Saturday, April 24, 2010

தேவடியா பசங்க……

இந்த கொளுத்தும் வெயிலில், எல்லோரும் ஏ.சி காரில் செல்லதான் ஆசைப்படுவார்கள், சந்தர்ப்பம் கிடைத்தால். எனக்கு என் பல்சர் பைக்தான் ஏ.சி கார். என்னுடைய உற்ற தோழன் என்று கூட சொல்லலாம். நான் நினைத்த மாத்திரத்துக்கு என்னை கொண்டு சேர்த்து விடும். அதுவும் பத்திரமாக..நான் என்ன சொன்னாலும் கேட்கும். என் பயணம் முழுவதும், என் மேல் ஒட்டிக்கொண்டு எப்போதும் நேசத்துடன்.
நம்மை மாதிரி நடுத்தர வர்க்கத்தின் செலவீனங்களைப் புரிந்து கொண்டு இதுவரை ஒருமுறை கூட எனக்கு செலவு வைத்ததில்லை. சைடு ஸ்டாண்ட் போட்டு அது நிற்கும் அழகைப் பார்த்து கொண்டே இருக்கலாம் போல இருக்கும். ஒரு மாதிரி கர்வத்துடன் நிற்பது போல் இருக்கும். காலை ஆறு மணி போல பைக்கை எடுத்துக் கொண்டு கொஞ்சம் ஆள் நடமாட்டமில்லா இடங்களில், தென்றலை அனுபவித்துக் கொண்டு ஓட்டிப்பாருங்கள். அனைத்தையும் மறந்து விடுவீர்கள்…காலை பேப்பர், பால் பாக்கெட், மாத சம்பளம், அப்ரைசல், ஹிட்ஸ், பின்னூட்டம் எல்லாம் தூசி போல இருக்கும்.
அப்படிப்பட்ட என் தோழனுக்கு நேற்று என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. மக்கர் செய்தான். ஆபிஸிலிருந்து கிளம்ப முடியவில்லை. நான் என்றும் அவனை உதைத்து ஸ்டார்ட் பண்ணியதில்லை, அவனுக்கு வலிக்கும் என்பதால். எப்போதும் பட்டன் ஸ்டார்ட்தான். முதல் முறையாக அவனை உதைத்தேன், மனதைக் கல்லாக்கிக் கொண்டு. அப்படியும் அமைதியாக இருந்தான்.
எனக்கு எப்போதும் பிடிக்காத சென்னையின் நெரிசல் நிறைந்த பஸ் பயணத்திற்கு ரெடியானேன். வேளச்சேரி வழியாக செல்லும் பஸ்ஸில் ஏறினேன். எனக்கு எப்போதும் நெரிசல் நிறைந்த பஸ் பயணம் பிடிப்பதில்லை. ஆண்களையே கற்பழித்து சக்கையாக தூக்கி எறிந்து விடும் நீங்கள் இறங்க வேண்டிய பஸ் நிறுத்தத்தில். அதனால், ஒரு ஓரமாக நின்று கொண்டேன்.
அப்போதுதான் அவளைப் பார்த்தேன். ஒரு 22 வயது இருக்கும். மாநிறம். சென்னை வெயிலின் கொடுமை அவள் முகத்தில் தெரிந்தது. வியர்த்து வழிந்து கொண்டிருந்தாள். அவளுடைய அழுக்கேறிய உடை அவள் ஏழ்மை நிலைமையைக் காட்டியது. கலைந்த முடி அவள் வேலைக் கொடுமையைக் காட்டியது. தலை முழுக்க தூசி. கண்டிப்பாக ஏதோ தொழிற்சாலையில் வேலை பார்க்க வேண்டும். வேலை முடித்து வீடு செல்கிறாள் போலும்.
கையில் சற்று கிழிந்து போன மலிவு விலை ஹேண்ட்பேக் வைத்திருந்தாள். கண்டக்டரிடம் டிக்கெட் வாங்க ஹேண்ட்பேக்கை திறந்தாள். ஹேண்ட்பேக் சற்று சரியவே , அதில் உள்ள அனைத்து சில்லறைகளும் சிதறின. கதறி விட்டாள்..”அய்யோ..என் காசு..” பாவம், அந்தக் காசை சம்பாதிப்பதற்கு எவ்வளவு கஷ்டப்படிருப்பாள். வேலையில் எவ்வளவு அவமானங்களை தாங்கிக்கொண்டு…ஒரு கணம் பெண் என்பதை மறந்து, எல்லோரையும் கை வைத்து தள்ளினாள். குனிந்து எல்லாவற்றையும் பொறுக்க ஆரம்பித்தாள், ஆடை விலகுவதை கூட மறந்து. எல்லாக் கழுகு பார்வைகளும் அவள் மேலேயே இருந்தன சில பேர் உதவ முயற்சி செய்தார்கள். சில பேர்,மனசாட்சியை அடகு வைத்துக் கொண்டு, சாக்காக அவளை தொட முயற்சித்தார்கள். அவளுக்கு அதெல்லாம் பெரியதாக தெரியவில்லை. எப்படியாவது எல்லாக் காசுகளையும் எடுத்து விடவேண்டுமென்பதே அவள் நோக்கமாக இருந்தது. கண்டிப்பாக அந்தக் காசுதான் அவள் குடும்பத்திற்கு இரவு சாப்பாட்டுக்கு என்று தெரிந்தது.
ஒரு வழியாக எல்லாக் காசுகளையும் எடுத்த பின்புதான் நிம்மதியானாள். எதையோ சாதித்த திருப்தி தெரிந்தது. அவள் ஆடைகளை சரி செய்து கொண்டாள். “1 பாரிஸ் கார்னர்” என்று டிக்கெட் வாங்கும்போது அவள் குரலில் ஒரு உற்சாகம் தெரிந்தது. திடிரென்று அவள் முகம் ஒரு மாதிரியானது. சற்று நெளிந்தாள். முன்னே வர முயற்சித்தாள். ஆனால் கூட்டம் அவளை விடவில்லை. அப்போதுதான் கவனித்தேன். அவள் பின்னால் நின்று கொண்டு ஒரு மனித மிருகம் அவளை உரசிக் கொண்டு இருந்தது. அந்த மிருகத்திற்கு ஒரு 40 வ்யது இருக்கும். அவனுக்கு அவள் வயதில் கண்டிப்பாக ஒரு பெண் இருக்க வேண்டும். முகத்தில் கேவலமான ஒரு புன்னகை. அவளை உரசுவதன் மூலம் அப்படி என்ன சாதித்தானோ என்று தெரியவில்லை., அவன் அம்மாவிற்கும் தங்கச்சிக்கும் இருப்பதுதான் இவளுக்கும் இருக்கும் என்பதை மறந்து.
அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பல்லைக் கடித்துக் கொண்டாள். முடிந்த வரை தள்ளிப்போக முயற்சித்தாள். ஆனால் இருக்கும் கூட்டத்தில் முடியவில்லை. அவனும் இதையே சாக்காக எடுத்துக் கொண்டு மேலும் உரசினான். ஒரு கட்டத்தில் வெறுத்துப் போனாள். திரும்பி அவனை ஒரு முறை முறைத்தாள். அவன் தள்ளிப்போனான். ஆனால் திரும்பவும் அவளருகிலேயே வந்தான். எனக்கு அவனை அடிக்க வேண்டும் போல இருந்தது. ஆனால் நான் ஏதாவது சொன்னால் திரும்ப கிடைக்க போகும் பதில்,”அப்படி சொகுசா வரணும்னா ஏ.சி காரில் வரவேண்டியதுதான..பஸ்ஸுனா அப்படிதான்பா இருக்கும்..” அதற்குள் என் ஸ்டாப் வந்ததால் அவசரமாக இறங்கினேன், என் கையாலாகதனத்தை நொந்து கொண்டு..
இறங்கி திரும்பி பார்த்தால், அவளும் என் ஸ்டாப்பில் இறங்கியிருந்தாள். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. “பாரிஸ் கார்னர்” என்றல்லவா டிக்கெட் எடுத்திருந்தாள். யோசனையுடன் நான் கிளம்ப எத்தனித்த போது அவள் என்னை நோக்கி வருவது தெரிந்தது….நான் நின்றேன்..
“அண்ணா..ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா..”
அப்போதுதான் அவள் கண்களைக் கவனித்தேன். கண்கள் கலங்கியிருந்தன. முகம் பஸ்ஸில் நடந்த அவமானத்தை காட்டியது. சரியாக சொல்ல வேண்டுமென்றால் கூனி குறுகி போயிருந்தாள்..எனக்கு ஒரு தங்கை இல்லை. ஆனால் அவளை பார்க்கும்போது என் தங்கையாக நினைக்க தோன்றியது..
“சொல்லுமா…”
“நான் பாரிஸ் கார்னர் போகணும்..இந்த ஸ்டாப்புல பாரிஸ் கார்னர் பஸ் நிக்குமான்னு தெரியுமா..”
“நம்ம வந்த பஸ்ஸே பாரிஸ் கார்னர் போகுமே..தெரியாம இறங்கிட்டியா..”
“இல்லைண்ணே..பஸ்ஸில கூட்டம் அதிகம்...ரொம்ப இடிக்கிறாயிங்க..இடுப்பில கை…”
அதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை. அதுவரை அவள் கண்ணில் அடங்கியிருந்த கண்ணிர் அவளை அறியாமல் வெளியே வந்தது..அவசரமாக துடைத்துக் கொண்டு அந்த வார்த்தையை சொன்னாள்…
“தேவடியா பசங்க…”

