Thursday, March 4, 2010

ஆஸி.,யில் இந்திய குழந்தை கடத்தி கொலை




மெல்போர்ன்: இந்தியாவில் இருந்து ஆஸி.,க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஒரு குடும்பத்தில் இருந்து குழந்தை கடத்தி கொலை செய்யப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் இன ரீதியான தாக்குதலா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹரீப்ரீத்கவ் என்பவர் தனது குடும்பத்தினருடன் ஆஸி., சென்றிருந்தார்.


இவர் லாலர் என்ற பகுதியில் தங்கி இருந்தார். இங்கு இவரது 3 வயது சிறுவன் குஸ்வந்த்சிங் காணாமல் போய் விட்டான் .இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். சில மணி நேரத்தில் மெல்போர்ன் விமான நிலையத்தில் இருந்து 30 கி. மீட்டர் தொலைவில் பிணமாக கிடந்ததை போலீசார் கண்டு பிடித்தனர்.


சிறுவன் உடல் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனையில் உடலில் எவ்வித காயமும் இல்லை . இதனால் இவன் எப்படி கொலை செய்யப்பட்டான் என்பது இன்னும் மர்மமாக உள்ளது. இருப்பினும் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து , தொடர்ந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த குழந்தை கொலை தொடர்பாக இந்த காரணம் குறித்து ஆராய்ந்து கொண்டிருக்க முடியாது. இது மிக் முக்கியமான விஷயமாக நாங்கள் எடுத்து விசாரித்து வருகிறோம் என்றார் விக்டோரிய மாகாண அதிபர் ஜான்பிரம்பி .


ஆஸி.,பிரதமர் உறுதி : கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என ஆஸி.,பிரதமர் கெவின் ரூட் தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலிய பிரதமர், வெளியுறவு துறை அமைச்சர் இந்தியாவிற்கு வந்து ஆஸி.,யில் இந்தியர்களின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் அளிக்கப்படும் என கூறிய சில நாட்களில் இந்திய குழந்தை கொல்லப்பட்டிருப்பது இந்தியர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

No comments:

Post a Comment