Showing posts with label England.... Show all posts
Showing posts with label England.... Show all posts

Thursday, April 29, 2010

ரோபாட் மூலம் இதய ஆபரேஷன்: இங்கிலாந்து டாக்டர் சாதனை

ரோபாட்டை பயன்படுத்தி ஆபரேஷன் செய்வது இப்போது நடைமுறையில் வந்துள்ளது. மேலை நாடுகளில் கர்ப்ப பை புற்று நோய், சிறுநீரகம், சிறுநீர் பை, ரத்த குழாய்கல் போன்றவற்றில் ரோபாட் மூலம் ஆபரேஷன் செய்கின்றனர்.
 
இப்போது இங்கிலாந்தில் முதன் முதலாக ரோபாட்டை பயன்படுத்தி இதய ஆபரேஷன் செய்து உள்ளனர்.
 
இங்கிலாந்தை சேர்ந்த 70 வயதுகாரர் ஒருவர் இதய நோயால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு இதயத்தில் கிருமி தொற்று ஏற்பட்டு தசைகள் பாதிக்கப்பட்டு இருந்தன. இதனால் இதய துடிப்பு சீராக இல்லாமல் மூச்சுவிட சிரமப்பட்டு வந்தார்.
 
லைஜெஸ்டர் நகரில் உள்ள கிளம்பில்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அவருக்கு டாக்டர் அந்தர் நெக் ஆபரேஷன் செய்ய முடிவு செய்தார்.
 
ரோபாட் மூலம் ஆபரேஷன் செய்யலாம் என திட்டமிட்டார். அதன்படி ஆபரேஷன் தியேட்டருக்கு வெளியே இருந்தபடி ரோபாட்டை ரிமோட் மூலம் இயக்கி ஆபரேஷன் செய்தார். ஆபரேஷன் வெற்றி கரமாக அமைந்தது.
 
ரோபாட் மூலம் இதய ஆபரேஷன் செய்து இருப்பது உலகிலேயே இதுதான் முதல் முறை.
 
இந்த ரோபாட்டை அமெரிக்காவில் உள்ள கதேட்டார் ரோபாட் நிறுவனம் உருவாக்கி இருந்தது.

Tuesday, March 30, 2010

இளவரசி டயானா கொல்லப்பட்டார்: இங்கிலாந்து வக்கீல் தகவல்


லண்டன், மார்ச். 30-
இங்கிலாந்து இளவரசி டயானா தனது காதலர் டோனி அல்பயத்துடன் பாரீஸ் நகரில் சுரங்க பாதையில் காரில் சென்றபோது விபத்தில் சிக்கினார். இதில் டயானாவும், டோனியும் உயிரிழந்தனர்.



கடந்த 1997-ம் ஆண்டு இந்த விபத்து நடந்தது. டயானா இறந்து 13 ஆண்டுகள் ஆகியும் அவரது மரணம் குறித்த சர்ச்சை ஓயவில்லை. அவ்வப்போது புது தகவல்கள் வெளியாகி வருகின்றன

தற்போது, இளவரசி டயானா கார் விபத்தில் இறக்கவில்லை அவர் கொலை செய்யப்பட்டார் என்ற புதிய தகவல் கிளம்பியுள்ளது. இதை இங்கிலாந்தின் முன்னணி வக்கீல் மைக்கேல் மேன்ஸ் பீல்ட் தெரிவித் துள்ளார்.
டயானா- டோனி அல்பயத் ஆகியோருக்கு இடையே இருந்த உறவை முறிப்பதற்காக இந்த கொலை நிகழ்த்தப்பட்டுள்ளது. அல்மா சுரங்க சாலையில் நிகழ்ந்த கார் விபத்து முன் கூட்டியே திட்டமிட்டு நிறைவேற்றப்பட்ட கொலை சதி என்றும் அவர் கூறியுள்ளார்.
இவர்கள் இருவரையும் கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு செய்ததாக தெரியவில்லை. ஆனால் மிகப்பெரிய விபத்தின் மூலம் அவர்கள் இருவரையும் பிரிக்க சதி செய்யப்பட்டது. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்றும் வக்கீல் மைக்கேல் தெரிவித்துள்ளார்.