HOW ACTIVATE UNBOOTED SYSTEMS?

எப்பொழுதுமே நமது கணினியானது Hard Disk ( வன் வட்டு ) இன் உதவியில் boot ஆகி இயங்க ஆரம்பிக்கும். Boot என்பது கணினியை ஆரம்பிக்கும் செயல்.

ஏதாவது பிரச்சினைகளால் நமது கணினி Boot ஆகாமல் தவிக்க நேரிடலாம். அப்போது Floppy,CD,DVD வாயிலாக boot செய்து கணினியைத் துவக்கி பிரச்சினையை ஆராய்ந்து தீர்வைத் தேடலாம்.

ஆனால் பல நேரங்களில் நம்மிடம் Boot Floppy யோ, வேறு Booting நினைவகங்களோ இல்லாமல் இருக்கும். இன்றைய தலைமுறை இணைஞர்களிடம் USB கருவிகள் கண்டிப்பாக இருக்கின்றன. இவர்களுக்காகப் பிரத்தியேகமாகப் படைக்கப்பட்டிருக்கிறது ஒரு இயங்குதளம்.

இந்த இயங்குதளத்தை உங்கள் USB நினைவகத்தில் ஏற்றிவிட்டு, அதன்மூலமே கணினியை Boot செய்வது மட்டுமின்றி, கணினியையே இயக்கலாம்.செயலிழந்து கிடந்த கணினியை இந்த USB யில் இருந்தபடி boot செய்து இயக்கி உங்களது பழைய தகவல்களை மீட்டெடுக்கலாம்.

கோப்பு இங்கே

http://www.4shared.com/file/63478381/f7e02341/PortableWinXPUSB.html

WinRar கொண்டு இதை விரித்தெடுத்தபிறகு கிடைக்கும் Readme.txt கோப்பைப் படித்து அதன்படி செயல்படவும்.

Thursday, April 22, 2010

அதிகம் தெரியாத ஆண்டி(ANTI-VIRUSES) வைரஸ்கள்


வைரஸ்கள் வந்து வந்து போகின்றன. ஒரு சில தொடர்ந்து தொந்தரவு தந்து கொண்டே இருக்கின்றன. புதிதாய் வரும் வைரஸ்கள் எத்தனை நாட்கள் தங்கி இருந்து தொல்லை கொடுக்கும் என்று நம்மால் கணிக்க இயலவில்லை.

ஆனால் இவற்றைத் தேடி அழிக்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் தொடர்ந்து இயங்குகின்றன. ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் என்று கேள்விப்பட்டவுடன் நம் மனதிற்கு வருவது சைமாண்டெக், மெக் அபி, நார்டன் ஆகியவையே.

ஆனால் இன்னும் பல ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் அவ்வளவாகப் புகழ் பெறாமல் உள்ளன. இவை செயல்பாட்டில் பிரபலமான புரோகிராம்களுக்கு இணையாகவே உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.


