Monday, March 8, 2010

அரிவாள் வெட்டுக்கு 500 பேர் பலி ; உலகில் இது வரை நடக்காத கொடூர வெறி



நைஜீரியாவில் நடந்த மோதலில் வீட்டுக்குள் இருந்தவர்களை வெளியே இழுத்து போட்டு 500 பேர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்துவர்கள் அதிகம் வசிக்கும் ஜோஸ் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.






வீடுகளுக்கு தீ வைப்பு : இந்தப்பகுதி மலைப்பாங்கான பகுதி ஆகும். இதன் அருகில் உள்ள அதாவது நைஜீரியாவின் தெற்கு பகுதியில் உள்ள கிராம மக்களுக்கும் பெரும் பகை இருந்து வருகிறது, பல ஆண்டுகளாக இந்த பகை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஜோஸ் பகுதிக்குள் நள்ளிரவில் புகுந்த ஒரு வன்முறைக்கும்பல் கையில் கிடைத்தவர்களையெல்லாம் வெட்டித்தள்ளியது. பல வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன. இதில் இறந்தவர்கள் பெண்களும், குழந்தைகளும் ஆவர் .




இது குறித்து அதிபர் ஜேனாத்தான் கூறுகையில் இந்த சம்பவம் நடந்த பகுதிகளில் ஆயுதம் ஏந்திய போலீசார் போடப்பட்டுள்ளனர். இறந்தவர்கள் முழு விவரம் இன்னும் விவரம் வரவில்லை. 300 க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது என கூறினார். உலக அளவில் இன, கோஷ்டி மோதலில் 500 பேர் வரை இறந்திருப்பது உலக அளவில் இது பெரும் கவலை தரும் செய்தி ஆகும்.ஏற்கனவே நைஜீரியாவில் பல மோதல்கள் நடந்துள்ளது. இது போன்ற கொடூர மோதல் என அங்குள்ள உள்ளூர் வாசி தெரிவிக்கிறார். அவர் மேலும் கூறுகையில் இரவில் வந்த கும்பல் கைத்துப்பாக்கியை வானத்தை நோக்கி சுட்டனர். பின்னர் ஒவ்வொரு வீடாக நுழைந்து கையில் கிடைத்தவர்களையெல்லாம் வெட்டினர். ரோடுகளில் பிணங்களாக கிடக்கிறது இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment