Tuesday, April 13, 2010

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்வதில் தமிழகம் 3வது இடம்

சென்னை :  இந்தியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதில் தமிழகம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது; முதலிடத்தில் டில்லி உள்ளது.இந்தியாவில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் மாநிலங்கள் பற்றி இந்திய வர்த்தக மையம் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் வரலாற்று சின்னங்கள், அருங்காட்சியகங்கள், கோட்டைகள், பார்லிமென்ட், பூங்காக்கள், வர்த்தக வளாகங்கள் என நாட்டிலேயே அதிகளவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் மாநிலம் என்ற பெருமையை டில்லி பிடித்துள்ளது.இங்கு ஆண்டுக்கு 23.4 லட்சம் வெளிநாட்டு பயணிகள் வந்து செல்கின்றனர். அதேபோல, பாரம்பரிய சுற்றுலா தலங்கள், பிரபல மருத்துவமனைகள், வர்த்தக மையங்கள், அழகிய கடற்கரை, இந்தியாவின் வர்த்தக நகரம் என்ற பெருமையுடன் மும்பை, பாலிவுட் போன்றவற்றால் மகாராஷ்டிரா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இம்மாநிலத்துக்கு ஆண்டுக்கு 20 லட்சத்து 60 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர்.தமிழகத்துக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. சென்னையில் உள்ள உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகளால், இங்கு வரும் மருத்துவ சுற்றுலா பயணிகள், அழகிய மலைப் பிரதேசங்கள், கடற்கரைகள், கோவில்கள், சரணாலயங்கள், அழகிய கிராமப்புறங்கள், சென்னை, கோவை, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி மற்றும் சேலம் போன்ற நகரங்கள், இவற்றுக்காக, ஆண்டுக்கு  20 லட்சத்து 30 ஆயிரம் வெளிநாட்டினர் இங்கு வந்து செல்வதாக, சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment