Monday, February 22, 2010

Kathal kavithai

நாளின் இறுதி வெளிச்சங்களை
கீற்றுகளாக வழியவிட்ட
சூரியனுக்கு உன்
நீள்கூந்தலை
அலைய விட்டுக் காட்டுகிறாய்
சிவப்பு, செம்மஞ்சளென
எழில் வண்ணம் காட்டி
காற்றிலசையும்
ஒவ்வொரு முடியையும் கண்டு
விட்டுப் போகும் மனமற்று
தேங்கி நின்ற சூரியனை
பொறாமையில் சிவந்து
கடலுக்குள் தள்ளிவிடுகிறது
அந்திவானம்

உன்னிடம் காட்டவென
அலைகள் தள்ளிவிட்டுப்போன
ஏதோவொன்றைக் குனிந்துபார்த்து
கூடியிருந்த குழந்தைகளை அழைத்து
குதூகலமாகக் காட்டுகிறாய்
நானும் குழந்தையென அடம்பிடித்து
உன்னிடமே ஓடிவருகிறது என் மனது
தூக்கி வைத்துக்கொண்டால்தான் என்ன?

No comments:

Post a Comment