முவாகிய நான்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். நடிகை கே.ஆர்.விஜயாவின் தங்கை மகளான இவர், யோகா வகுப்புகளுக்கு சென்று வந்தார். சென்னையில் நித்யானந்தா நடத்திய யோகா வகுப்புக்கு சென்று வந்த அவர், நித்யானந்தாவை பார்த்த உடனேயே அவர் காலில் விழுந்து வணங்கினாராம். அதிலிருந்து, அவருடைய ஆசிமரத்தில் சேர்ந்து சன்னியாசி ஆனார். மைசூரிலுள்ள இவரது ஆசிரமத்தில், சுவாமி நிர்மலானந்தா என்ற பெயரில் சில வருடங்களாக யோகா கற்றுக்கொடுத்து வருகிறார் ராகசுதா. இவர்தான் சாமியாருக்கு பல நடிகைகளை அறிமுகப்படுத்தி வைத்ததாகக் கூறப்படுகிறது. இதில் பல முன்னாள் நடிகைகள் மற்றும் டிவி நடிகைகளும் அடங்குவர் என்றும் விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

மோசடி புகார்கள் குவிகின்றன

ஆசிரமம் அமைந்துள்ள இடத்திற்கு வந்திருந்த அதே ஏரியாவைச் சேர்ந்த பாபு என்பவர் கூறும்போது, “நித்தியானந்தா பீடம் 2003ம் ஆண்¢டு வாக்கில் அமைக்கப்பட்டது. இதற்காக இப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் மிரட்டி, நிலங்கள் குறைந்த விலையில் வாங்கப்பட்டன. சில பகுதிகளில் அடுத்தவர் நிலங்களையும் ஆக்கிரமித்தனர்’’ என்றார்.
சந்தனக்கட்டை மீட்பு: நித்யானந்தாவின் ஆசிரமத்தில் நேற்று மதியம் வனத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். டி.சி.எப். ஆசிரமத்தில் சுமார் 60 முதல் 80 கிலோ எடையுள்ள சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சாமியார் புலித்தோல் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதுகுறித்தும் வனத்துறை விசாரணை செய்து வருகிறது.
80 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஆசிரமத்தின் உள்ளே 8 முதல் 10 கட்டிடங்கள் உள்ளன. சில கட்டிடங்கள் வெளிநாட்டு பக்தர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. இதுதவிர தியானம் செய்வதற்கு குடிசை வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் 3 குடிசைகள் நேற்று தீவைத்து கொளுத்தப்பட்டன. போராட்டக்காரர்கள் அதை கொளுத்தினார்களா? அல்லது ரகசிய ஆவணங்களை அழிக்கும் முயற்சியா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.


நித்யானந்தா தலைமறைவு!


கொதிப்படைந்த பக்தர்கள், பல நகரங்களிலும் உள்ள அவரது ஆசிரமங்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். பல இடங்களில் நித்யானந்தரின் உருவப் படங்களை செருப்பால் அடித்து கொளுத்தினர். திடீரென நித்யானந்தா தலைமறைவானது பரபரப்பை அதிகரித்துள்ளது. பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் நித்யானந்த தியான பீடம் என்ற ஆசிரமம் நடத்தி வருபவர் பரமஹம்ச நித்யானந்தா (31). தமிழகத்தில் சென்னை, திருவண்ணாமலை உள்பட பல நகரங்களிலும் இவரது ஆசிரமங்கள் உள்ளன. உலகின் பல நகரங்களுக்கும் சென்று சொற்பொழிவுகள் ஆற்றி வந்தார். இந்நிலையில், பிரபல நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா நெருக்கமாக இருக்கும் படுக்கை அறை வீடியோ காட்சிகள் நேற்று வெளியாயின. இது பெரும் பரபரப்பையும் பக்தர்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

திருவண்ணாமலையில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தை பொதுமக்கள் மற்றும் இந்து மக்கள் கட்சியினர் நேற்று இரவு முற்றுகையிட்டனர். ஆசிரமத்துக்கு உடனே சீல் வைக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். பதற்றம் அதிகரித்ததால், இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சிவபாபு கைது செய்யப்பட்டார். ஆசிரமத்தில் தங்கியிருந்த 45 ஊழியர்கள் நேற்று நள்ளிரவு நித்யானந்தாவின் பேனர்கள், போஸ்டர்களை ஆவேசமாக கிழித்து எறிந்துவிட்டு வெளியேறினர். ஆசிரமத்தை சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சொந்த ஊரான தி.மலையில் ஆசிரமம் அமைக்க நித்யானந்தா ஆசைப்பட்டார். இதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு பவழக்குன்று மலையை ஆக்கிரமிக்க முயன்றுள்ளார். அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், 2 ஆண்டுகளுக்கு முன்பு கிரிவலப்பாதையில் உள்ள நிருதிலிங்கம் அருகே 3 ஏக்கர் பரப்பில் ஆசிரமம் அமைத்தார். அங்கு அவர் தங்க சொகுசு அறையுடன் கட்டிடம் கட்டப்பட்டது. திருவண்ணாமலைக்கு வரும்போது அங்குதான் தங்குவார். கடந்த ஜனவரி 8&ம் தேதி பிறந்தநாள் விழாவை இங்கு விமரிசையாக கொண்டாடியுள்ளார்.