1. பிட் டிபன்டர் (BitDefender)

பிட் டிபன்டர் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், விண்டோஸ் மட்டுமின்றி லினக்ஸ் சிஸ்டங்களிலும் இயங்கி செயல்புரிகிறது. அத்துடன் மெயில் சர்வர்கள், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களிலும் வைரஸ் எதிர்ப்பு பணியை மேற்கொள்கிறது.


இந்த இலவச புரோகிராமினைhttp://www.bitdefender.com/ என்ற தளத்தில் பெறலாம்.


2. அவிரா ஆண்ட்டிவிர் (Avira Antivir):

இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், மற்ற புரோகிராம்கள் கண்டுபிடிக்காத சில வைரஸ்களைக் கண்டறிந்து, அவற்றை நீக்கும் வழிகளைத் தருகிறது. அதே போல மற்றவற்றைக் காட்டிலும், கூடுதல் வேகத்தில் இது செயல்படும். இதனைப் பெற http://www.avira.com/en/products/index.php என்ற தளத்திற்குச் செல்லவும்.


3. கிளாம் ஏவி (Clam AV):

இது லினக்ஸ் இயக்கத்தில் செயல்படும் சர்வர்களுக்கென வடிவமைக்கப்பட்டது. அத்தகைய சர்வர்கள் வைத்திருப்போர் கட்டாயம் இதனை இன்ஸ்டால் செய்து வைத்திருக்க வேண்டும். இதனைப் பெற http://www.clamav.net/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.


4.அவாஸ்ட் (Avast): :

மற்ற ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைப் போல இது பெயர் பெற்றது இல்லை . ஆனால் இந்த புரோகிராம் தருவது போல பல ஆப்ஷன்களை மற்ற புரோகிராம்கள் தருவது இல்லை. இதன் தள முகவரி:http://www.avast.com/

5. ஆர் கே ஹண்டர் (rk hunter) :

இதன் சிறப்பு இது ஒரு ரூட்கிட் எதிர்ப்பு டூலாகும். நம்மில் பெரும்பாலானவர்கள் ரூட்கிட் நமக்கு தரக்கூடிய பாதிப்புகளை அறிந்திருப்பது இல்லை. மேக் கம்ப்யூட்டர்களில் பெரும்பாலும் இது சேதத்தை விளைவிக்கும். உங்களிடம் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ரூட்கிட்களுக்கு எதிரான பாதுகாப்பினை வழங்கவில்லை என்றால்,இதனை உடனே நிறுவுவது அவசியம்.

இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு http://rkhunter.sourceforge.net/ என்ற முகவரியில் உள்ள தளத்தினை அணுகவும்.


6. டாக்டர் வெப் க்யூர்இட் (Dr.Web CureIt):

இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை. இது ஒரு சிறிய பைனரி பைல். இதன் மீது டபுள் கிளிக் செய்தால், அது நம் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திடும். இதில் ஒரே ஒரு பிரச்னை உள்ளது. இதன் அண்மைக் காலத்திய மேம்படுத்தப்பட்ட புரோகிராமினை அப்படியே அப்டேட் செய்திட முடியாது.

மீண்டும் புதிதாக டவுண்லோட் செய்து பயன்படுத்த வேண்டும். இதனை போர்ட்டபிள் வைரஸ் ஸ்கேனராகப் பயன்படுத்தலாம். மேலும் தகவல்களுக்கு http://www.freedrweb. com/cureit/?lng=en என்ற இணைய தளத்தினை அணுகவும்.


7. இ செட் ஸ்மார்ட் செக்யூரிட்டி (ESET Smart Security):

NOD32 என்னும் ஆண்ட்டி வைரஸ் டூலைத் தந்தவர்களே இதனையும் தந்துள்ளனர். இது ஆண்ட்டி வைரஸ் மற்றும் பயர்வால் புரோகிராம்களாகச் செயல்படுகிறது. இதன் பயர்வால் செயல்பாடு சற்று விசித்திரமானது. இது இருக்கும் கம்ப்யூட்டரில் இன்டர்நெட் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை, நம்மிடமிருந்து கற்றுக் கொண்டு, அதற்கேற்ற வகையில் செயல்படுகிறது.

டேட்டா திருடு போகாமலும், நம் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களின் செயல்பாட்டை முடக்கும் வைரஸ்களை இயங்கவிடாமலும் இது தடுக்கிறது. மேலும் தகவல்களுக்கு http://www.eset.com/home/smartsecurity என்ற தளம் செல்லவும்.


8. ஐ ஆண்ட்டி வைரஸ் (iAnti Virus):

இதன் பெயரில் உள்ள ஐ என்பதைப் பார்த்தவுடன் இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், மேக் கம்ப்யூட்டர்களுக்கானது என்று அறிந்திருப்பீர்கள். மேக் கம்ப்யூட்டர்களில் எல்லாம் வைரஸ் வராது என்று சொல்லிக் கொண்டிருந்ததெல்லாம் அந்தக் காலம். இப்போதெல்லாம், விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் என அனைத்து வகை சிஸ்டங்களிலும் வைரஸ்கள் புகுந்து நாசம் விளைவிக்கின்றன.

இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் செயல்படுவதும், மேக் கம்ப்யூட்டர் இன்டர்பேஸ் போல ஒன்றின் வழியாகத்தான். மேக் சிஸ்டத்திற்கு மிகச் சரியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் இது. கூடுதல் தகவல்களுக்கு http://www.iantivirus. com/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.


9. மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ் (Microsoft Security Essentials)

பல்வேறு ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளை மேலே பார்த்தோம். மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ள இதனையும் நாம் கவனிக்க வேண்டும். இதில் குறிப்பிடத்தக்க சிறப்பு, மைக்ரோசாப்ட் தரும் இந்த ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு இலவசமாகும்.

பொதுவாக மைக்ரோசாப்ட் மற்றும் இலவசம் என்ற இரண்டும் இøணையாது. இது ஒரு விதிவிலக்காகும். இதனைப் பெறவும், தகவல்களை அறியவும் http://www.microsoft.com/security_essentials/ என்ற முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் தளம் செல்லவும்.


