Monday, February 22, 2010

Kathal kavithai

பெருங்கோடையடித்து
மரங்களெல்லாம் செத்துதிர்ந்து
ஒற்றையடிப்பாதைகளும்
தடங்களேதுமின்றி மறைந்து
வெடித்திட்ட நிலத்திலனைப்போல
வாழ்விலெக் கோடை அடித்தாலும்
சித்தம் பிசகி நான்
எந்தப் பிணியில் காய்ந்தாலும்
உன்னை மட்டுமே
காதலித்துக் கொண்டிருப்பேன்
உலகிலேயே அதிகமாக
ஓருயிரின் மேல் காதலை
கொண்டிருக்கும் நபரினை
மின்னலுஷ்ணத் தீயில் வாட்டி
வதைகள் செய்யும்
தண்டனை கொடுப்போமென
சட்டங்களியற்றிடுவரெனில்
எனக்கே முதல்தண்டனையென
எழுதப்பட்டுமிருக்குமதில்
அப்பொழுதுமுன்னையே
காதலித்துக் கொண்டேயிறப்பேன்

No comments:

Post a Comment