இதுதொடர்பாக தி.மலை மாவட்ட இந்து முன்னணி தலைவர் டி.எஸ்.சங்கர் கூறுகையில், ‘‘ஆடம்பர வாழ்க்கை வாழும் நித்யானந்தர் கிரிவலப்பாதையில் ஆசிரமம் கட்டக் கூடாது என்று ஏற்கனவே கூறினோம். அவரது சுயரூபம் தற்போது அம்பலமாகியுள்ளது. அவரை உடனே கைது செய்ய வேண்டும். தி.மலைக்குள் அவரை இனி விடமாட்டோம்’’ என்றார். புதுச்சேரி வில்லியனூர் ஏம்பலத்தில் உள்ள நித்யானந்தர் ஆசிரமத்தை பொதுமக்கள் சூறையாடினர். ஜன்னல்கள், விளக்குகள், மின்விசிறிகள் அடித்து நொறுக்கப்பட்டன. சாமியார் பேனரை தீவைத்து கொளுத்தி செருப்பால் அடித்தனர். பதற்றம் அதிகரித்ததால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி பஸ் ஸ்டாண்டில் இந்து முன்னணி அமைப்பினர் மாநில பொதுச்செயலாளர் முருகையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நித்யானந்தாவை கைது செய்து சொத்துக்களை முடக்க வேண்டும் என்று மக்கள் கோஷம் எழுப்பினர்.

கடலூர் வண்டிப்பாளையத்தில் உள்ள ஆசிரமத்தில் பேனர்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. கடலூர் மோகினிபாலம் பகுதியில் ஆசிரமத்தின் பெயர்பலகையை பொதுமக்கள் தார்பூசி அழித்தனர். நெல்லை டவுனில் உள்ள நித்யானந்தர் தியான மையத்தில் நித்யானந்தா படத்துடன் கூடிய டிஜிட்டல் பேனர், போஸ்டர்களை நிர்வாகிகளே கிழித்து எறிந்தனர். இந்த மையத்தில் சில மாதம் முன்பு அவர் ஆன்மீக உரையாற்றியுள்ளார். சீர்காழி சட்டநாதபுரம் மனோன்மணியம் நகரில் நித்யானந்த பீடத்தை அவர் சமீபத்தில் திறந்துவைத்தார். இங்கு தினமும் பஜனை, தியானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. டிவியில் ஆபாச காட்சிகளை பார்த்த மக்கள் ஆவேசமடைந்து நித்யானந்தா படங்கள், பேனர்களை நேற்று இரவு தீ வைத்து கொளுத்தினர்.


சென்னையில் 15க்கும் அதிகமான இடங்களில் அவரது சீடர்கள் ஆசிரம கிளை வைத்து தியான வகுப்புகள், ஆன்மீக நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை நடத்தி வந்துள்ளனர். நேற்று இரவோடு இரவாக அனைத்து இடங்களில் இருந்த போர்டுகள், பேனர்கள் அகற்றப்பட்டன. பல இடங்களில் ஆசிரம கிளைகள் பூட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், செக்ஸ் லீலை காட்சிகள் வெளியானதை தொடர்ந்து, நித்யானந்தா திடீரென தலைமறைவாகிவிட்டார். ஆசிரம நிர்வாகிகள் செல்போனில் அவரை தொடர்புகொள்ள முயன்றும் முடியவில்லை.

நித்தியானந்தா தலைமறைவாகிவிட்டார்:கமிஷ்னர்!

பரமஹம்ச நித்தியானந்தா சாமியார் பிரபல தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாச லீலைகளில் ஈடுபட்டிருக்கும் வீடியோ வெளியானது.  இதையடுத்து நாடெங்கிலும் நித்தியானந்தாவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  இந்த விவகாரம் தொடர்பாக நேற்று சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் ராம.சிவசங்கர், சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் மனு அளித்தார். மேலும் பல வழக்கறிஞர்களூம் புகார் கொடுத்தனர். இந்நிலையில் இன்று சென்னை காவல்துறை ஆணையர்,  ’’வழகறிஞர்களின் புகாரை ஏற்று நித்தியானந்தா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’’என்று தெரிவித்தார். நித்தியானந்தா தலைமறைவாகிவிட்டார் என்பது உண்மை’’என்றும் தெரிவித்தார்.