10. ஸோன் அலார்ம் (Zone Alarm):

மற்ற ஆண்ட்டி வைரஸ் தராத ஒரு சிறப்பான உதவியை ஸோன் அலார்ம் செய்கிறது. டேட்டா லாக் என்னும் டூலை ஸோன் அலார்ம் தருகிறது. உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் இருக்கும் டேட்டாவிற்கு என்கிரிப்ஷன் மூலம் பாதுகாப்பு தரும் வேலையையும் இது மேற்கொள்கிறது. எனவே என்கிரிப்ஷன் கீ இல்லாதவர்கள் டேட்டாவினப் படித்து அறிய இயலாது.

அதே போல கம்ப்யூட்டரை பூட் செய்வதிலும் இது பாதுகாப்பு தருகிறது. எனவே ஆண்ட்டி வைரஸ், என்கிரிப்ஷன், பூட் அனுமதி என கூடுதல் வசதிகளையும் இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிரம் தருகிறது. மேலும் தகவல்களுக்கு http://www.zonealarm. com/ என்ற தளம் செல்லவும்.

Tuesday, April 20, 2010

தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை: லலித் மோடிக்கு லஞ்சமாக ரூ.400 கோடி கொடுக்கப்பட்டது; புதிய குற்றச்சாட்டால் பரபரப்பு

ஐ.பி.எல்.  தலைவரான லலித் மோடி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. 3 அணிகளில் பங்கு, மேட்ச் பிக்சிங், அன்னிய செலவாணி, வரி ஏய்ப்பு உள்பட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு கோடி கோடியாய் பணம் சம்பாதித்தது தெரிய வந்தது. இதன் காரணமாக அவர் தனது பதவியை இழக்கிறார்.
 
இந்த நிலையில் லலித் மோடி மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெலிவிசன் ஒளிபரப்பு உரிமம் வழங்கியதில் அவருக்கு ரூ.400 கோடி லஞ்சமாக கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
 
சோனி என்டர்டெய்ன் மெண்ட் - வேல்டு ஸ்போர் டஸ் குரூப் (டபிள்யூ எஸ்.ஜி) நிறுவனத்தின் மல்டி ஸ்கிரீன் மீடியா (எம்.எஸ்.எப்.) அமைப்பு டெலிவிசன் ஒளிபரப்பு உரிமைக்கான வாய்ப்பை வழங்கியதற்காக ரூ.400 கோடி வழங்கி உள்ளது.
 
இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகி ஒருவர் கூறும்போது, “இது தொடர்பான ஒப்பந்தம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கோ, ஐ.பி.எல். அமைப்புக்கோ, 8 அணிகளுக்கோ எதுவும் தெரியாது. மோடி ஒருவர் மட்டுமே வாய்ப்புக்கான ஒப்பந்தத்தில் இருந்தார்” என்றார்.
 
இதற்காக வழங்கப்பட்ட ரூ.400 கோடிக்கு கணக்கு இல்லை. டபிள்யூ.எஸ்.ஜி. நிறுவனம் 2008-ம் ஆண்டு ஐ.பி.எல். டி.வி. ஒளிபரப்பு உரிமையை 10 ஆண்டுகளுக்கு ரூ.4,222 கோடி முதலில் பெற்றது. 2-வது ஐ.பி.எல். போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்த ஒப்பந்தம் மாற்றி அமைக்கப்பட்டது. இதில் தான் முறைகேடு நடந்து இருப்பதாக கூறப்படுகிறது.

Monday, April 19, 2010

அறிவைப் பெருக்கும் தோப்புக்கரணம்








ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை. 

ஆனால் இந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார். அவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார். பரிட்சைகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் தோப்புக்கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்த பின் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்ததாகக் கூறுகிறார்.


யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் (Dr. Eugenius Ang) என்பவர் காதுகளைப் பிடித்துக் கொள்வது மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுகின்றன என்று சொல்கிறார். அதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும் சக்தி வாய்ந்த மாற்றங்கள் ஏற்படுவதாக அவர் தெரிவிக்கிறார். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன என்று சொல்கிறார்.

தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை EEG கருவியால் டாக்டர் யூஜினியஸ் அங் அளந்து காண்பித்தார். மூளையில் நியூரான்கள் செயல்பாடுகள் அதிகரிப்பதை பரிசோதனையில் காண்பித்த அவர் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைவதாகவும் சொன்னார். மிக நுண்ணிய தகவல் அனுப்பும் காரணிகள் வலுப்பெறுவதும் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டாக்டர் யூஜினியஸ் அங் தானும் தினமும் தோப்புக்கரணம் போடுவதாகக் குறிப்பிடுகிறார்.

Autism, Alzheimer போன்ற இக்காலத்தில் அதிகரித்து வரும் நோய்களுக்குக் கூட இந்த தோப்புக்கரண உடற்பயிற்சியை ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். தோப்புக்கரணம் தினமும் செய்வதன் மூலம் மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிக நல்ல பலன்களைப் பெறுவதாக அவர்களது பரிசோதனைகள் சொல்கின்றன. 

ப்ராணிக் சிகிச்சை நிபுணர் கோ சோக் சூயி (Master Koa Chok Sui) தன்னுடைய Super Brain Yoga என்ற புத்தகத்தில் தோப்புக்கரணத்தைப் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய சொற்பொழிவுகளிலும் இதை அதிகம் குறிப்பிடுகிறார். 

இதனால் தான் தோப்புக்கரணம் பள்ளிகளில் நம் முன்னோர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. படிக்காத மாணவர்கள் தோப்புக்கரண முறையால் தண்டிக்கப்படுவதன் மூலம் அவர்களது அறிவுத் திறன் அதிகரிக்க வழியும் காண்பிக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.

இந்த தோப்புக்கரணப்பயிற்சியை தினந்தோறும் மூன்று நிமிடங்கள் செய்தால் போதும் வியக்கத் தக்க அறிவு சார்ந்த மாற்றங்களைக் காணலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அவர்கள் பரிந்துரைக்கும் தோப்புக்கரண பயிற்சியை அவர்கள் சொல்கின்ற முறையிலேயே காண்போமா?

உங்கள் கால்களை உங்கள் தோள்களின் அகலத்திற்கு அகட்டி வைத்து நின்று கொள்ளுங்கள். உங்கள் பாதங்கள் நேராக இருக்கட்டும். வலது காதை இடது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். அதே போல் இடது காதை வலது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். மூச்சை நன்றாக உள்ளே இழுத்தபடி அப்படியே உட்கார்ந்து மூச்சை வெளியே விட்டபடி எழுந்து நில்லுங்கள். மூச்சும், உட்கார்ந்து எழுவதும் ஒரு தாளலயத்துடன் இருக்கட்டும். 

