Sunday, April 18, 2010

வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பிய தொகை அதிகரிப்பு

மும்பை: வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அனுப்பிய தொகை 100 கோடி டாலர் அதிகரித்துள்ளது. இதுகுறித்து வெளிவந்துள்ள செய்தியில், சென்ற 2009ம் ஆண்டில், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களால், நம் நாட்டுக்கு அனுப்ப பட்ட தொகை சுமார் 100 கோடி டாலர் அதிகரித்து 2,751 கோடி டாலராக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இது கடந்த 2008ம் ஆண்டின் இதே காலத்தில் 2,637 கோடி டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.கடந்த 2009ம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், வெளிநாடு வாழ் இந்தியர்களின் வங்கி சேமிப்பு கணக்கில் செலுத்த படும் தொகைக்கு அதிக வட்டி வழங்க பட்டது. இதே காலத்தில், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு சரிவடைந்திருந்தது. இதுபோன்ற காரணங்களால், வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் தொகை வந்துள்ளதாக கூறப்படுகிறது

No comments:

Post a Comment