http://www.dinakaran.com/nithyanandadetail.aspx?id=6679&id1=24

http://www.dinakaran.com/nithyanandadetail.aspx?id=6678&id1=24

http://www.dinakaran.com/nithyanandadetail.aspx?id=6677&id1=24

http://www.dinakaran.com/nithyanandadetail.aspx?id=6676&id1=24

http://www.dinakaran.com/nithyanandadetail.aspx?id=6675&id1=24

http://www.dinakaran.com/nithyanandadetail.aspx?id=6674&id1=24

http://www.dinakaran.com/nithyanandadetail.aspx?id=6673&id1=24

http://www.dinakaran.com/nithyanandadetail.aspx?id=6672&id1=24

http://www.dinakaran.com/nithyanandadetail.aspx?id=6671&id1=24

http://www.dinakaran.com/nithyanandadetail.aspx?id=6670&id1=24

http://www.dinakaran.com/nithyanandadetail.aspx?id=6669&id1=24

http://www.dinakaran.com/nithyanandadetail.aspx?id=6668&id1=24

http://www.dinakaran.com/nithyanandadetail.aspx?id=6667&id1=24

http://www.dinakaran.com/nithyanandadetail.aspx?id=6666&id1=24

http://www.dinakaran.com/nithyanandadetail.aspx?id=6665&id1=24

http://www.dinakaran.com/nithyanandadetail.aspx?id=6664&id1=24

http://www.dinakaran.com/nithyanandadetail.aspx?id=6663&id1=24

http://www.dinakaran.com/nithyanandadetail.aspx?id=6662&id1=24

http://www.dinakaran.com/nithyanandadetail.aspx?id=6661&id1=24

http://www.dinakaran.com/nithyanandadetail.aspx?id=6660&id1=24

Thursday, March 4, 2010

பாமர மக்களை ஏமாற்றுவோரை அரசு வேடிக்கை பார்க்காது : முதல்வர் கருணாநிதி


சென்னை : பக்தி வேடம் பூண்டு, பாமர மக்களை படுகுழியில் தள்ளுகின்ற பகல் வேடக்காரர்களையும், அவர்களிடம் பலியாகி சமுதாயத்தைச் சீரழிக்கின்ற சபல புத்தி உடையவர்களையும், அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை: 
பகலில் ‘சாமி’யாகவும், இரவில் ‘காமி’யாகவும்  வாழ்க்கை நடத்தி, பாமர மக்களின்  வாழ்வையும் அறிவையும் பாழாக்கி, பணக்கொள்ளை அடிக்கும் பகல்வேடக்காரர்களை; பாமர மக்களுக்கு அடையாளம் காட்ட, பகுத்தறிவு இயக்கம் பிரசாரம் செய்து வருகிறது.  
சினிமா, நாடகங்கள் மூலம் எடுத்துக்காட்டுகள் சித்திரித்து காட்டப்பட்டன. குறிப்பாக சந்திரகாந்தா, சொர்க்கவாசல், மனோகரா, வேலைக்காரி, பராசக்தி, தூக்குமேடை ஆகியவற்றில் காவியுடைதாரிகளின் கபட நாடகம் காட்டப்பட்டன.
இன்னமும் புரிந்து கொள்ள முடியாத, புரிந்து கொண்டாலும் திருந்திக் கொள்ள இயலாத, மௌடீகத்தில் மூழ்கியோர் நாட்டில், சமூகத்தில் இருக்கிறார்கள். சமூக நலனும், கண்ணியமும் காக்கப்பட வேண்டும். அவற்றில் அக்கறை காட்டும் ஒரு மக்கள் நல அரசு அண்மையில் நடந்ததாக கூறப்பட்டு, காட்சியாக்கி காட்டப்படுகிற;  கயமைத்தன சாமியார்களின் ஏமாற்று வித்தைகளை பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.
அதே நேரத்தில் குற்றங்கள் நடைபெறுவதை விட, அந்தக் குற்றங்கள் எப்படி நடந்தன? எங்கே யாரால் நடத்தப்பட்டன? எந்த முறையில் நடத்தப்பட்டன என்பதைச் சான்றாகக் காட்ட வெளியிடப்படும் படங்கள், செய்திகளாக இருந்தாலும் அவை அளவுக்கு மீறும்போது அவற்றை தொலைக்காட்சியிலோ பத்திரிகைகளிலோ  படங்களாகப் பார்க்கும் இளைஞர்கள் நெஞ்சங்களில் எத்தகைய மாறுதல்கள் ஏற்படும், அது இளைய சமுதாயத்தை எங்கே கொண்டு போய் நிறுத்தும் என்பதையும்  எதிர்காலத் தலைமுறையின் மீது அக்கறை கொண்டோர் அனைவரும் எண்ணிப் பார்த்து நடக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வது ஓர் அரசின் கடமை.
அந்தக் கடமையை செய்யும் அரசு, அதை செய்கின்ற நேரத்தில், அந்தக் கடமை வெற்றி பெற அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். அப்படியில்லாமல்  ஒரு தீமையை விவரித்தால், அது மற்றொரு பெரிய தீமைக்கு வித்திடுவதாக ஆகக் கூடாது.
