Wednesday, March 10, 2010

சொல்கிறார்கள்


இழந்த வாழ்வை நிச்சயம் மீட்போம்! பிளாட்பாரக் கடையில் வியாபாரம் செய்து, கோவை சங்கரா தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவி �ஷாபனா: அப்பா இறந்த பின், சொந்தமா ஒரு வீடு மட்டும் இருந்தது. அப்போ எனக்கு, இதயத்துல கோளாறு... உடனே, ஆபரேஷன் பண்ணனும்னு சொல்லிட் டாங்க... வீட்டை வித்து ஆபரேஷனை முடித் தோம். இப்போ வாடகை வீட்டில் இருக்கிறோம். என் மருத்துவச் செலவிற்கு மட்டும், மாதம் 3,000 ரூபாய் வேணும்.தம்பி கார்த்திக், வீடு வீடாகச் சென்று புடவை, ஜாக்கெட் விற்பான். நான், படிச்சு பெரிய ஆளா ஆகணும்னு கனவு கண்டு, எனக்காக உழைக்கிறான். இப்போ, பிளாட்பாரத்தில் பிளாஸ்டிக் பொம்மை கடை நடத்துறான்.அம்மா இப்போ பெட்ரோல் பங்க் வேலைக்குப் போறாங்க. வெட் கம் பார்க்காம உழைக்கிறோம், நல்லா படிக்கிறோம். எப்படியும் ஜெயிச் சுடுவோம்னு நம்பிக் கையில, ஒவ்வொரு பாடமா பரீட்சை எழுதி முடிச்சு, இப் போ தம்பி பத்தாம் வகுப்பு முடிச்சுட் டான்.நைட் ஷிப்ட் முடிச்சுட்டு அம்மா கொஞ்ச நேரம் கடையைப் பார்த்துப் பாங்க. நானும், தம்பியும், மாலை 6.30 மணியிலிருந்து கடையில வியாபாரம் பார்ப்போம். பிளாட்பாரக் கடையில தான் எங்க படிப்பு, வீட்டுப் பாடம் எல்லாம். குடும்பச் செலவு, வீட்டு வாடகை மற் றும் இதர தேவைகளுக்கு, இப்படி உழைச்சாதான் முடியும்.எங்க நிலைமை யை பார்த்த கல்லூரி நிர்வாகம், கட்டணம் செலுத்த வேண் டாம்னு சொல்லிட் டாங்க. எப்படியும் ஒரு நாள், நாங்கள் இழந்த வாழ்வை மீட்டுவிடுவோம்ங் கற நம்பிக்கை எங்ககிட்ட இருக்கு.

No comments:

Post a Comment