செய்து பழக்கமில்லாதவர்களுக்கு ஆரம்பத்திலேயே மூன்று நிமிடங்கள் தொடர்ந்து தோப்புக்கரணம் செய்வது கடினமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் ஒரு நிமிடம் செய்வதில் இருந்து ஆரம்பித்து நாட்கள் செல்லச் செல்ல இரண்டு நிமிடங்கள், பிறகு மூன்று நிமிடங்கள் என்று அதிகரியுங்கள். 

ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் மிக நல்ல பலன்களைப் பார்க்கும் போது உங்கள் அறிவுத் திறனின் வளர்ச்சிக்காக மூன்று நிமிடங்கள் தினமும் செலவழிப்பது மிகப்பெரிய விஷயமல்ல அல்லவா?

வருங்காலத் தொழில்நுட்பம் : ஐ-பேட், பி1 விசா மற்றும் சில!


வருங்காலத் தொழில்நுட்பம் - 39 : ஐ-பேட், பி1 விசா மற்றும் சில!
ன்லைனில் வீடியோ பார்க்கத் தேவையான Flash வேலை செய்வது இல்லை என்ற குறையை விரைவில் வெளிவரப்போகும் HTML 5 சமன் செய்துவிடும் என்பதால், ஐ-பேடை அச்சம் இல்லாமல் வாங்குங்கள் என்கிறார்கள் ஆப்பிள் மோகிகள்.

ஒரு வலைப்பதிவர் ஐ-பேடின் உள் இயங்கும் மென்பொருளைத் துண்டுதுண்டாகப் பிரித்து அலசி, கேமராவுக்கான பகுதியைக் கண்டுபிடித்து பதிவு ஒன்றை வெளியிட, அடுத்த ஜெனரேஷன் சாதனத்தில் கேமரா கண்டிப்பாக இருக்கும் என்று ஊகங்கள், அதையட்டிய கொண்டாட்டங்கள். பிரபலமான Wall Street Journal நாளிதழில் ஐ.டி. தொழில்நுட்பங்களை அலசி எழுதும் வால்டர் மோஸ்பேர்க், 'ஐ-பேட் லேப்-டாப்புக்குச் சவால்விடுகிறது' என்று பாசிட்டிவ் ஆக எழுதியிருக்கும் பதிவு, பெரிய நிறுவனங்களும் ஐ-பேடைப் பயன்படுத்தத் தூண்டும். (http://ptech.allthingsd.com/20100331/apple-ipad-review/).


இணையத்தின் பிரபலத்தால் நாள்தோறும் நசிந்து வரும் பத்திரிகை நிறுவனங்கள், ஐ-பேடை ஆவலுடன் எதிர்பார்க்கின்றன. கிட்டத்தட்ட விகடன் பிரின்ட் எடிஷன் அளவில் இருக்கும் ஐ-பேட், பத்திரிகைகளை அப்படியே பேப்பர் வடிவில் படிக்கும் அனுபவத்தைக் கொடுக்கும். ஒன்று மட்டும் தெளிவு, ஆப்பிள் நிறுவனத்துக்கு மட்டுமல்லாமல்; படுபாடுபட்டுத் திணறி வரும் அமெரிக்கப் பொருளாதாரத்துக்கே ஐ-பேட் மிகப் பெரிய வரமாக இருக்கப்போகிறது!

கிடுகிடுவென வளர்ந்து வரும் பொருளாதார வளர்ச்சியும் இணைய நுகர்வும் பிரபல இன்டர்நெட் நிறுவனங்களுக்கு இந்தியாவில் கடை விரிக்க அதிக ஆர்வத்தை அளிக்கின்றன. ஃபேஸ்புக் பயனீட்டாளர்களுக்கு நன்கு அறிமுகமான Farmville விவசாய விளையாட்டுத் தயாரிப்பு நிறுவனமான Zynga இந்தியாவில் அலுவலகம் ஒன்றைச் சென்ற மாதம் தொடங்கி இருக்கிறது. ஃபேஸ்புக் நிறுவனமும் தங்களது கிளையை இந்த மாதம் ஹைதராபாத்தில் தொடங்குகிறது. இந்தியாவை மலிவான விலையில் ஆள் பிடிக்கும் அவுட்சோர்ஸிங் தளமாகப் பயன்படுத்திக்கொண்டு இருந்த நிலை தாண்டி, இந்தியாவைச் சந்தையாகப் பார்ப்பது ஆரோக்கியமான உலகமயமாதலே. திரைகடல் ஓடி திரவியம் தேடி வரும் இந்த நிறுவனங்களால், இந்தியாவின் ஐ.டி. இண்டஸ்ட்ரிக்கு வேலைவாய்ப்புகள் உட்பட பல நன்மைகள். ஏதாவது தீமை உண்டா என்பதைப் பார்க்க சற்றே பொறுத்து இருக்கலாம்.
இது அனைத்தையும்விட மிக முக்கியச் செய்தி: அமெரிக்க அரசின் பரிசீலனைக்கு வந்திருக்கும் தொழில் முனைவோர் விசா. அமெரிக்காவின் வேலை விசாவான பி1, வேலை கொடுப்பவர்களுக்கே சாதகமாக இருந்து வந்திருக்கிறது. அந்த விசாவில் இருக்கும்போது தொழில் முனைவது சாத்தியம் இல்லை என்பதால், சிறந்த ஐடியாக்களும் கடின உழைப்பும் செய்யத் தயாராக உள்ளவர்களும் பல வருடங்கள் காத்திருந்து, க்ரீன் கார்டு எனப்படும் நிரந்தரக் குடி உரிமை பெற்று, அதற்குப் பின்னரே தொழில் முனைய முடியும் என்றிருந்த நிலை இந்த விசாவினால் மாறும். இந்த விசா வாங்குவதற்குக் கீழ்க்கண்டவை தேவை:
சிறந்த பிசினஸ் ஐடியா. இது இன்டர்நெட் துறையில்தான் இருக்க வேண்டும் என்பது தேவை இல்லை. (ஆனால், இணையத்தில்தான் அதிகமான ஐடியாக்கள் உருவாக்கப்படும் என்பதைச்சொல்லத் தேவை இல்லை).

