Tuesday, March 2, 2010

நிலவில் பனிக்கட்டிகள் ; கண்டுபிடிப்பில் மேலும் ஒரு புதிய சாதனை படைத்தது இந்தியா



நாசா: நிலவில் தண்ணீர் இருக்கிறது என கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட சந்திரயான்- 1 ஆள் இல்லா விண்கலம் கண்டு பிடித்து கொடுத்தது. இது போல் தற்போது இந்த சந்திரயான் மூலம் நிலவில் பனிக்கட்டிகள் இருப்பதும் கண்டு பிடித்து கொடுத்துள்ளது. இத்தகவலை நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது. இந்த தகவல் இந்தியாவின் ஆராய்ச்சிக்கு மேலும் ஒரு சிறப்பை தந்திருக்கிறது.


கடந்த 2008 ம் ஆண்டில் அக்டோபர் மாதம் இந்தியாவில் இஸ்ரோ மூலம் தயாரித்து உருவாக்கப்பட்ட சந்திரயான் - 1 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இடையில் அது செயல் இழந்து விட்டதாக கூறப்பட்டாலும். ஏறக்குறைய 90 சத பணிகளை அது முடித்து விட்டது என விஞ்ஞானிகள் கூறினர்.


உலக அளவில் இந்தியாவுக்கு 6 வது இடம் : உலக அளவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான், ஐரோப்பிய விண்வெளி ஆகியன மட்டுமே ஆள் இல்லா விணகலத்தை அனுப்பி வந்தது. இந்த வரிசையில் இந்தியா 6 வது நாடு என்ற பெருமையை படைத்தது. நிலவில் உள்ள மூலப்பொருள், தண்ணீர் மற்றும் அங்கு வாழும் தன்மை குறித்து ஆய்வு நடத்த சந்திரயான் அனுப்பப்பட்டது. இந்த விண்கலத்தின் மூலம் மூன் மினரலாஜி மேப்பர் என்ற கருவி மூலம் நிலவின் தெற்கு துருவத்தில் ண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது 40 ஆண்டுகால சந்தேகத்திற்கு முடிவாக அமைந்தது. இதனை நாசாவும் ஒத்துக்கொண்டது. உலக அளவில் நிலவில் தண்ணீர் இருப்பது இந்தியாவின் மூலம் வெளி கொண்டு வரப்பட்டது. இது உலக அளவில் அனைவரும் திரும்பி பார்க்கும்படியாக அமைந்தது என்பது நினைவிருக்கலாம்.


15 கி.மீட்டர் வரையிலான குறுக்கு விட்டம் கொண்ட குழிகள் : தற்போது இந்த சந்திரயானில் நாசா உதவியுடன் பொருத்தப்பட்டிருந்த எஸ்.ஏ.ஆர்., என்ற ரேடார் கருவி மூலம் இங்கு நிலவின் வடக்கு துருவத்திலல் ஐஸ்கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இங்குள்ள 40 குழிகளில் பனிக்கட்டிகள் உறைந்து இருப்பது தெரிய வந்துள்ளது. இந்தக்குழிகள் 2 கி.மீட்டர் முதல் 15 கி.மீட்டர் வரையிலான குறுக்கு விட்டம் கொண்ட குழிகளாக உள்ளது.  இதில் இருந்து 600 மில்லியன் மெட்ரிக் டன் தண்ணீர் வரை கிடைக்கும் என்றும் நாசா கூறியுள்ளது. சந்திரயான் மூலம் நிலவில் பனிக்கட்டிகளும் இருக்கிறது என்பது உலகிற்கு பெரும் வரப்பிரசாதமான தகவல். இந்த விஷயத்திற்கு இந்திய விஞ்ஞானிகளுக்கு உலகம் முழுவதும் பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது. அப்போ நிலவுக்கு போய் வசிக்க துவங்கிடலாமா ?

No comments:

Post a Comment