Wednesday, February 17, 2010

அன்​னிய முத​லீடு அதி​க​ரிப்​புக்கு இந்​திய இளை​ஞர்​க​ளின் அறிவே கார​ணம்

ஒசூர்,​​ பிப்.16: இந்​திய இளை​ஞர்​கள் அறிவு ஜீவி​க​ளா​கத் திகழ்​வதே அன்​னிய முத​லீடு அதி​க​ரிப்​புக்கு முக்​கிய கார​ண​மாக உள்​ளது என மத்​திய நிதித்​துறை இணை அமைச்​சர் எஸ்.எஸ்.​ பழ​னி​மா​ணிக்​கம் கூறி​னார்.​ஒசூ​ரில் புதிய வரு​மா​ன​வரி அலு​வ​ல​கத் திறப்பு விழா செவ்​வாய்க்​கி​ழமை நடை​பெற்​றது.​ அதைத் திறந்து வைத்து அவர் பேசி​யது:​சீனா ​வில்​தான் அதிக அள​வில் அன்​னிய முத​லீடு குவி​வ​தா​கக் கூறப்​ப​டு​கி​றது.​ ஆனால் அங்கு முத​லீட்​டுக்கு உத்​த​ர​வா​தம் இல்லை.​ ஆனால் இந்​தி​யா​வில் உத்​த​ர​வா​தம் உள்​ளது.​ கார​ணம் இங்கு அறி​வும்,​​ திற​மை​யும் கொண்ட 60 சத​வீத இளை​ஞர்​கள் உள்​ள​னர்.​இந்​தி​யா​வில் 2007-08ல் ரூ.2,78,450 கோடி வரு​மா​ன​வரி வசூல் செய்​யப்​பட்​டது.​ 2008-09ல் ரூ.2,59,456 கோடி​யும்,​​ 2009-10ல் ஜன​வரி வரை ரூ.2,63,691 கோடி​யும் வரி வசூல் செய்​யப்​பட்​டுள்​ளது.​ கடந்த காலத்தை ஒப்​பி​டு​கை​யில் இது 6.59 சத​வீ​தம் கூடு​த​லா​கும்.​தொழில் வளர்ச்சி அதி​க​ரித்​த​த​னால் வரு​மான வரி​யும் உயர்ந்​துள்​ளது.​ இத​னால் தேசிய நெடுஞ்​சா​லை​கள் அமைப்​பது உள்​ளிட்ட வளர்ச்​சித் திட்​டப் பணி​களை அரசு எளி​தில் மேற்​கொள்ள முடி​கி​றது என்​றார் அவர்.​இ.ஜி.சுக​வ​ னம் எம்பி பேசி​யது:​ ஜோலார்ப்​பேட்​டையி​லி​ருந்து திருப்​பத்​தூர்,​​ பர்​கூர்,​​ சூள​கிரி வழி​யாக ஒசூ​ருக்கு ரயில் பாதை அமைக்​கும் பணிக்கு சர்வே நடந்து முடிந்​து​விட்​டது.​ இந்த ரயில் பாதை அமைக்​கும் பணியை விரைந்து துவங்க வேண்​டும் என மத்​திய நிதித் துறை இணை அமைச்​சர் எஸ்.எஸ்.பழ​னி​மா​ணிக்​கம் தலை​மை​யில் திமுக எம்​பி​கள் நேர​டி​யா​கச் சென்று மத்​திய ரயில்வே அமைச்​சர் மம்தா பானர்​ஜி​யி​டம் கோரிக்கை மனு அளித்​துள்​ளோம்.​ விரை​வில் இந்​தத் திட்​டத்​துக்​கான அறி​விப்பை மத்​திய ரயில்​வேத் துறை வெளி​யி​டும் என்​றார்.​ ​விழா​வில் எம்​எல்ஏ செங்​குட்​டு​வன்,​​ ஒசூர் நக​ர​மன்​றத் தலை​வர் எஸ்.ஏ.சத்யா,​​ மத்​திய வரி விதிப்பு ஆணைய தென் மண்​டல உறுப்​பி​னர் பிர​காஷ் சந்​திரா,​​ சென்னை முதன்மை வரு​மா​ன​வரி ஆணை​யர் பிரே​மா​மா​லினி வாசன்,​​ திருச்சி வரு​மா​ன​வரி ஆணை​யர் சாரங்கி உள்​ளிட்​ட​வர்​கள் கலந்து கொண்​ட​னர்.​

No comments:

Post a Comment