Saturday, February 20, 2010

Kathal kavithai

காதல் கவிதைகள்!!!

பரீட்சை
என்னப் பேசுவதென்று பல முறை
சொல்லிப் பார்த்து விட்டுதானே
வந்தேன், உன்னைப் பார்த்ததும்
அனைத்துமே மறந்து போனது,
காதலெனும் தேர்வில்
வினாவாய் நீ, விடை தேடும்
மாணவனாய் நான் !!!

இயற்பெயர்
இயற்பெயர்கள் அதிகமாய் மாறிப்
போவது காதலில் தானாம் ஒரு
கணக்கெடுப்பு சொல்கிறது,
அம்முவாய் நீ, தங்கமாய் நான்!
நான்கெழுத்து கவிதை
மூன்றெழுத்து கவிதை சொல்
பார்க்கலாம் என்றேன்,
"சீ போடா" என்றாய்
பரவாயில்லையே உனக்கும் கவிதை
வருகிறதே என்றேன்,
மெல்ல ரௌத்ரம் பழகினாய்
சட்டென்று இதழ் பிரதேசத்தை
நான்கெழுத்து கவிதை பாடி நாடு
கடத்தினாய், முடிந்து விட்டது
இனி கவிதையும் இல்லை, கட்டுரையும் இல்லை!!!
வேடங்கள்
கடனட்டை வினியோகஸ்தனாய்
வீட்டு எரிபொருள் விற்பனையாளனாய்
எனக்கு தான் எத்தனை வேடங்கள்,
உன் வீட்டாரை ஏமாற்றவும்
உன்னை சமாதானப்படுத்தவும்!

கடவுளின் கோபம்
கடவுள் என் மீது ஏகக் கோபத்தில்
இருக்கிறார்,
எப்பொழுது என் கோவிலுக்கு வந்தாலும்
என்னை நீ கவனிப்பதே இல்லை என்று,
அதே கோவிலுக்குதான் என் தேவதையும்
வருகிறாள்,
தேவதையா கடவுளா போட்டியில்
எப்போதுமே என் தேவதை தான் ஜெயிக்கிறாள்!

No comments:

Post a Comment