இந்த ஐடியாவை அங்கீகரித்து தொழில் முதலீட்டாளர் எவராவது 2,50,000 டாலர்களைக் கொடுக்க வேண்டும்.

இது கிடைத்தவுடன் நீங்கள் அமெரிக்காவுக்கு வந்து உங்களது நிறுவனத்தைத் தொடங்கி விடலாம்.
தொடங்கிய 2 வருடங்களுக்குள் 5 பேருக்கு வேலை கொடுத்திருக்க வேண்டும். அதோடு, ஒரு மில்லியன் டாலருக்கு தொழில் முதலீடோ அல்லது உங்கள் நிறுவனம் வருவாயோ (லாபம் அல்ல) உண்டாக்கியிருக்க வேண்டும்.
இதைச் செய்ய முடிந்தால், உங்களுக்கு உடனடியாக க்ரீன் கார்டு வழங்கப்படும்.
திறமைசாலிகளை நாட்டுக்குள் கொண்டுவருவது வேலைவாய்ப்புகளைக் கொடுக்கும் என்பதால், இந்த மாதம் அமெரிக்க செனட்டில் விவாதிக் கப்படும் இந்த பில் சட்டமாகிவிடும் என்றே தோன்றுகிறது.
இந்தக் கட்டுரை எழுதப்படும் ஏப்ரல் 1-ம் தேதி அன்று இணைய உலகத்தை ஒரு க்விக் ரவுண்ட் அடித்தால், முட்டாள்கள் தினத்தைப் பயன்படுத்தி, பல கோணங்கித்தனங்கள் அரங்கேறிக்கொண்டு இருப்பது தெரியவருகிறது.
கூகுள் தங்களது ஊருக்கு இலவச இன்டர்நெட் இணைப்பு தர வேண்டும் என்ற கோரிக்கையோடு அமெரிக்க ஒரேகான் மாநில ஊரான டொபெகா தனது பேரை கூகுள் என்று மாற்றிக்கொண்டதுபற்றி சில வாரங்களுக்கு முன் இந்தத் தொடரில் எழுதினேன். இதற்கு எட்டாம் போட்டியாகத் கூகுள் தங்களது நிறுவனத்தின் பெயரை டொபெகா என மாற்றிக்கொண்டுவிட்டதாக அறிவித்திருப்பது செம லொள்ளு.



பை தி வே, கூகுளுக்கு வருடா வருடம் ஏப்ரல் 1 தினத்தில் இப்படி ஏதாவது செய்வது கடந்த 10 வருடங்களாகத் தொடர்ந்து நடக்கிறது. இந்த உரலியில் சென்ற வருடங்களின் அட்டகாசங்கள்: 

பிரபல டெக்னாலஜி வலைதளமான TechCrunch பதிவு ஒன்றில் எப்படி ஒரு லேப்-டாப்பை ஐ-பேட் போல எளிதாக மாற்ற முடியும் என்ற பதிவை வெளியிட்டு இருக்கிறது. சீரியஸாகத் தோன்றும் இந்தப் பதிவின் வீடியோவைப் பாதிக்கும் மேல் பார்த்த பின்னரே, மைக்கேல் ஆரிங்க்டன் ஒரு வாளைக்கொண்டு லேப்டாப்பைக் கரகரவென அறுக்கும்போதுதான், நம் தலையில் சுற்றப்படும் பூவின் வாசம் தெரிகிறது

முதுமைக்கு உதவி புரியாத முதுமையின் (கலைஞரின்) ஆட்சி பாரீர்

தமிழகத்தின் கடந்த கால செயற்பாடுகள் தமிழ் உறவுகளை நோகடிப்பதாக அமைந்துள்ளன. தமிழ்-தமிழ் அதுவே என் மூச்சு என்று கூறும் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் ஆட்சிக்காலத்திலேயே உலகெங்கிலும் தமிழ் மக்கள் அச்சுறுத்தலுக்கும் அழிவுக்கும் ஆட்பட்டனர். பேசவும், எழுதவும் தெரியும் என்பதற்காக அதுவே தமிழ்ப் பற்றும், பாசமுமாகி விடாதென்பதற்கு கலைஞர் கருணாநிதி நல்ல உதாரணம்.
அலங்கார வார்த்தைகளால் தமிழ் மக்களின் உரிமைகள் வென்றெடுக்கப்பட முடியாது. உள்ளும் புறமும் தமிழ் உணர்வு பாயவேண்டும். அந்த உணர்வு தமிழக முதல்வராக இருந்த எம்.ஜீ.இராமச்சந்திரனிடம் இருந்ததை எவரும் மறுக்க மாட்டார்கள். குறிப்பாக ஈழத்தமிழர்கள் மீது எம்.ஜீ.இராமச்சந்திரன் அளவு கடந்த அன்பும் இரக்கமும் கொண்டிருந்தார்.
ஆனால் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி ஈழத்தமிழர் மீது பற்றுக் கொண்டவர் போல பாசாங்கு செய்தார்.அவரின் உண்ணாவிரத நாடகம் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. இதுவாயினும் தன் குடும்பத்திடம் தமிழகத்தின் அரசியல் தலைமையை ஒப்படைக்கும் அவரின் அயராத முயற்சி, அதற்காக மத்திய அரசுடன் சேர்ந்து தாளம் போடும் அவரின் கபடத்தனம் என அத்தனையும் சேர்ந்து பல்லாயிரக் கணக்கான ஈழத்தமிழர்களை வன்னி யுத்தத்தில் பலிகொடுக்க வேண்டியாயிற்று.
வன்னியில் நடந்த யுத்தத்தின் போது தமிழகம்- தமிழக முதல்வர் கொதித்திருந்தால் இந்த அளவு அழிவுகள் ஏற்பட்டிருக்கமாட்டா.என்ன செய்வது! எங்கள் கெடுகாலம் தமிழ கத்தின் ஆட்சி பீடத்தில் வார்த்தைஜால நடிகர் மு.கருணாநிதி இருந்துவிட்டார். அதனால் அத்தனை துன்பங்களையும் தமிழ் மக்கள் அனுபவித்தனர். அனுபவித்து வருகின்றனர்.
நிலைமை இதுவாக இருக்கும் போது, மலேசியாவில் இருந்து தமிழகத்திற்குச் சென்ற விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் தாயார் திருமதி பார்வதியம்மாவை சென்னை விமானநிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பி தமிழகம் மீண்டுமொரு கோழைத் தனமான தவறை இழைத்துவிட்டது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்காக அவரின் தாயாரை திருப்பி அனுப்புவது என்பது தமிழகத்தின் புத்தியாக இருக்க முடியுமேயன்றி உலகில் வேறெங்கும் இந்த அநீதி இடம்பெறமாட்டாது.
முதுமை நிறைந்த பார்வதியம்மாவை திருப்பி அனுப்பிய, தள்ளாடும் முதுமை கொண்ட தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி இதற்கு கவிதை பாடியா? கவலை கொள்வார். அட! நெஞ்சுக்கு நீதி எழுதியபின்பாவது நெஞ்சம் இரங்க வேண்டாம். எல்லாம் பொய், எல்லாம் வேடம், எல்லாம் பாசாங்கு இதன் ஒட்டுமொத்த வடிவம் கலைஞர் கருணாநிதி என்பதை இந்தியாவை நம்பி-பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று பார்வதியம்மாவை திருப்பி அனுப்பியமை கண்டும் மெளனமாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உணர்ந்து கொள்வதாக.