அண்மையில் வெளிவந்துள்ள செய்திகள், அதைத்தொடர்ந்து வெளிவருகின்ற  செய்திகள் எதுவாயினும் அவற்றை விவரம் அறிந்தவர்கள் அரசுக்கும், போலீஸ் துறைக்கும் தெரிவிக்க வேண்டும். மாறாக, தாங்களே முன்னின்று அவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுவது தேவையற்றது. வெளியிட்டு காட்டுவது தீயவர்களுக்கு தங்கள் செயலை நியாயப்படுத்த வலிமை சேர்ப்பதாகவும் ஆகி விடும்.
‘அருவருக்கத் தக்க செய்திகளை, படங்களை வெளியிடுவது முள்ளை முள்ளால்  எடுக்கும் காரியம் தானே’ என்று சில ஏடுகளும், தொலைக்காட்சி நிறுவனங்களும் வாதிடலாம். முள்ளை முள்ளால் எடுக்கலாம். ஆனால் போதையேற்றும் கள்ளை அருந்தியவனை; மேலும் கள்ளையூற்றி திருத்த முடியுமா? அதுபோலத்தான் இந்தச் செய்திகளும் படங்களும் சமூகத்தை மேலும் சீரழித்து விடக்கூடாதே என்ற கவலையோடு அரசின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இதுபோன்ற ஏமாற்று வித்தைக்காரர்களையும், பக்தி வேடம் பூண்டு பாமர மக்களை படுகுழியில் தள்ளுகின்ற பகல் வேடக்காரர்களையும், அவர்களிடம் பலியாகி சமுதாயத்தைச் சீரழிக்கின்ற சபல புத்தி உடையவர்களையும், இந்த அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.
இந்த அரசு எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு உண்மையிலேயே பகுத்தறிவு வளர்த்து, ஊருக்கு உபதேசிகளை ஒழித்துக் கட்ட வேண்டுமென்று எண்ணுகின்ற ஒவ்வொருவரும் உறுதுணையாக இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இபிகோ 420வது பிரிவின் கீழ் நித்யானந்தா மீது வழக்கு பதிவு: இந்திய தண்டனைச் சட்டம் 420வது பிரிவின் கீழ், சாமியார் நித்யானந்தா மீது மத்திய குற்றப்பிரிவு போலீசில் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
‘நித்யானந்தா தியான பீடம்’ என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வந்தவர் நித்யானந்தா. இவர் நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள், கடந்த செவ்வாய்கிழமை வெளியாயின. இது அவரது பக்தர்கள், அவரது தியான பயிற்சிகளை பின்பற்றியவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. திருவண்ணாமலை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள நித்யானந்தா ஆசிரமங்களையும் பக்தர்கள் அடித்து நொறுக்கினர்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற வக்கீல் அங்கயற்கண்ணி (எ) கயல், சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:
பிரபல நடிகையுடன் நித்யானந்தா உல்லாசமாக இருக்கும் காட்சிகள் டிவியில் ஒளிபரப்பப்படுகின்றன. தமிழ் கலாசாரத்தை சீரழிக்கும் செயலில் ஈடுபட்டிருக்கும் நித்யானந்தா, இந்து சாமியார் என்ற போர்வையில் தன் சுய, சுகபோகங்களுக்காக மோசடி செயல்களில் ஈடுபட்டிருப்பது இதன்மூலம் தெளிவாகிறது. சாமியார் என்ற போர்வையில் மக்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துள்ளார். இத்தகைய கிரிமினல் செயல்களில் ஈடுபட்டுள்ளவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சொத்துக்களை முடக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த புகார் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்துமாறு, போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். இதையடுத்து, நித்யானந்தா மீது இந்திய தண்டனைச் சட்டம் 420வது பிரிவின் (மோசடி செய்தல்) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. துணை கமிஷனர் ஸ்ரீதர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் வக்கீல் சிவா, போலீஸ் கமிஷனரிடம் நேற்று அளித்த புகாரில், Ôபொதுமக்களிடம் பல கோடி ரூபாய் வசூலித்து, நித்யானந்தா மோசடி செய்துள்ளார். இதனால், அவரது சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். பிரேமானந்தா போல கொலைகள் கூட செய்திருக்கலாம். இதனால், அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும். அவரால் மேலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். அரசு இந்த புகார் பற்றி தீவிரமாக விசாரிக்க வேண்டும். இதுகுறித்து விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன்Õ என்று கூறியுள்ளார். இதுகுறித்தும், மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.