Sunday, April 18, 2010

வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பிய தொகை அதிகரிப்பு

மும்பை: வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அனுப்பிய தொகை 100 கோடி டாலர் அதிகரித்துள்ளது. இதுகுறித்து வெளிவந்துள்ள செய்தியில், சென்ற 2009ம் ஆண்டில், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களால், நம் நாட்டுக்கு அனுப்ப பட்ட தொகை சுமார் 100 கோடி டாலர் அதிகரித்து 2,751 கோடி டாலராக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இது கடந்த 2008ம் ஆண்டின் இதே காலத்தில் 2,637 கோடி டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.கடந்த 2009ம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், வெளிநாடு வாழ் இந்தியர்களின் வங்கி சேமிப்பு கணக்கில் செலுத்த படும் தொகைக்கு அதிக வட்டி வழங்க பட்டது. இதே காலத்தில், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு சரிவடைந்திருந்தது. இதுபோன்ற காரணங்களால், வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் தொகை வந்துள்ளதாக கூறப்படுகிறது

உலகின் சிறந்த 50 இன்நோவேட்டிவ் நிறுவனங்களில் டாடா, ரிலையன்ஸ்

நியூயார்க்:  உலகின் சிறந்த 50 இன்நோவேட்டிவ் நிறுவனங்களில் இந்தியாவின் டாடா, ரிலையன்ஸ் நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. புதுமைகளை புகுந்துவதில் உலகின் சிறந்த 50 நிறுவனங்கள் குறித்த கணக்கெடுப்பு எடுக்கப் பட்டது. இதில், முதலிடத்தை அமெரிக்காவின் ஆப்பிள் வேர்ல்டு பிடித்துள்ளது. இந்தியாவின் டாடா குழுமம் 17 இடத்தையும் மற்றும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் 33வது இடத்தையும் பெற்றுள்ளன. இப்பட்டியலில் முதலில் உள்ள பத்து நிறுவனங்களின் பெயர்கள் வருமாறு: ஆப்பிள் வேர்ல்டு, கூகுள், மைக்ரோசாப்ட், ஐபிஎம். டொயோட்டா, அமேஸான் டாட் காம், எல்ஜி எலக்ட்ரானிக்ஸ், பிஒய்டி, ஜெனரல் எலெக்ட்ரிக் மற்றும் சோனி. 50 நிறுவனங்களில் 24 நிறுவனங்களை வட அமெரிக்காவும் 11 நிறுவனங்களை ஐரோப்பாவும் 15 நிறுவனங்களை ஆசியாவும் பெற்றுள்ளன.

Friday, April 16, 2010

IPL company சீக்ரெட் ah வெளில சொல்லாதடா.


சென்னையின் சிறப்பான ()சிங்கங்கள்
தோணி: மன்கூஸ்ஸ எடுத்துகிட்டு ஆஸ்திரேலியால இருந்து ஹேடன் வந்துருக்காக... சவுத் ஆப்பிரிக்காவுலருந்து மார்கல் வந்துருக்காக... ஸ்ரீலன்காவுலருந்து முரளி வந்துருக்காக...மற்றும் நம் உறவினர்களெல்லாம் வந்துருக்காக..
Audience : எல்லாரும் வந்து என்னடா புரயோஜனம். ரன் அடிக்க மாட்டேங்குறீங்கலேடா. சாதா bat வச்சிருந்தப்பவே நல்ல தானடா விளையாண்டீங்க. இப்ப மன்கூஸ்ஸ எடுத்துட்டு வர்றேன்னு சொல்லி semi final போறதுக்கே டண்டணக்கா போடா வேண்டியதாயிருச்சேடா.

டோனி: chennai super kings ku விசில் போடு ..
Audience: நாங்க மொதல்ல உன்ன போடுரோம்டா . அப்பறம் உனக்கு விசில் போடுறோம்.. 

பதினோரு ராஜாக்கள்

ஒரு டீமுக்கு வாழ்க்கையில அடி விழலாம். ஆனா அடியே வாழ்க்கைய இருந்த என்ன பண்றது. திரும்ப துபாய்க்கே போயிறலாம இல்ல இங்க ஒரு ஓரஞ்சாரமா உக்காந்து தொழில் பண்ணலாமா ன்னு preeti zinda யோசிச்சிக்கிட்டு இருக்காங்கலாம்.

Team Punch: ஏய்.. ஏய் ... செட்டு செங்கல்பட்டு , மதுர, திருச்சி , சேலம் , கோயம்புத்தூரு, North ஆற்காடு , south ஆற்காடு , FMS வரைக்கும் பாத்தவங்கட நாங்க.. நாங்க அடி வாங்காத ஏரியாவே கெடயாது. பேட் , ball எல்லாம் எங்கள touch பண்ணி பண்ணி tired ஆயி கெடக்கு. அப்புடி துப்பிட்டு கெளம்ப பாரு.


கொல்கத்தாவின் குதிரைக்கார தளபதிகள்
ஷாருக்: டேய் கங்குலி, நானும் வலிக்காத மாதிரியே எவ்வளவு நேரந்தான் நடிக்கிறது. அதுகூட பரவல்ல.. சீக்கு வந்த கோழி மாதிரி இருக்க உன்ன 100 தடவ தாதா, தாதான்னு சொல்ல வச்சிட்டியேடா...

கங்குலி: அது ஒன்னும் இல்ல ஷாருக்.. நாங்க சும்மா தோத்து பாத்தோம்..

ஷாருக்: டேய்.. யாரு காசுல யாருடா தோத்து பாக்குறது? மொத்தம் இருக்கதே பதினாலு மேட்ச் தான். நீங்க பதினாளுலையுமே தோத்து பாக்குரீங்கலேடா..
Mc Cullum: அட விடுங்க பாஸ்.. IPL 2011 ல கலக்குறோம் பாருங்க...
ஷாருக்: என்னது 2011 ah? அடுத்த வருஷம் நீ இந்த பக்கம் வந்த, மொத dead Body நீதாண்டா. டேய் இனிமே IPL eh கெடயாதுடா... அட நா இனிமே இந்தியாவே இல்லடா.. ஆப்பிரிக்க பக்கம் போய் settle ஆக போறேன்.

டெல்லியின் துணிச்சலான பிசாசுகள்:

சேவாக்: நம்ம கிட்டருந்து எல்லாரும் ரொம்ப ஓவரா எதிர் பாக்குராயிங்களோ..குறு குறுன்னு பாக்குராயிங்க...

கம்பீர்: கொஞ்சம் frank ah பேசலாமா?
சேவாக்: சொல்லு.
கம்பீர்: நாம இது வரைக்கும் யார அடிச்சிருக்கோம்? Kolkatta Kinght Riders, Kings XI, Rajastan Royals இது மாதிரி soft ஆனா charactera எல்லாம் அடிச்சி நாம ரெண்டு IPL லயும் பெரிய ரவுடியா form ஆயிட்டோம். இப்ப எல்லாரும் உசாரயிட்டானுங்க. நம்ம என்ன பண்றது?

சேவாக்: டேய் company சீக்ரெட் ah வெளில சொல்லாதடா.. சரி விடு எப்புடியும் semi final ah ஆப்பு வச்சி வீட்டுக்கு தான் அனுப்ப போராயிங்க. அதுக்கு இப்பவே போயிடுவோம். ஆனா என்ன நடந்தாலும் பயத்த மட்டும் கண்ணுல காமிக்காத. நம்மள மாதிரி ரவுடிங்களுக்கெல்லாம் பயம் தான் முக்கியம்.

கம்பீர்: ஏய்... ஏய்... எல்லாம் பாத்துக்குங்க... நாங்களும் ரவுடி தான்.


மும்பை இந்தியர்கள்:

ஜெயசூர்யா: தல... தல... தல...
சச்சின்: என்னடா?
ஜெயசூர்யா:கங்குலி டீம் நம்ம கூட match ku வர்றாங்க தல....
சச்சின்: கங்குலிக்கு கட்டம் சரியில்ல.. நம்ம கூட மோதுறதே அவனுக்கு வேலையா போச்சு.
ஜெயசூர்யா: தல... கங்குலியா கொன்னுறு...
சச்சின்: ஹ்ம்ம்.. செத்த பாம்ப அடிக்கிற பழக்கம் எனக்கு இல்ல... என் சங்கத்துலருந்து ஆள அழச்சிட்டு போய் அவன முடிச்சிரு..
ஜெயசூர்யா: சரி தல..

சச்சின் song : நா அடிச்சா தாங்க மாட்ட.. நாலு மாசம் தூங்க மாட்ட... மோதி பாரு வீடு போயி சேர மாட்ட...

ராஜஸ்தானின் பகட்டானவர்கள்:


யூசுப் பதான் : அண்ணே... நாம ஏண்ணே எல்லா மட்ச்ளையும் தோத்துகிட்டே இருக்கோம்..
ஷேன் வார்ன்: நாம தோக்கலடா... இதெல்லாம் treatment.
யூசுப் பதான்: என்ன treatment ah?
ஷேன் வார்ன்: ஆமாடா... இப்ப நமக்கு வயித்துல எதாவது பிரச்சனைன்னு வசிக்கவேன்... நேரா போயி banglore ta match ku போவனும். அவியிங்க எல்லாரும் சேந்து வயித்துலேயே மிதிச்சி அடிச்சி அனுபிடுவாயிங்க..
இப்ப deccan ta match ku போனோம்னு வைய்யி... அத்தன பயலும் கழுத்துலே மிதிப்பானுங்க... கழுத்து வலியெல்லாம் போயிடும்.
மும்பை கிட்ட match ku போனோம்னு வையி அத்தன பயலும் மேல ஏறி டிங்கு டிங்குன்னு மிதிப்பனுங்க. மொத்த வலியும் போயி face fresh ஆயிடும்...

யூசுப் பதான்: அப்பா எல்லா எடத்துலயும் நீயா விரும்பி தான் அடி வாங்குற
ஷேன் வார்ன்: அட ஆமாப்பா.. அவ்வவ்....


பெங்களூருவின் பகட்டான சவால்காரர்கள்

இவியிங்க ஒரு Unlimited Meals Association. ஒவ்வொருத்தனும் மொழாம் பழத்துக்கு மூக்கு மொளச்ச மாதிரி இருக்கானுங்க. இந்த kaalis கருமம் புடிச்சவன்லாம் batting பண்ண வந்த 20 over முடிஞ்சும் போக மாட்டேன்னு அடம் புடிக்கிறான்.. இந்த ஊத்தப்பம் (Robin Uthappa)வேற indian team ல எடுத்தப்ப எல்லாம் இந்த மாதிரி விளயாண்டதே இல்ல.. ball கெடச்சா ground ku வெளில அடிச்சிபுடுறான். அப்பறம் இவங்க டீம் ல ஒரு spinner இல்லாத கொறதான். அணில் கும்ப்ளே ங்குற medium pace bowler ah வச்சி தான் adjust பண்ணிக்கிறாங்க.

தக்கணத்தின் விரட்டல்காரர்கள்:
இவியிங்கள பத்தி சொல்றதுக்கு பெருசா ஒன்னும் இல்ல.. இவியிங்க எப்போ ஜெயிப்பயிங்க எப்போ தோப்பாயிங்கன்னு யாருக்கும் தெரியாது. ஆனா ஜெயிக்க கூடாத நேரத்துல correct ah ஜெயிப்பாயிங்க.